செவ்வாய், 6 ஜனவரி, 2009

முஸ்லீம்களின் - தந்திரம்

இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு டெக்னிக் என்னவென்றால், நாம் ஒன்றைச் சொன்னால், அவர்கள் வேறு ஒரு பதில் சொல்வார்கள்.

உதாரணத்திற்கு, ஒரு மலிகை சாமான் கடைக்குச் சென்று, கோல்கேட் பேஸ்ட் இருக்கின்றதா என்று கேட்டால், அந்த கடையில் அப்போதைக்கு கோல்கேட் இல்லையானால், அந்த கடைக்காரார் புத்திசாலியாக இருந்தால், "க்ளோசப் பேஸ்ட்" இருக்கிறது என்பார். ஆனால் கேட்டது கோல்கேட், அவர் சொல்வது க்ளோசப் இருப்பதாக. இப்படி இருக்கும் இவர்களின் வாதம்.


நான் பதித்த கட்டுரை "முகமது எப்படி இஸ்லாமை பரப்பினார்?" என்பதைப் பற்றியது. இவர்கள் அதைப்பற்றி மூச்சு விடாமல், இஸ்லாம் எப்படி இப்போது பரவுகிறது என்று சொல்கிறார்கள். இதைத் தான் நான் "கோல்கெட், க்ளோசட் டெக்னிக் – Colgate Close-up Technique" என்பேன்.


முஸ்லீம்களின் கோல்கேட் க்ளோசப் டெக்னிக் (Colgate and Close-Up Technique)

முன்னுரை: இஸ்லாம் இணைய தளம் "கிருஸ்தவமே பொய் இதில் உண்மையடியான் எங்கே?" என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. இந்த கட்டுரையில் பிரயோஜனமுள்ள எந்த விவரத்தையும் அவர்கள் கூறவில்லை, முஸ்லீம்களுக்கே உரித்தான விதத்தில் பல வசை மொழிகளை எழுதியிருந்தார்கள்.

அவர்கள் எழுதியது முக்கியமாக உண்மையடியான் என்பவருக்குத் தான், ஆனால், நான் எழுதிய இரண்டு கட்டுரைகளை அவர்கள் குறிப்பிட்டதால், இதற்கு என் பதிலைத் தருகிறேன்.

முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை: நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன், யாராக இருந்தாலும் நாவை காக்கவேண்டுமென்று. இஸ்லாமுக்கு மறுப்புக்கள் எழுதுகிறார்கள் என்ற காரணத்தாலும், இஸ்லாமின் உணமை முகம், முகமதுவின் உண்மை முகம் தமிழ் மக்களுக்கு தெரிய வந்துவிடுகிறதே என்ற காரணத்தாலும், எங்கள் மேல் வசை மொழிகளை கூறி, உங்கள் இஸ்லாமுக்கு கெட்டப்பெயரை(இஸ்லாமுக்கு நல்லபெயரும் உள்ளதா?) கொண்டுவராதீர்கள்.

நீங்கள் சொன்ன வசைமொழிகள் உங்களுக்கு திருப்பிச் சொல்ல எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது, இருந்தாலும் ஏன் நாங்கள் சொல்வதில்லை தெரியுமா?

"உன்னைப்போல மற்றவனையும் நேசி்" என்றுச் சொன்ன இயேசுவை நாங்கள் பின்பற்றுவதால். ஆனால், புறாவைப் போல கபடற்றவர்களாக இருங்கள் என்றுச் சொன்ன அதே இயேசு தான், பாம்பைப் போல வினாவுள்ளவர்களாக இருங்கள் என்றார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதற்கு கிறிஸ்தவர்கள் ஒன்றும் தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மைகள் அல்ல.‌


இஸ்லாம் இணைய பேரவை எழுதியது

இவ்வரிசையில் இறைவனால் பாதுகாக்கப்பட்ட இறுதி வேதமாம் குர்ஆனையும், இறுதி இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களையும் நிராகரித்து, இறைமார்க்கமாம் இஸ்லாத்தின் மீது புழுதிவாரி இறைக்கும் திருப்பணியை(?) செய்வதற்கு சமீபநாட்களாக உண்மையடியான் என்ற இழிபிறவி கிளம்பியுள்ளார்.

ஷைத்தானின் நேரடி ஏஜென்டான இவரையும், இவரது கூட்டாளிகளையும் நரகத்திலிருந்து மீட்டெடுக்கும் கடைசி முயற்சியாக நமது இஸ்லாமிய இணையப் பேரவை இவரது சொத்தை வாதங்களிலுள்ள அபத்தங்களையும், பொய்களையும், அவரது அறியாமையையும் பல ஆக்கங்கள் மூலம் தெளிவாக விளக்கியது.

சுயநினைவோடும், இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அவர் இருந்திருந்தால் நமது விளக்கங்கள் அவருக்கு பயனளித்திருக்கும். ஆனால் அவரது நோக்கம் அதுவல்லவே!.

Source: http://www.tmpolitics.net/iip/Articles/ChristianityIsABigLie.htm

இஸ்லாமுக்கு பதில் எழுதுகிறோம் என்பதாலும், அவர்கள் சொல்வதை(பொய்களை) அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு ஆதாரபூர்வமான பதில்களைத் தருவதால், இவர்கள் கொடுக்கும் பட்டங்கள்:

• இழிபிறவி

• ஷைத்தானின் நேரடி ஏஜென்ட்

• அநியாயக்காரர்கள்

• மனநோயாளியாக

(நாங்க ஷைத்தானின் நேரடி ஏஜெண்ட் என்றுச் சொன்னால், நீங்கள் ஷைத்தானின் மறைமுக ஏஜண்டா?)

இப்படி நீங்க எங்களை திட்டுவீங்கள் என்று இயேசு ஏற்கனவே சொல்லியுள்ளார்.

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; (மத்தேயு 5:11)

நீங்கள் எங்களை பாக்கியவான்களாக மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள், எனவே, நாங்கள் சந்தோஷப்பட்டு களிகூறுகிறோம்.


இறைவனால் பாதுகாக்கப்பட்ட வேதம் என்றுச் சொல்லி எத்தனை நாட்கள் தான் வண்டி ஓட்டுவீர்கள் சொல்லுங்கள். யார் யாருக்கு எப்படி குர்‍ஆனை திருத்த முடியுமோ அப்படியெல்லாம் திருத்தி வைத்துக்கொண்டு, இதுவும் அங்கீகரிக்கப்பட்ட குர்‍ஆனை ஓதும் முறை என்றுச் சொல்லி பல அரபிக் குர்‍ஆன்கள் இருக்கிறதே. இன்னுமா, பாடிய பல்லவியையே பாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.


இதைப் பற்றி கட்டுரைகளை இங்கு படிக்கலாம்.

குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?)

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?!)

குர்‍ஆனில் உள்ள எழுத்துப்பிழைகள் (Scribal Errors in the Quran)

பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு)

ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌

விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?

இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்


இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இவரது பித்தலாட்டங்கள் எல்லை மீறவே, நமது பேரவை இவருக்கு பகிரங்க விவாத அரைகூவலை விடுத்தது நமது விவாத அழைப்பை கண்டு பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி ஒளிந்த இந்த பொய்யடியான், 'எனக்கு அறிவில்லை என்னை விவாதத்திற்கெல்லாம் அழைக்காதீர்கள்' என்று நம்மிடம் மண்டியிட்டு மடி பிச்சை கேட்டதையும் கண்டு இவ்வுலகமே சிரித்தது

இதைத்தான் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனங்களில் இவ்வாறு தெளிவு படுத்துகிறான்.

பித்தலாட்டத்தைப் பற்றி தமிழ் முஸ்லீம் அறிஞர்களே, நீங்கள் பேசாதீர்கள். உங்கள் பித்தலாட்டங்கள் பற்றி எல்லாருக்கும் தெரியும். நான் ஏற்கனவே சொன்னேன், நேரடி விவாதம் வேண்டாம், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள் என்று.

