ஞாயிறு, 11 ஜனவரி, 2009

அற்புதங்கள் Vs விசுவாசிகள்

நம்மை உற்சாகப்படுத்துகிற ஒரு தேவனை நாம் சேவிக்கிறோம். தமது பிள்ளைகளுக்காகசர்வ வல்லமையுள்ள தேவன் கொண்டிருக்கிற திட்டங்கள் உண்மையிலேயே அதிக ஊக்கமளிப்பவை ஆகும்.

நான் இந்த செய்திமடலை மிகவும் கனத்த இருதயத்துடன் எழுதுகிறேன்.

இதற்கு காரணம் என்னவெனில், தேவன் தமக்கு பிரியமானவர்கள் அற்புதங்கள் நிறைந்த இரு ஒரு வாழ்க்கை வாழ்க்கையை வாழ விரும்புகிறவேளையில், அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக அனேக தேவ பிள்ளைகள் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு இதுதான் தேவன் தேவன் விரும்புகிற வாழ்க்கை என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை நீங்கள் அவ்வாறு காய்ந்து போன ரொட்டித்துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறவர்களில் ஒருவராக இருப்பீர்களெனில், மாற்றப்பட முடியாத சத்தியத்தை நீங்கள் கண்டுகொள்ளும்படி தேவன் உங்கள் கண்களை திறக்கும்படி திறந்தமனதுடன் தேவனிடம் நீங்கள் கேட்பது நலமாயிருக்கும்.

அற்புதங்களையும் தேவனையும் பிரிக்கமுடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?
தேவனுடைய வார்த்தையையும் அற்புதங்களும் பிரிக்கப்படமுடியாதாவையாகும்.

வேதாகமம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அற்புதங்களின் புத்தமாக உள்ளது.

ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்ற அற்புத செயலுடன் ஆதியாகமம்.1:1ல் வேதாகமம் துவங்குகிறது.

அவர் எவ்வாறு சிருஷ்டித்தார் அவர் தமது வார்த்தையினால் சிருஷ்டித்தார். வேறுவிதமாகக் கூறுவோமானால், இந்த உலகம் உருவாக்கப்படுவதற்கு ஒரு அற்புதம் நடந்தது.

வேதாகமம் ஒரு அற்புத செயலுடன் நிறைவு பெறுகிறது.வெளிப்படுத்தல்21:1ல் நாம் புதிய வானம் புதிய பூமியை காண்கிறோம்.

இயேசு ஒரு மனிதனாக இந்த உலகிற்குள் வந்த போது, அவர் சென்றவிடமெங்கும் அற்புதங்களை செய்து தேவனின் சித்தம் என்ன என்பதை செய்துகாட்டினார்.

சிலுவையில் கூட தேவன் ஒரு பலத்த அற்புதத்தை செய்தார். வெளிப்பிரகாரமாக இயேசு எல்லாராலும் கைவிடப்பட்டு, தேவன் அற்புதம் எதுவும் செய்யவில்லை என்பது போல தோன்றினது.

ஆனால் நாம் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு மூலமாக சிலுவையின் இரகசியத்தை அறிந்துகொள்ளும்போது ஒரு மாபெரும் அற்புதம் சிலுவையில் நடந்தது என்பதௌ நாம் கண்டுகொள்கிறோம்.

அந்த சிலுவையிலேதான் இயேசு சாத்தானின் அதிகாரத்திற்கும் அவனுடைய கிரியைகளுக்கும் ஒரு முடிவுகட்டி மனிதன் இழந்துபோன ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார்.

ஆகவே அருமையான தேவ பிள்ளையே, உற்சாகமாயிருங்கள். நீங்கள் இயற்கைக்கப்பாற்பட்ட வெற்றிபெறுகிற அற்புதங்கள் நிரம்பிவழிகிற ஒரு வாழ்க்கையை வாழப் பிறந்தவர்கள்.

தேவனுடைய வல்லமை உங்களுக்குள்ளே கிரியை செய்கிறது. பரிசுத்த ஆவியானவரின் உயிர்த்தழுதலின் வல்லமை உங்களுக்குள் இருக்கிறது, அது உங்கள் சரீரங்களை உயிர்ப்பிக்கிறது.

நீங்கள் இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தை பயன்படுத்த உஇமைபெற்றுள்ளீர்கள். நீங்கள் தோல்வியுறமுடியாது. நீங்கள் நினைக்கிறபிரகாரமாக, ஒரு பலவீனமான கைவிடப்பாட நபராக நீங்கள் இருக்க முடியாது.

நீங்கள் ஆளப்பிறந்தவர்கள். உண்மையில், நீங்கள் இந்த் சத்தியத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கேவனையும் அற்புதங்களையும் எப்படி பிரிக்கமுடியாதோ அதுபோல உங்களையும் அற்புதங்களியும் பிரிக்க முடியாது.

இன்று அனேக தேவபிள்ளைகள் ஏன் சாதாரணமான, பலவீனமான, மிகவும்வருந்தத்தக்க ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள் எனில், அவர்கள் துன்மார்க்கரின் யோசனைக்கும் ஆலோசனைகும் அவர்கள் இடம் கொடுத்ததினாலேயே. சபையும் தேவபிள்ளைகளும் அடிமைத்தனத்தில் வைப்பதே பிசாசின் இலக்கு ஆகும்.

ஆகவே எழும்புங்கள். நீங்கள் யார் என்பதையும் உங்கள் மகிமையான அழைப்பையும் புரிந்துகொள்ளுங்கள். வஞ்சகமான போதனைகளும் வன்சகமான சிந்தனைகளும் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்.

உன்மையாகவே கிறிஸ்து உங்களுக்குள் வசித்தால், அவரின் சர்வவல்லமியும் உங்களுக்குள்ளாக இருக்கும். மேலும் கிறிஸ்துவும் அவருடைய வலமையும் உங்களில் இருக்குமெனில், நீங்கள் ஒருபோதும் தோற்க முடியாது.

கீழ்கண்டவற்றை நினைவில் கொள்ளுங்கள்.

வியாதி, தோல்வி, குழப்பம், பலவீனம், மனழுத்தம், கவலை, குறைவு, போராட்டம் ஆகியவை உங்கள் வாழ்க்கையில் உங்களை விட்டு கடந்துபோனவை ஆகும்.

நீங்கள் ஒரு புது சிருஷ்டி. நீங்கள் வெற்றிபெற பிறந்தவர்கள். நீங்கள் ஒரு வெற்றியாளர். ஒரு இயற்கைக்கப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து தேவனை மகிமைப்படுத்துங்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

கருத்துகள் இல்லை: