வியாழன், 12 பிப்ரவரி, 2009

ஆட்சி கவிழ்ப்பு

ஆட்சி கவிழ்ப்பு; கூட்டணி உடைப்பு; இதெல்லாம் முற்றிலும் உண்மையான விசயங்கள். நம்ம வீட்டிலே, இத்தனை பிரச்சனைகளை வைத்துக் கொண்டு, நம்மலாலே மத்தவங்க பிரச்சனையை எப்படி தீர்த்துவைக்க முடியும்?

இன்றைக்கு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண முயலும்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும்; தமிழக கட்சிகள், மத்தியில் ஆளும் காங்கிரஸுக்கு அளித்துவரும் ஆதரவை நீக்கிக்கொண்டு விட்டால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் பல்வேறு கோணங்களில், பிரச்சனையை ஆய்வு செய்து பார்த்து செயல்பட வேண்டியதாக இருக்கிறது.

இதெல்லாம், மிகவும் உண்மையான விசயங்கள். வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இது ஒரு 'இடியாப்பச் சிக்கல்' போல் தோன்றும். இலங்கை பிரச்சனைக்கு எதுக்கு இங்கே ஆட்சி கவிழ்ப்பு நடக்கணும் என்று கேள்வி மேல் கேள்வி எழும்பும். வெளி ஆட்களுக்கு புரியவே புரியாது.

நம்ம வீட்டிலேயே இப்படி 'இடியாப்பச் சிக்கலை' வைத்துக் கொண்டு, நம்மலாலே எப்படி அடுத்தவங்க பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும். ஆதலால்தான், பிரச்சனையில் மேலும் மேலும் குழப்பம் உண்டாகிக்கொண்டு இருக்கின்றது.

'இடியாப்பச் சிக்கலில்' தற்பொழுது ஒரு சிக்கல் தீர்ந்து கொண்டு வருகிறது. அதாவது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு; அது காலத்தின் தீர்வு; தற்பொழுது, காங்கிரஸ் ஆட்சிகாலம் முடிவடைவதால், ஒரு சிக்கல் விலகிவருகின்றது. இனியும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு என்று பயப்படத்தேவையில்லை.

அதே சமயத்தில், புதிய சிக்கல் ஒன்று உருவாகி வருகிறது. அது என்னவென்றால், வரும் பாராளுமன்றத் தேர்தல், அதற்கேற்ற கூட்டணி, தேர்தல் பிரச்சாரம்.

ஆக, நம்ம வீட்டிலே இத்தனை பிரச்சனைகளை வைத்துக் கொண்டு, நாம போய், இலங்கை பிரச்சனையை எப்படி தீர்த்துவைக்க முடியும். அவங்க விதி அவ்வளவுதான்.

இந்த 'ஆட்சி கலைப்பு' அது உள்நாட்டு விவகாரம். அது உண்மையான விவகாரம்கூட. இதையாவது சரி செய்யலாம் அல்லவா? அதையும் சரி செய்யாமல் இருந்தால் எப்படி?

இப்படியே விட்டு வைத்தால், நாளைய அரசாங்கமும், எப்பவும் 'ஆட்சி கலைப்பு' என்ற பயத்தோடேயே, எப்படி தெளிவாக சிந்திக்க முடியும்; அப்புறம் எப்படி செயலாற்ற முடியும்.

'ஆட்சி கலைப்பு' இல்லாமல், ஆட்சியில் இருப்பவர்கள் செயலாற்ற வேண்டுமானால், ஆளுநரை, மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்ன தயக்கம்?

அப்படி, மக்கள் நேரடியாக மாநிலத்தை நிர்வாகிக்கும் தலைவரை தேர்ந்தெடுத்தால், அரசியல் கட்சிகள் அழிந்துவிடும். யாரும், சட்டமன்ற சீட்டு கேட்டு, கட்சி வாசலில்வந்து காத்திருக்கப் போவதில்லை. ஆட்களே வராவிட்டால், கட்சி காணாமல் போய்விடும்.

தலைவரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதை, சில கட்சி தலைவர்கள் ஆதரித்து வரவேற்கிறார்கள்; சிலர் அப்படி ஏதுவும் வந்துவிடக்கூடாதே என்று, அஞ்சுகிறார்கள்.