இதற்கு மூச்சு விடாமல் இருந்துவிட்டு, இப்போது குய்யோ முறையோ என்று கத்தினால் எப்படி? எங்களின் கட்டுரைகள் எந்த அளவிற்கு உங்களை பாதித்து இருந்தால், தமிழ் முஸ்லீம்களிடம் நீங்கள் பிச்சை எடுக்கிறீர்கள்.

"அய்யா கிறிஸ்தவர்களின் கட்டுரைகளை படிக்காதீர்கள் என்றுச் சொல்லி, எங்கள் தொடுப்பையும் தர பயப்படுகிறீர்கள். இது பிச்சை இல்லையா?".

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், எங்கள் கட்டுரைகளுக்கு பதில் சொல்வார்களாம் இவர்கள், ஆனால், எங்கள் தொடுப்பை தரமாட்டார்களாம்? அப்படியானால், உங்கள் கட்டுரைகளை படிக்கும் முஸ்லீம்களை அறியாமையிலேயே வைத்துக்கொள்ள ஆசைப்ப‌டுகிறீர்கள்? இது கேவலமாக இல்லை உங்களுக்கு?

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த அநியாயக்காரர்கள் வெறுத்தபோதிலும் இஸ்லாம் என்ற இந்த பூரண ஜோதியை வல்ல அல்லாஹ் சுடர்விடும் பிரசாகமாக மென்மேலும் மின்னச்செய்து கொண்டே இருக்கிறான்-அல்ஹம்துலில்லாஹ் ஷைத்தானின் நேரடி ஏஜென்டான இப்பொய்யடியான் இஸ்லாத்தின் மீது சமீபத்தில் 3 பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். அவைகளாவன:

). இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதம். இதற்கு நபி (ஸல்) அவர்களின் கடிதங்களே சாட்சி.

2). குர்ஆன் ஒன்றல்ல, பல குர்ஆன்கள் உள்ளன. ஓவ்வொன்றும் பல ஓசைகளையும், எழுத்துக்களையும் கொண்டவை. எனவே ஒரே கருத்தில் அமைந்த குர்ஆன் என்று இல்லை.

3).குர்ஆனும், ஹதீஸூம் ஏசுவை கடவுள் என்று சொல்கிறது.



மேலே உள்ள கட்டுரைகளில் முதல் இரண்டு கட்டுரைகள் ஈஸா குர்‍ஆனின் கட்டுரைகளாகும். முன்றாவது கட்டுரை உண்மையடியான் பதித்தது, அந்த கட்டுரையைப் பற்றி நான் தனியாக கட்டுரைகள் எழுதும் போது, விவரிப்பேன். இப்போதைக்கு முதல் இரண்டு கட்டுரைகள் பற்றி சில விவரங்களைச் சொல்லவேண்டியுள்ளது.


முகமது வாளால் இஸ்லாமை பரப்பியது பொய்யா? அவர் எழுதிய கட்டுரைகளை சாதாரண சராசரி முஸ்லீமிடம் காட்டி படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் என்றுச் சொல்லும் தைரியம் இஸ்லாமியர்களுக்கு உண்டா?


சாதாரண சராசரி முஸ்லீமிடம் "அந்த கடிதங்கள் மூலமாக நீங்கள் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்வது என்ன" என்று உங்களால் கேட்கமுடியுமா?


என்ன இஸ்லாம் இணைய பேரவையே, படிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதால் எதையும் எழுதுவீர்களோ?


இதோ இஸ்லாமை வாளால் பரப்பினார் என்பதைப் பற்றிய என் கட்டுரைகள்:


முகமதுவின் கடிதங்களை படித்து எந்த கட்டுரையில், முகமது இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கமாக காட்டியுள்ளார் என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

• ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம்.

• இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)

• ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும்

• அபூமுஹை and மத்தேயு 10:14 - அடாவடி செய்யாமல் மார்க்கம் பரப்புங்கள்

• இஸ்லாம் மற்றும் அமைதி (Islam and Peace )


இரண்டாவதாக, குர்‍ஆனை அல்லா பாதுகாத்தார் என்று மேடையில் முழங்குகிறீர்கள், எழுதும் போது ஒரு பக்கத்துக்கு தவறாமல் இதைப் பற்றி பதிப்பீர்கள், ஆனால், அதில் எத்தனை முரண்பாடுகள், பிழைகள், இலக்கண பிழைகள், தாறுமாறுகள் என்று உங்களுக்கு நான் சொல்லித் தெரியத்தேவையில்லை. இதைப் பற்றி பதியப்பட்ட ஒரு சில கட்டுரைகள்:


• குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - ஆசிரியர்: Khaled

• பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

• ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?! )

• குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் Scribal errors in the Qur'an

• ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை: 7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது)

• ஈஸா குர்‍ஆன் And அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?



இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

என்ன சிரிப்பு வருகிறதா? மேற்கண்ட இவரது பதிவை படிக்கும் எவரும், இவர் ஒன்று மனநோயாளியாக இருக்கவேண்டும் அல்லது டாஸ்மார்க் கடையில் அமர்ந்து சரக்கு அடித்து விட்டு இப்படி எழுதியிருக்கவேண்டும் என்ற முடிவிற்குத்தான் வருவார்கள்.

இஸ்லாத்தைப் பற்றியோ, கிருஸ்தவம் உட்பட பிறமதங்களைப் பற்றியோ சற்றும் அறிவில்லாதவர் என்பதை தனது எழுத்துக்களின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்துபவர்தான் இந்த உண்மையடியான்.

திருமறை குர்ஆனின் மற்றும் ஸஹீஹூல் புஹாரியின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய ஆராய்ச்சியாளராக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்.

அருமையான இஸ்லாமிய இணைய பேரவையே, என் கட்டுரைகளைக் கண்டால் சிரிப்பு வராது, உங்கள் கட்டுரைகளைக் கண்டால் தான் மக்கள் சிரிப்பார்கள். உங்கள் குர்‍ஆனின் வசனங்களை படித்தால் தான் சிரிப்பு வரும்.


அய்யோ எங்களுக்கு ஏது இஸ்லாம் பற்றிய அறிவு? உங்களுக்குத் தான் இஸ்லாம் பற்றி நன்றாகத் தெரியும், ஏன் கிறிஸ்தவம் பற்றியும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்? நீங்கள் உலக மதங்களில் பட்டம் வாங்கியவர்கள் தானே? உங்களுக்குத் தான் அறிவு அதிகம்.

சொந்த இறைவேதத்தையே தமிழில் படிக்க முடியாத இஸ்லாமிய மக்கள் கோடானு கோடி இருக்கிறார்கள், தாய் மொழியில் படிக்கவும் உற்சாகப்படுத்த ஆட்கள் இல்லை,

இந்த இலட்சணத்தில் வேறு மத புத்தகங்கள் படித்து, இவர்களுக்குத் தான் அறிவு உள்ளது போல, பல மத ஆய்வு கட்டுரைகள் என்ற வரட்டு தலைப்புக்கள் இட்டு கட்டுரைகள் வேறு. இதை படிப்பதற்கென்றே சிலர் இருப்பது தான் ஆச்சரியம்.


எச்சரிக்கை: வாதம் புரிவதாக இருந்தால், வசன ஆதாரம் வைத்து, அறிவை பயன்படுத்தி ஏதாவது எழுதவேண்டும், அதை விட்டு விட்டு, சொந்தமாக இப்படி எழுதினால், பதில்கள் இப்படித்தான் இருக்கும்.

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று புனைவதற்கு அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் பல பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டிக் குவித்து பொய்ப்பிரச்சாரம் செய்து பார்த்தது. ஆனால் அதில் கடும் தோல்வி கண்டு, இன்று அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் மார்க்கம் இஸ்லாம் என்ற நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது.

டாஸ்மார்க் பொய்யடியானைப் பார்த்து நாம் கேட்கிறோம், அமெரிக்கா என்ற வல்லரசாலேயே இப்பொய்பிரச்சாரத்தில் வெற்றி காண முடியவில்லையே, இந்நிலையில் 4 வலைப்பூக்களை வைத்துக்கொண்டு இப்பொய் பிரச்சாரத்தில் இவரால் வெற்றி பெறஇயலுமா?

இவர் நிற்கமுடியுமா?. இவ்வாறு என்னதான் கூப்பாடு போட்டாலும் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை இவரால் நிரூபிக்கத்தான் முடியுமா?.

உண்மையடியானிடம் எதற்கு என்னிடம் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை இழுப்பதே உங்களுக்கு பிழைப்பாக ஆகிவிட்டது, போகட்டும்.

சௌதியிலிருந்து பல கோடி பணத்தை உலகத்தின் இதர நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு செலவழிக்கிறீர்களே? இது தெரியாதா என்ன? இதில் வேறு இஸ்லாம் வேகமாக பரவி வரும் மதமாம், இந்த பொய்யைச் சொல்லி எத்தனை நாட்கள் கழிக்கப்போகிறீர்கள்?

ஒரு காகிதம் எடுத்துக்கொண்டு, இஸ்லாம் வேகமாக பரவும் மதம் என்றுச் சொல்லி, தினமும் ஆயிரம் முறை எழுதுங்கள், அப்போது கூட நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்.


முதலில் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை காப்பாற்ற முயற்சி எடுங்கள்.


இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லலாம் என்றுச் சொல்லி சட்டம் இயற்றி இஸ்லாமை காப்பாற்றுவதல்ல? இது கேவலம்.

இஸ்லாமிய நாடுகளில் முஸ்லீம்களிடையே இஸ்லாம் தோல்வி அடைந்துக்கொண்டு இருக்கிறது என்பதற்கு சரியான சான்று, இப்படிப்பட்ட கொல்லும் ஷரியா சட்டங்கள் என்பதை நான் சொல்லித் தெரியத் தேவையில்லை.


இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களைக் கொன்று இஸ்லாமை வளர்க்கவேண்டும் என்ற கீழ் தரமான நிலைக்கு இஸ்லாம் வளர்ந்துள்ளது. இது தான் உண்மை.

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இன்று உலக நாடுகளில் அதிக முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கொண்ட நாடு இந்தோனேஷியா. இந்தோனேஷியாவிற்கு எந்த முஸ்லிம் படைத்தளபதி எந்த வாளைத்தூக்கிக் கொண்டு சென்றார்?


மலேசியாவில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனரே அங்கு யார் படையெடுத்தார்?.


சரி இன்று அமெரிக்காவிலும், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளிலும் இஸ்லாம் வேகமாகப் பரவிவருகிறதே இங்கு எந்த இஸ்லாமியப் படை சென்றுள்ளது? எந்த நபி அந்நாட்டின் தலைவர்களுக்குக் கடிதம் எழுதினார்?


இப்படி எல்லாம் பல கேள்விகளை நாம் அடிக்கிக்கொண்டே போகமுடியும். இதுபோன்ற கேள்விகளை சுயசிந்தனையும், பகுத்தறிவுமுள்ள மனிதர்களிடம் கேட்கலாம் ஆனால் டாஸ்மார்க் பொய்யடியான் இவ்வாறு கேட்பதில் பயன் ஏதுமுண்டா?



இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு டெக்னிக் என்னவென்றால், நாம் ஒன்றைச் சொன்னால், அவர்கள் வேறு ஒரு பதில் சொல்வார்கள்.

உதாரணத்திற்கு, ஒரு மலிகை சாமான் கடைக்குச் சென்று, கோல்கேட் பேஸ்ட் இருக்கின்றதா என்று கேட்டால், அந்த கடையில் அப்போதைக்கு கோல்கேட் இல்லையானால், அந்த கடைக்காரார் புத்திசாலியாக இருந்தால், "க்ளோசப் பேஸ்ட்" இருக்கிறது என்பார். ஆனால் கேட்டது கோல்கேட், அவர் சொல்வது க்ளோசப் இருப்பதாக. இப்படி இருக்கும் இவர்களின் வாதம்.


நான் பதித்த கட்டுரை "முகமது எப்படி இஸ்லாமை பரப்பினார்?" என்பதைப் பற்றியது. இவர்கள் அதைப்பற்றி மூச்சு விடாமல், இஸ்லாம் எப்படி இப்போது பரவுகிறது என்று சொல்கிறார்கள். இதைத் தான் நான் "கோல்கெட், க்ளோசட் டெக்னிக் – Colgate Close-up Technique" என்பேன்.


இஸ்லாமிய இணைய பேரவை அண்ணன்களா? முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார் என்று முதலில் விளக்குங்கள், அவர் எழுதிய கடிதங்களில் அமைதியை கண்டுபிடியுங்கள். அதை விட்டுவிட்டு, இந்தோனேஷியாவில் எப்படி பரவியது, இன்று மேற்கத்திய நாடுகளில் எப்படி பரவுகிறது என்றுச் சொல்லி, கோல்கேட் கேட்பவருக்கு, க்ளோசப்பை விற்க முயற்சி எடுக்காதீர்கள்.


ஒன்று செய்யுங்கள், உங்கள் நபி அனுப்பிய கடிதங்கள் போல, எல்லா உலக நாடுகளுக்கும் கடிதங்கள் எழுதுங்கள், இஸ்லாமை ஏற்றுக்கொள், மறுத்தால் சண்டை தான் என்று எழுதுங்கள். நீங்கள் தான் உங்கள் நபியின் அடிச்சுவடிகளில் நடப்பவர்கள் தானே. இப்படி எழுதிப்பாருங்கள், பிறகு தெரியும்,

மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமை எப்படித்தான் பரப்ப வேண்டும் என்று. மேற்கத்திய நாடுகளுக்கும் வேண்டாம், சைனாவிற்கும், ஜப்பானுக்கும் இப்படிப்பட்ட கடிதம் எழுதி அனுப்பும் படி இஸ்லாமிய நாடுகளை கேட்டுக்கொள்ளுங்கள், பிறகு பாருங்கள் என்ன நடக்கும் என்று?


இப்படி சொல்வதினால், நீங்கள் இஸ்லாமை பரப்பும் விதம் உங்கள் நபியைப்போல வன்முறையில் இல்லாமல், அமைதியான முறையில் பரப்புகிறோம் என்று உங்கள் நபிக்கு எதிராக நீங்களே சாட்சியிடுகிறீர்கள். உங்கள் நபியை விட நீங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்கிறீர்கள்.

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இவரது இரண்டாவது குற்றச்சாட்டின் சாராம்சம் 'பல குர்ஆன்கள் உள்ளன, எனவே குர்ஆன் பாதுகாக்கப் படவில்லை' என்பதாகும்.

இதற்கு ஏற்கனவே கட்டுரைகள் எழுதியுள்ளேன், இன்னும் பாக்கியுள்ளது, தொடர்ந்து வரும்.

• ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை: 7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது)

• ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இது போன்ற கருத்துக்களைத் தலைப்பாக வைத்துத்தானே விவாதிக்கத் தயாரா? என இவருக்கு விவாத அழைப்பு விடுத்தோம். உண்மையிலேயே இவருக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இருந்திருந்திருந்தால் இவர் கூறியதைப் போன்று குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்று நம் முன் நிரூபிக்க வந்திருக்க வேண்டுமல்லவா. மாறாக நம் விவாத அழைப்பைக் கண்டு இவர் ஓடி ஒழிந்ததேன்?

நாமும் திருக்குர்ஆனின் தூய்மை நிலையையும், முரண்பாடற்ற தன்மையையும் நிரூபிப்பது மட்டுமல்லாமல் பைபிள் என்ற இவரது பரிசுத்த(?) வேத(காம)த்தின் லட்சனங்களை அந்த அவையிலே போட்டு உடைப்பதாகவும் சவால் விட்டோமே.

இப்போது மீண்டும் குர்ஆன் சரியில்லை என்று இவர் எழுதிக் கொண்டு வருவது எதைக் காட்டுகிறது? இதற்குத்தான் இவரை நாம் டாஸ்மார்க் பொய்யடியான் என்று எழுதியுள்ளோம் சகோதரர்களே.