தலைமைப்பண்பு உடைய தலைவர்கள், தன்னம்பிக்கையுள்ள தலைவர்கள், இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள். தன்னம்பிக்கையில்லாதவர்கள்தான், புதிய மாற்றங்களை தவிர்க்கின்றார்கள்.

கட்சியின் அடிப்படையில் பார்க்கும்போதுதான், சீனியர் கட்சி, ஜுனியர் கட்சி, சின்ன கட்சி, பெரிய கட்சி, மாநில கட்சி, தேசிய கட்சி என்ற பாகுபாடு தோன்றும். தலைமைப் பண்பின் அடிப்படையில் பார்க்கும்போது, அனைத்து தலைவரும் சமம் என்ற எண்ணம் உருவாகும்.

சாதரண உண்மைங்க: இந்தியாவில், அனைத்து மக்களுக்கும், எழுதப்படிக்கத் தெரியும் என்ற நிலை வந்து விட்டது. ஆதலால், இனி தேர்தல் சின்னம் தேவையில்லை; மக்கள் வேட்பாளரின் பெயரை படித்து ஓட்டுப் போடுவார்கள் என்றாகி விட்டால், கட்சி அலுவலகத்துக்கு, சீட்டு கேட்டு யாரும் வந்து நிற்கப்போவதில்லை. அந்த ஒரு சாதரண மாற்றத்திலேயே, கட்சிகள் அழிந்து போய்விடும். ஆக, மாறிவரும் மாற்றங்களை உணர்ந்து, புதிய வழியில் சிந்தியுங்கள்.

கடல் என்று இருந்தால், புயல் வரத்தான் செய்யும். புயல் வருமுன் காப்பவனே அறிவாளி; வந்தபின் தவிப்பவன் ஏமாளி.

ஆக, அரசு நிர்வாகத்துக்கு ஸ்திரத்தன்மை வேண்டும். அதுதான் முக்கியமான இன்றைய தேவை. அந்த தேவையை, மக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்துத்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாற்றாக வேறு ஏதாவது வழியிருந்தாலும், அதனை செயல்படுத்துங்கள்.

மாற்றாக, சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, ஒரு முறை மாநில முதல்வரை தேர்வு செய்து விட்டால், பதவிப் பிரமாணம் எடுத்து விட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அவர்தான் மாநில முதல்வர்; அந்த முதல்வரை, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, பதவியை பறிக்க இயலாது என்று கொண்டு வாருங்கள்.

அப்படி செய்தால், கட்சிகளும் காப்பாற்படும். அரசு நிர்வாகமும் ஸ்திரத்தன்மையை அடையும். 'ஆட்சி கலைப்பு' என்ற பயமில்லாமல், தெளிவாக சிந்தித்து, முடிவெடுத்து, செயலாற்ற முடியும்.

மக்கள் நம்பிக்கைவைத்து ஓட்டுப்போட்டு சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைக்கின்றனர். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைவைத்து, மாநில முதல்வரை ஒருமுறை, ஒரே ஒரு முறை மட்டுமே, தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான். அதற்குபிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையேயில்லை; அதை முற்றிலுமாக நீக்கிவிடலாம்.

ஆக, ஏதாவது உருப்படியாக செய்யுங்க; புலம்புதை விட்டுட்டு; இலங்கை குடுமக்களை, அவுங்க அரசாங்கமே அழிப்பதை, உங்களாலே ஒன்னும் செய்ய முடியாது; எல்லோரும்போல, நீங்களும் சேர்ந்து தொலைக்காட்சியில், இண்டர்நெட்டில் வேடிக்கையை மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால், 'ஆட்சி கலைப்பு', உள்நாட்டு விவகாரம். அதையாவது சரி செய்யலாமே.

சனி, 7 பிப்ரவரி, 2009

பிரபலங்களின் பார்வையில் "கிறிஸ்துமஸ்"

மனிதன் தான் பிறந்தது முதல் கொண்டாட்டங்களையும் சடங்குகளையும் உருவாக்