நேரடி விவாதத்திற்கு தான் வரமுடியாது என்றுச் சொன்ன பிறகும், வா வா என்று அழைத்தால் என்ன அர்த்தம், எழுத்து விவாதத்தில் தோல்வியை இஸ்லாம் தழுவிக் கொண்டு இருக்கிறது என்று மறைமுகமாக அங்கீகரிக்கிறீர்களா?


இந்த சூடு, சொரனை ரோஷம் எல்லாம் யாருக்கு இருக்கிறது என்று காலம் பதில் சொல்லும், காத்துக்கொண்டு இருங்கள்.


ஏன் பயந்துப்போய், இப்படி அடிக்கடி ஒரே விவரத்தை ஒரு கட்டுரையாக பதிக்கிறீர்கள்? எங்கள் நபி நல்லவர், எங்கள் இஸ்லாம் அமைதியான மார்க்கம் என்று ஆயிரம் முறை சொன்னால் மட்டும் போதுமா? சொன்னதை உங்கள் செயல்களால் நிருபியுங்கள்.

உங்கள் நபி நல்லவரா என்று இப்போது அவரை அழைத்துவந்து வாழ்ந்துகாட்டுங்கள் என்று சொல்லமுடியாது. அவர் நல்லவர் என்பதை நீங்கள் அவரைப்போல வாழ்ந்து காட்டவேண்டும்.

அதை விட்டு, அழிபிறவி, ஷைத்தானின் நேரடி எஜென்ட், அநியாயக்காரர்கள் என்று நீங்கள் கூறுவதினால், உங்கள் முகமதுவின் உண்மை முகத்தை நீங்கள் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.

ஒன்று மட்டும் நிச்சயம், நீங்கள் அதிகமாக பயந்துள்ளீர்கள். அதனால், தான் திட்டியாவது இவர்களை கட்டுரை எழுதாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று இப்படி செயல்படுகிறீர்கள்.

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

குறிப்பு:- உண்மையடியான் என்ற இந்த ஆசாமியின் எழுத்துக்களும், பொய்ப் பிரச்சாரங்களும்; ஒட்டுமொத்த கிருஸ்தவர்களின் கருத்தல்ல. மேலும் உண்மையடியான் என்ற இந்த ஆசாமியைப் பற்றி நாம் விசாரித்தவரையில், தமிழக கிருஸ்தவர்களின் மத்தில் இவருக்கு எவ்வித அங்கீகாரமுமில்லை என்பதை அறிந்தோம்.

தமிழக கிருஸ்தவ சங்கங்களுக்கோ, இங்குள்ள பேராயர்களுக்கோ சற்றும் அறிமுகமில்லாத முகவரியற்றவர் உண்மையடியான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவேதான் அறியாமையினால் இவர் உளரும் உளறல்களை நாம் பெரிய அளவிற்கு பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வருகிறோம்.

ஒரு வேடிக்கையை இந்த கட்டுரையை படிப்பவர்கள் கவனிக்கவேண்டும். நாங்கள் எழுதும் கட்டுரைகளை ஒரு பொருட்டாக இவர்கள் எண்ணமாட்டார்களாம், அலட்சியம் செய்துவருகிறார்களாம்,

அப்படியானால், ஏன் கட்டுரைகளை எழுதுகிறீர்கள், அலட்சியம் செய்துவிட்டால், அப்படியே விட்டுவிடுவது தானே? ஏன் எங்களை திட்டி கட்டுரைகள் எழுதுகிறீர்கள்? எங்கள் கட்டுரைகளை அலட்சியம் செய்கிறோம் என்றுச் சொல்லிக்கொண்டே, அதிக முக்கியத்தும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


எங்களுக்கு அங்கீகாரம் இல்லையாம், தமிழ் கிறிஸ்தவ உலகில் அங்கீகாரம் இல்லையாம். அருமை அண்ணன்களே, நாங்கள் ஸ்தாபனம் வைத்து இந்த கட்டுரைகளை எழுதவில்லை, உங்களைப் போன்றவர்கள் பைபிளுக்கு எதிராக கிறிஸ்தவத்திற்கு எதிராக சொல்லிக்கொண்டு வரும் மூட்டை மூட்டையான பொய்களுக்கு தனிப்பட்ட முறைகள் மறுப்புக்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.


நீங்கள் மட்டும் என்ன தமிழக முஸ்லீம்கள் அனைவரின் சார்ப்பில் எழுதும் ஐ எஸ் ஐ முத்திரை பதிக்கப்பட்ட எழுத்தாளர்களா? நாங்கள் யாருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்துக்கொண்டு இருக்கவில்லை. பைபிளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், உங்களின் பொய் முகங்களை கிழிக்க அதிகாரம், அங்கீகாரம் உண்டு.


எங்களைப் பற்றி ஏன் விசாரிக்கவேண்டும், அதை விட்டு விட்டு, ஒரு சர்வே எடுங்கள், அதாவது தமிழ் கிறிஸ்தவர்களிடம் சென்று, எங்கள் தளம் பற்றிச் சொல்லி, எங்கள் கட்டுரையைப் பற்றிச் சொல்லி, பல கேள்விகள் கேட்டு சர்வே எடுங்கள், அப்போது உங்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்கும்.

எங்கள் தள கட்டுரைகளை தமிழ் கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்து, எங்கள் கட்டுரைகள் அனைத்தும் படிக்கும்படி அவர்களுக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள். இப்படி கட்டுரை எழுதும் கிறிஸ்தவர்களை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? என்று கேட்டுப்பாருங்கள். அப்போது தான் நன்றாக இருக்கும்,

ஏனென்றால், வெறும் இணையம் பயன்படுத்தும் சிலருக்குத் தான் எங்கள் கட்டுரைகள் பற்றித் தெரியும், இப்படி சர்வே நீங்கள் எடுத்தால், இன்னும் எல்லாருக்கும் தெரியவரும். உங்களுக்கும் சர்வே எடுத்து உண்மையை கண்ட திருப்தி இருக்கும். "தவலை தன் வாயாலே கெடுமாம்" என்று ஒரு பழமொழி உள்ளது. எப்படி வசதி?


முடிவாக, இந்தியாவில் ஒற்றுமையாக வாழும் மக்களை பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, அது உங்களுக்கு வேண்டுமானால், இருக்கலாம். நான் மறுப்புச் சொல்வது, இஸ்லாமியர்களுக்கு அல்ல, இஸ்லாமுக்கு, முஸ்லீம்களுக்கு அல்ல முகமதுவிற்கு எனபதை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஜனநாயக நாட்டில் நாங்கள் மற்றவர்களை நேசிக்கிறோம் என்றுச் சொல்வது சுலபம், முதலாவது இஸ்லாமிய நாட்டில் மற்ற மதத்தவர்களை கொன்று குவிக்கும் அநியாயத்தை முதலில் தட்டிக்கேளுங்கள். பிறகு பார்க்கலாம், உங்கள் நேசம், அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி போன்றவைகளின் வீரியம்.




ஆர் எஸ் எஸின் பயிற்சிமுகாமாக மாறிவரும் மாணவர்களின் பள்ளிகூடங்கள்

இன்று செய்திதாளை படித்துகொண்டிருந்த எனக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. நமது தேசத்தந்தை மகாத்மாவை கொன்ற ஆர் எஸ் எஸுக்கு தமிழ் நாட்டில் அதுவும் பள்ளிகூடத்தில் பயிற்சி முகாமா என என் உள்ளத்தில் அதிர்ச்சி. மக்கள் அறிவு வளர கல்வி சாலை அமைப்போம் என பாடின பாரதி வாழ்ந்த இந்த மண்ணில இந்த கொடுமை.

அனுமதி கொடுத்த பள்ளி நிர்வாகம் மாணவர்களின் எதிர்காலத்தையும் கொஞ்சம் மனதில் நினைத்திருந்தால் இதற்கு அனுமதித்திருப்பார்களா . இனியாவது தமிழகம் விழித்தால் நல்லது. இறைவன் கல்வியாளர்களுக்கு நல்ல கல்வியளிபாராக.

செய்தி இதோ:

காஞ்சீபுரத்தில் ஆர்.எஸ்.எஸ்.முகாமை எதிர்த்து கலவரம்
திகதி : Sunday, 09 Nov 2008, [Sindhu]
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை கிராமத்தில் பாரதிதாசன் மெட்ரிக்கு லேஷன் பள்ளி உள்ளது.இங்கு 3,500மாணவர்கள் படிக்கிறார்கள்.நேற்று விடுமுறை என்பதால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்தது.

மேலும் பள்ளியின் மற்றொரு பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 2நாள் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் தொடங்கியது.இந்த முகாமில் பங்கேற்க 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் வந்திருந்தனர்.

பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ்.முகாம் நடத்த அந்த பகுதியைச் சேர்ந்த கம்念2985;ிஸ்டு,விடுதலை சிறுத்தைகள்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் காலை 10மணிக்கு பள்ளி முன்பு திரண்டனர்.பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் ஆர்.எஸ்.எஸ்.முகாம் நடத்த எப்படி அனுமதிக்கலாம் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கு ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள்,இந்து முன்னணியினர்,பாரதீய ஜனதா தொண்டர்கள் வந்து எதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள்.

அவர்களுக்கு எதிராக கம்யூனிஸ்டு நிர்வாகிகள் முத்துக் குமார்,ஜீவா,விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் நாராயணன்,ஒன்றிய செயலாளர் டேவிட் மற்றும் முஸ்லிம் முன்னேற்ற பிரமுகர்கள் எதிர்ப்பு கோஷம் போட்டனர்.

இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் போட்டதால் திடீரென மோதல் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மீது கல் வீசப்பட்டதுஆவேசம் அடைந்த அவர்கள் தடிகளுடன் ஓடி வந்து கல்வீசியவர்களை சரமாரியாக தாக்கினார்கள்.இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள்.அங்கு அடிதடி கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முத்துக்குமார்,கமலநாதன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த டேவிட்,நாராயணன்,வெங்கடேசன்,முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பாஷா,ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜா,ராகவன் உள்ளிட்ட 14பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் 9பேர் சிகிச்சை பெற்று திரும் பினார்கள்.மற்ற 5பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த கலவரத்தை பார்த்து பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கலவரம் பற்றி கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர்.போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளை போலீசார் பாதுகாப்புடன் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பள்ளி நிர்வாகி அருண் குமாரை போலீஸ் அதிகாரிகள் அழைத்து ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரை உடனே வெளியேற்றும்படி கூறினார்கள்.



அமைதி, இந்தியா, மாணவர்கள்
இந்திய விஞ்ஞானிகளின் இதயம் 20 நிமிடங்கள் நின்று விட்டன.


ஆம் நிலவின் சுற்றுபாதைக்கு சந்திராயனை கொண்டுசெல்லும் இந்திய விஞ்ஞானிகளின் அந்த கடைசி 20 நிமிடங்கள் அவர்களின் இதயமே நின்று விட்டது மாதிரி மிகவும் பரப்பரப்பாக இருந்ததாக அதின் தலைவர் திரு மாதவன் நாயர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியர்கள் அனைவரின் இதயமும் இன்று குளிர்ந்து விட்டது. உள்ளத்தில் இனம்புரியா ஒரு மகிழ்ச்சி ஆம் உலக விஞ்ஞானிகளுக்கு நமது விஞ்ஞானிகள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


நிலவின் சுற்றுபாதையில் இந்தியாவின் சந்திராயன் விடியோவில்
இந்தியா விஞ்ஞானிகளின் அபார அறிவுக்கு மற்றுமொரு மைல்கல்லாக இந்த செயற்கைகோளான சந்திராயன்

1 வெற்றிகரமாக நிலவின் சுற்றுபாதைக்கு வந்துள்ளது. இதை வெற்றிகரமாக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்கு இந்தியர்கள் அனைவருகே வெற்றி வாழ்த்துகளைதெரிவித்துவருகிறார்கள். இவர்கள் மேல் இறைவனின் ஆசி இருப்பதாக. இன்னும் பல வெற்றிகளை அடைய எமது வாழ்த்துக்களும்.



இந்தியா, சந்திராயன், விண்வெளி
அபூமுஹை & மத்தேயு 10:14 -

அடாவடி செய்யாமல் மார்க்கம் பரப்புங்கள்


அபூமுஹை & ஈஸா குர்‍ஆன்:

அபூமுஹை & மத்தேயு 10:14 - அடாவடி செய்யாமல் மார்க்கம் பரப்புங்கள்

முன்னுரை: "ஓமன் நாட்டுக்கு முகமது அனுப்பிய கடிதம்" பற்றிய கட்டுரையின் கடைசியில் நான் சில பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டியிருந்தேன். அதற்கு அபூமுஹை அவர்கள் சில விளக்கம் கொடுத்து இருந்தார்கள்

"இக்கட்டுரை விமர்சனம் இல்லை, நல்லவர்கள் சமுதாயத்தில் நடக்கும் தீமையையும் தடுக்கலாம் அல்லவா" என்று மென்மையாக கேள்வி எழுப்பி இருந்தார்கள். இஸ்லாம் இப்படித்தான் சமுதாயத்தில் நடக்கும் தீமையை தடுத்துவிடுங்கள் என்றுச் சொல்கிறது என்று சொன்னார்கள்,

நல்ல விஷயம் தான். ஆனால், நான் மேற்கோள் காட்டியிருந்த வசனங்களை அவர் தவறாக புரிந்துக்கொண்டு, விளக்கம் அளித்துள்ளார். எனவே, இந்த என் பதில், மேற்கண்ட பைபிள் வசனங்களைப் பற்றிய ஒரு சிறு விளக்கமாகும்.


1) நான் மேற்கோள் காட்டியிருந்த வசனங்கள் இவைகள்:

கீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு?

மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.

லூக்கா 9:5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.

அப்போஸ்தல நடபடிகள் 13:51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.


2) நான் ஏன் இந்த வசனங்களை முன்வைத்தேன், மற்றும் இவ்வசனங்களுக்கும் இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம்?


இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர்களின் நபி இஸ்லாமை வாளால் மட்டுமே பரப்ப விரும்பினார், பரப்பினாரும் கூட. இதற்கு அவர் எழுதிய கடிதங்களே சாட்சிகள்.


படிக்க:

ஓமன் நாட்டுக்கு மன்னருக்கு முகமது எழுதிய கடிதம்

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும்

மேற்கண்ட பைபிள் வசனங்கள் நான் மேற்கோள் காட்டியதற்கு முக்கிய காரணம், இயேசு தன் செய்தியை மக்களிடம் எவ்விதம் கொண்டுச் சென்றார், அதே போல முகமது தன் செய்தியை எவ்விதம் கொண்டுச் சென்றார் என்பதின் வித்தியாசத்தை காட்டுவதற்காக ஆகும்.


முகமதுவின் வழி: தன் செய்தியை ஏற்று தான் ஒரு நபி என்பதை நம்பவில்லையானால், அவர்களின் நாட்டில் இரத்த ஆறு ஓடும், அதாவது போர் புரிந்து நாட்டை பிடித்துவிடுவேன் என்று பயப்படவைத்து பரப்பினார்.


இயேசுவின் வழி: ஆனால், இயேசு தன் சீடர்களை பல ஊர்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு தன் நற்செய்தியைச் சொல்லி, மக்களின் வியாதிகளைச் சுகப்படுத்தி, சீடராக்குங்கள், அப்படி உங்களை ஏற்றுக் கொள்ளவில்லையானால், அவர்களை தாக்காமல், அவர்கள் ஊரை விட்டு வந்து விடுங்கள் என்றுச் சொல்லி அமைதியான முறையில் தன் செய்தியை பரப்பினார்.


இஸ்லாமியர்களே, இந்த இரண்டு வழிமுறைகளில் எது சரியான அமைதியான முறையில் மார்க்கத்தை பரப்புவது என்று நீங்கள் நம்புகிறீர்கள்? வன்முறை மூலமாக இஸ்லாம் பரப்பப்பட்டு இருக்கும் போது கிறிஸ்தவர்களோ அல்லது மற்றவர்களோ எப்படி இஸ்லாம் ஒரு அமைதியான மதம் என்று நம்பி அதனை அங்கீகரிக்கமுடியும்?


ஆக, நான் மேற்கோள் காட்டிய வசனங்கள், ஒரு மார்க்கத்தை பரப்ப அல்லது இயேசுவின் நற்செய்தியை மக்களுக்குச் சொல்லும் போது, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லையானால், அந்த இடத்தை விட்டு வந்துவிடுங்கள் என்று இயேசு சொன்னதை தெளிவுப்படுத்துவதற்கு ஆகும்.


அதாவது ஒருவர் தன் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும் போது, முக்கியமாக அதுவும் இறைவன்,பக்தி போன்ற விவரங்கள் சொல்லும் போது, கத்தியைக் காட்டி, துப்பாக்கியைக் காட்டி, பயப்படவைத்து சொல்லமுடியுமா? அப்படிச் சொன்னால் அது நியாயமான முறையாகுமா?

அப்படி மக்கள் பயந்து அந்த இறைவனை வணங்கினால், இதனால், அந்த இறைவனுக்கு என்ன மகிமை சொல்லுங்கள்?

எனவே தான், "பக்தி, நம்பிக்கை" என்று வந்துவிட்டால், அது மனிதனின் மனதில் ஏற்படவேண்டிய மாற்றம் மற்றும் விருப்பத்தோடு செய்யப்படவேண்டும், இஸ்லாமைப் போல, பயப்படவைத்து செய்யக்கூடாது.

முஸ்லீம்களே! பக்தி, நம்பிக்கை என்பதை கட்டாயத்தின் பெயரில் ஒரு மனிதனின் மனதில் பதிக்க முடியும் என்று நம்புகிறீர்களா? அப்படி சிலர் பயந்து நம்பிக்கைக் கொண்டாலும், அந்த குறிப்பிட்ட இறைவனுக்கு அதனால் மகிமை சிறப்பு உண்டாகுமா? மனிதனை படைத்த இறைவனுக்கு அவன் மனதில் ஓடும் சிந்தனைகளை அறிய முடியாது என்று நினைக்கிறீர்களா?


இந்த வித்தியாசத்தை காட்டவே, நான் அந்த வசனங்களை மேற்கோள் காட்டினேன். ஆனால், அபூமுஹை அவர்கள் அந்த வசனங்களை எப்படி பொருள் கொண்டுள்ளார் என்பதை இனி கவனிப்போம்.

3) மத்தேயு 10:14, லூக்கா 9:5 போன்ற வசனங்கள் இறைப்பணிக்காக செல்பவர்களுக்கான கட்டளைகள் ஆகும். அரசாங்கத்திற்கு தீமையை தடுக்க கொடுக்கப்பட்ட‌ கட்டளைகள் அல்ல‌

இவ்வசனங்களின் பின்னனியை கவனித்தால், இயேசு தன் சீடர்களை நற்செய்தியைச் சொல்ல அனுப்பும்போது சொன்ன அறிவுரைகள். ஆனால், அபூமுஹை அவர்கள் இந்த வசனங்களின் பின்னனியை தெரிந்துக்கொள்ளாமல், "இவ்வசனங்கள் தீமை நடக்கும் போது அதை தடுக்கக் கூடாது" என்று கிறிஸ்தவர்களுக்கு இயேசு சொன்னதாக புரிந்துக் கொண்டுள்ளார்.


அபூமுஹை அவர்கள் எழுதியவைகளில் சில விவரங்கள்:

நன்மைகளைச் செய்வதோடு தீமைகளையும் களைந்து, களைய முன் வர வேண்டும். தான் மட்டும் நல்லவனாக வாழ்ந்தால் போதும் மற்றவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? என்றிருப்பவர் தீமையைத் தடுத்தவராகமாட்டார்.


இயேசு சொன்னதற்கும், நம் அபூமுஹை அவர்கள் சொன்னதற்கும் ஏதாவது ஒற்றுமையுண்டா பாருங்கள். அதாவது, இயேசு சொன்னது, தனி மனிதனுக்கு தன் அனுதின‌ வாழ்வில் இப்படி செய் என்றுச் சொல்லவில்லை, அல்லது ஒரு அரசாங்கம் தீமையைத் தடுக்கக்கூடாது என்று கூட சொல்லவில்லை, அதற்கு பதிலாக, மார்க்கத்தை பரப்பும் போது, "அடாவடி செய்யாமல், பயமுறுத்தாமல் செய்யுங்கள்" என்று தான் சொல்லியுள்ளார்.


அப்படியானால், ஒரு சராசரி கிறிஸ்தவன் தன் கண்களுக்கு முன்பாக‌ தீமைகள் நடக்கும்போது என்ன செய்யவேண்டும், ஒதுங்கி விடவேண்டுமா?

4. கிறிஸ்தவர்கள் தீமையை ஏன் தடுக்கக்கூடாது, நன்மை செய்யக்கூடாது?

இதுவரை நாம் பார்த்தவிவரங்களைக் கொண்டு, இயேசு சொன்ன மேற்கண்ட வசனங்கள், நற்செய்தி சொல்லும் நபர்களுக்கு அறிவுரைகளாகும் என்பதை அறிந்தோம்.

தீமையை தடுக்கும் படி பைபிள் சொல்கிறது. ஆனால், இன்று இஸ்லாமியர்கள் தீமையை தடுக்கிறோம் என்றுச் சொல்லும் விதத்தில் அல்ல.


ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். யாக்கோபு 4:17

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதிமொழிகள் 3:27


அதாவது ஒரு கிறிஸ்தவனுக்கு நன்மை செய்ய திராணி இருந்தும், அதை அவன் செய்யவில்லையானால், அது அவனுக்கு பாவமாக கருதப்படும்.

உதாரணமாக, ஒரு ஊரில் ஒரு கிறிஸ்தவன் இருந்து, அவனுக்கு பணம் பதவி என்று நல்ல அதிகாரங்கள் இருந்தும், அந்த ஊரில் ஒரு ஏழைக்கு வேறு ஒருவன் தீங்கு செய்யும்போது, இவன் சென்று அவனுக்கு நன்மை செய்யவேண்டும்,

அதாவது, அந்த ஏழையை காப்பாற்றவேண்டும். இதைத் தான் "நன்மை செய்ய அறிந்திருந்தும், திராணியிருந்தும்" என்று வாசிக்கிறோம்.


ஓய்வு நாளில் நன்மை செய்யக்கூடாது, சுகம் தரக்கூடாது என்றுச் சொல்லி, கேள்வி கேட்ட யூதர்களிடம் இயேசு கேட்ட கேள்வி "உங்களுக்கு சொந்தமான ஒரு கழுதை ஓய்வு நாளில் குழியில் விழுந்தால், அதை தூக்கிவிடமாட்டீர்களா?"

அது போல, இத்தனை ஆண்டுகள் துன்பப்பட்ட மக்களுக்கு ஓய்வு நாளில் சுகப்படுத்துவது தவறில்லை என்றுச் சொன்னார், சுகப்படுத்தினாரும் கூட. ஓய்வு நாளில் நன்மை செய்ததினால் யூதர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டார்.

அவரை பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கு நன்மைச் செய்ய நன்றாகவே தெரியும். எனவே, முகமதுவின் வன்முறை மதப்பிரச்சார எடுத்துக்காட்டை இப்படி நன்மைக்கு சம்மந்தப்படுத்தி நியாயப்படுத்த முயற்சி எடுக்கவேண்டாம்.


ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணம்படிக்குப் போயிருந்தார். அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.

அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார். (லூக்கா 14:1-5 மற்றும் இந்த வசனங்களையும் பார்க்கவும் லூக்கா 13:10-17 )

5. அபூமுஹை அவர்களே, வசனத்தின் உண்மை பொருளை மாற்றாதீர்கள்

இயேசு கூறிய வசனங்கள் "தன் நற்செய்தியை உலகத்திற்கு கொண்டுச் செல்பவர்கள், வன்முறையை பின்பற்றாமல், கட்டாயப்படுத்தாமல் சொல்லவேண்டும்" என்பதை விளக்குகின்றன.

ஆனால், அதை மாற்றி "ஏன் தீமையை தடுக்கக்கூடாது" என்ற தோரணையில் நீங்கள் பொருள் கூறுகிறீர்கள். தன் ஊழியர்களுக்கு அறிவுரை இயேசு கூறியதை மாற்றி "ஒரு அரசாங்கம்" அப்படிச் செய்யக்கூடாது, இஸ்லாமிய அரசாங்கம் அப்படிச் செய்யாது என்றுச் சொல்கிறீர்கள்.


இயேசு சொன்ன வசனத்தில் அரசாங்கம் எங்கே வந்தது? நாட்டின் சட்டத்துறை எங்கு வந்தது?


இயேசுவின் சீடர்கள் ஒன்றும் முகமதுவின் தோழர்களைப்போல, முகமது எப்படி வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தி பரப்பினாரோ அப்படி அவர்கள் பரப்பவில்லை. தங்கள் உயிரை கொடுத்து நற்செய்தி ஊழியம் செய்தனர். உங்கள் முகமதுவைப்போல மற்றவர்களின் உயிரை எடுப்பேன் என்றுச் சொல்லி பரப்பவில்லை.


எனவே, தன் ஊழியக்காரர்களுக்கு இயேசு கொடுத்த கட்டளைகளை, முகமது தன் இராணுவ தோழர்களுக்கு கற்பித்த மார்க்க பரப்பும் விதத்துடன் சம்மந்தப்படுத்தாதீர்கள், அபூமுஹை அவர்களே.

தீமையை தடுப்பது பற்றி கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் சொல்லித் தான் தெரிந்தாக‌வேண்டும் என்ற நிலையில் கிறிஸ்தவர்கள் இல்லை. அதே நேரத்தில் நன்மையை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப் பற்றியும், முகமதுவைக் கண்டுத் தான் நாங்கள் கற்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் நாங்கள் இல்லை.

சமுதாயத்தில் தீமையை தடுக்கிறோம் என்றுச் சொல்லி, இஸ்லாமிய நாடுகளில் உங்கள் இமாம்கள் வாலிபர்களின் மனதை குழப்பி, அரசாங்கம், சட்டம் செய்யும் வேலையை, தனி மனிதன் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சமுதாயத்திற்கே தீமையை புரியும் உங்கள் இமாம்களைப்போல அல்லாமல், கிறிஸ்தவர்களுக்கு எப்போது நன்மையைச் செய்யவேண்டும், தீமையை எப்படி தட்டிக் கேட்கவேண்டும் என்றுத் தெரியும்.


பாகிஸ்தானில் தீவிரவாத குழு ஒன்று விபச்சாரம் செய்கிறவர்கள் என்றுச் சொல்லி, பெண்களை கொன்று போட்டு உள்ளார்கள். இது தான் தீமையை தடுக்கும் முறையா? சட்டம் செய்யும் வேலையை தன் கையில் ஏந்திக்கொண்டு கொலை செய்வது தான் தீமையை தடுக்கும் முறையா?

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது சரியானது என்று நான் சொல்லவில்லை, ஆனால், அப்படிப்பட்ட தீய செயல்களை முறியடிக்க தனி மனிதன் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்றுச் சொல்லவருகிறேன்.

நாட்டின் குடிமக்கள் சட்டத்திற்கு உதவி செய்து சட்டத்துறையோடு ஒத்துழைத்து, தீமையை தடுக்க முயற்சி எடுக்கவேண்டுமே ஒழிய, சட்டத்தை மதிக்காமல் தானே இராஜா, தான் சொன்னது தான் சட்டம் என்றுச் சொல்லி செய்யும் செயல்கள் அனைத்தும் "தீமையை தடுக்கும் சரியான முறைகள்" அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


முடிவாக, இயேசு தன் சீடர்களுக்கு அமைதியான முறையில் நற்செய்தியை சொல்லச்சொன்ன வசனத்தை பொருள் மாற்றி திசை திருப்பி, நல்லவர்கள் தீமையை தடுக்கட்டும் என்ற முறையில், உங்கள் முகமதுவின் வன்முறை வழிகளோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டதோடு மட்டுமல்ல, அதுவே சரியானது என்ற தோரணையில் எழுதுவதை இனி விட்டுவிடுங்கள்.


அபூமுஹை அவர்கள் எழுதியது:

"சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் படிந்த தூசியைத் தட்டிவிட்டு வெளியேறுங்கள்" இந்த அறவுரை தனி மனிதனுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம். ஓர் அரசுக்குப் பொருந்தாது.

அநீதி எங்கு நடந்தாலும் வலிமைப் பெற்ற அரசு அதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதுவும் தீர்க்கத்தரிசிகள் தலைமையில் அமைந்த அரசு அநீதியை எதிர்த்துப் போரிட தயக்கம் காட்டக்கூடாது.

இயேசு இந்த அறிவுரையை அரசாங்கத்திற்கு சொன்னார் என்று உங்களிடம் யாராவது சொன்னார்களா? இஸ்லாம் அரசுக்கு எது தான் பொருந்தும் சொல்லுங்கள்? தன் மக்கள் மற்ற மார்க்கங்களை பின்பற்றினால் இஸ்லாமிய அரசுக்கு பொருக்காது? கொன்றுவிடும்.

தான் மட்டும் தான் வாழனும், தன் மதம் மட்டும் தான் வாழனும் என்றுச் சொல்லும் இஸ்லாம் மதத்திற்கு எது பொருந்தும் சொல்லுங்கள்? முகமது தன் நாட்டை ஆளுகிறார் என்றால் ஆண்டுக்கொண்டு போகவேண்டியது தானே,

அதை விட்டுவிட்டு, பக்கத்து நாட்டுக்கு கடிதம் எழுதி, இஸ்லாமுக்கு மாறிவிடு, இல்லையானால் போர் மூளும் என்றுச் சொல்வது தான் அல்லாவின் நபியின் தலையில் இருக்கும் அரசுக்கு அழகோ! இது இஸ்லாமிய அரசுக்கு பொருந்துமோ?

பக்கத்து நாட்டுக்காரன் தன் நாட்டை ஆண்டுக்கொண்டு இருந்தால், நீ தப்பு செய்தாய் என்று தட்டிக்கேட்பாரா உங்கள் நபி? அதே வேலையை அந்த பக்கத்து நாட்டுக்காரன் இவருக்கு கடிதம் அனுப்பி கேட்டு இருந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு?

தன்னைத் தானே நபி என்றுச் சொல்லிக்கொள்வது, தானே நல்ல ஆட்சியாளர் என்றுச் சொல்லிக்கொள்வது, தன் மார்க்கமே சரியானது என்றுச் சொல்லிக்கொள்வது, அதோடு நிறுத்தாமல், மற்றவனையும் தன் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டளை போட்டு, பயப்படவைப்பது இது உங்கள் நபி செய்தார்.

அநீதி உங்கள் நாட்டில் நடந்தால் தட்டிக்கேட்பது சரியானது தான், பக்கத்து நாட்டில் தப்பே நடக்காமல், நீ மாறனும் என்றுச் சொன்னால் எப்படி நியாயமாக இருக்கும்?

அபூமுஹை அவர்கள் எழுதியது:

சமுதாயத்தில் விளையும் தீமைகளை, ஒவ்வொரு தனி மனிதனும் தனது சக்திக்கு ஏற்றவாறு தடுத்திட வேண்டும். இது குறித்து நாளை அவன் விசாரிக்கப்படுவான்.

இதை நீங்கள் சொல்லித்தான் எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதில்லை, தன் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தட்டிக்கேட்பார்கள்.

இதற்கு ஒரு மதத்தில் அதாவது இஸ்லாமிலோ, கிறிஸ்தவத்திலோ அல்லது இந்துத்துவத்திலோ ஒரு மனிதன் இருந்தால் தான் தட்டிக்கேட்கவேண்டும் என்பதில்லை, நாத்தீகன் கூட சமுதாயத்திற்கு நன்மைகள் செய்கிறான், தவறுகளை தட்டிக்கேட்கிறான்.


அபூமுஹை அவர்கள் எழுதியது:

மார்க்கத்தை நிறைவேற்ற முடியாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் இஸ்லாமும் அறவுரை வழங்கியுள்ளது. நபியவர்களும் முஸ்லிம்களும் மக்காவை விட்டு வெளியேறிய சம்பவம் இதற்கு முன்னுதாரணமாக உள்ளது.


"சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் படிந்த தூசியைத் தட்டிவிட்டு வெளியேறுங்கள்" இந்த அறவுரை தனி மனிதனுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம். ஓர் அரசுக்குப் பொருந்தாது.

அநீதி எங்கு நடந்தாலும் வலிமைப் பெற்ற அரசு அதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதுவும் தீர்க்கத்தரிசிகள் தலைமையில் அமைந்த அரசு அநீதியை எதிர்த்துப் போரிட தயக்கம் காட்டக்கூடாது.

ஆமாம், இஸ்லாமியர்கள் குறைவாக இருக்கும் பொது, தனக்கும் தன் சேனைக்கும் அதிகமாக வலிமை இல்லாத போது, மக்கா மக்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தானே மதினாவிற்குப் போனார்கள்.

அதே குழு சக்தியுள்ளதாக மாறினவுடன், மற்ற அரசர்களுக்கு வலிய சண்டைக்கு அழைப்பு விடுத்தது போல, கடிதம் எழுதி, இஸ்லாமுக்கு மாறு இல்லையானால் சாகு என்ற தோரணையில் இஸ்லாமை பரப்பினாரே இந்த நியாயத்தை எங்கு சென்றுச் சொல்வது.


மக்கா மக்கள் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்ற முடியாமல் செய்ததால், மதினாவிற்கு வந்தவர்கள். மற்ற நாட்டுக்காரர்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்ற ஏன் அவர்களை விடவில்லை. கடிதம் எழுதியது தவறு என்றுச் சொல்லவில்லை,

ஆனால், வன்முறையை அதற்கு ஆதாரமாகக் கொண்டது தான் தவறானது என்றுச் சொல்கிறேன். நான் ஒரு நபி, இது தான் மார்க்கம், இது தான் நல்லவழி, உங்களுக்கு விருப்பமானால் பின்பற்றுங்கள் என்று கடிதம் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இப்படி எழுதினாரா உங்கள் நபி?


அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றவர்களின் வாழ்க்கைக்கு ரோமானியர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது இஸ்லாத்தை ஏற்றால் அவரைக் கொன்றனர்.

ரோமர்களின் அடக்கு முறைகளையும், அத்து மீறல்களையும் கண்டித்து, அவர்களுடன் போர் தொடுக்குமுன் விடுக்கப்படும் இஸ்லாத்தின் அழைப்பும் எச்சரிக்கையும் முறையாக மன்னர்களுக்குக் கடிதம் வழியாக எழுதப்பட்டது. எழுதியவர்: ஆன்மீகத் தலைவர், ஆட்சியின் தலைவரான - இஸ்லாமியப் பேரரசின் மாமன்னர் நபி (ஸல்) அவர்கள்.

எல்லா மன்னருக்கும் எழுதப்பட்ட அழைப்பும் எச்சரிக்கையும் ஓமன் நாட்டு அரசருக்கும் எழுதப்பட்டது. அது குறித்து பிற மத நண்பர்களின் விமர்சனம் அடுத்த பகுதியில், நன்றி!

அன்புடன்,

அபூ முஹை


நீங்கள் எழுதிய வரிகளை ஒரு முஸ்லீம் படித்தால் அப்படியே புரிப்பு அடைவார். அதே வரிகளில் இஸ்லாம் உள்ள இடத்தில் கிறிஸ்தவம் என்று மாற்றி படித்துப்பாருங்கள், இன்று இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் பாடுகள் உங்களுக்குப் புரியும்.


பைபிளையும் இயேசுவையும் நம்பிக்கை கொண்டு கிறிஸ்தவத்தை ஏற்றவர்களின் வாழ்க்கைக்கு ஈரான், ஈராக், இதர இஸ்லாமிய நாடுகள் நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது கிறிஸ்தவத்தை ஏற்றால் அவரைக் கொன்றனர்.

ஷரியா சட்டம் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் அடக்கு முறைகளையும், அத்து மீறல்களையும் கண்டித்து, அவர்களுடன் போர் தொடுக்குமுன் விடுக்கப்படும் கிறிஸ்தவத்தின் அழைப்பும் எச்சரிக்கையும் முறையாக இஸ்லாமிய நாட்டு அரசர்களுக்கு கடிதம் வழியாக எழுதப்பட்டது.


மேலே உள்ள வரிகளில் உள்ள கருத்து நீங்கள் இஸ்லாமை நியாயப்டுத்த கொடுத்த கருத்து தான். இன்று உலகத்தில் ஒரு கிறிஸ்த நாடு உருவாகி, அந்த நாடு அதிக சக்தியுள்ளதாக மாறி, உங்கள் முகமதுவின் வழியை பின் பற்றி அவரைப்போல கிறிஸ்தவர்களை கொல்லும் இஸ்லாமிய நாடுகளுக்கு கடிதம் எழுதினால், அதை நீங்கள் அங்கீகரிப்பீர்களா?

சிந்திக்கவேண்டும் முஸ்லீம்களே சிந்திக்கவேண்டும். உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

சரி போகட்டும் உங்கள் வழிக்கே வருகிறேன், ரோமானியர்கள் முஸ்லீம்களை கொடுமை படுத்தினார்கள் என்றுச் சொல்கிறீர்களே, அதனால் தான் அவர் கடிதம் எழுதி எச்சரித்தார் என்றுச் சொல்கிறீர்கள்,

அப்படியானால், மற்ற நாட்டு மன்னர்களுக்கு ஏன் கடிதம் எழுதி போருக்கு எச்சரித்தார்? மற்ற நாடுகளுக்கு அமைதியான முறையில் கடிதம் எழுதியிருக்கலாம் அல்லவா?

இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்றுச் சொன்னால், ஏன் அவர் எல்லா நாடுகளுக்கும் ஒரே வகையான செய்தியை அதாவது, இஸ்லாமை ஏற்றுக்கொள் பாதுகாப்பாக இருப்பாய் மறுத்தால் போர் மூளும் என்று ஏன் எழுதினார்?


கடைசியாக, உங்கள் குர்‍ஆன் வசனங்களுக்கு காலத்திற்கு ஏற்ப நீங்கள் பொருள் கூறுவது போல பைபிள் வசனங்களுக்கு பொருள் கூற உங்களுக்கு வாய்ப்பு இல்லை.

ஏனென்றால், குர்‍ஆன் வசனங்கள் போல நிகழ்ச்சிகளுக்கு தலையும் இல்லாமல், காலும் இல்லாமல் பைபிள் வசனங்கள் இல்லை, பைபிளில் வசனங்கள் சொல்லப்பட்ட சூழ்நிலை மற்றும் இதர விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

குர்‍ஆனை புரிந்துக்கொள்ள ஹதீஸ்களின் துணை தேவைப்படுவது போல, எங்களுக்கு எந்த ஹதீஸ்களும் தேவையில்லை. எனவே, கொஞ்சம் நிதானமாக சிந்தித்து, படித்துப்பார்த்து எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்.


இயேசு தன் சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பும் போது கொடுத்த கட்டளையை, உங்கள் இஸ்லாமிய அரசாங்கத்தின் கொடுமைகளை நியாயப்படுத்த முயலாதீர்கள்.

கருத்துகள் இல்லை: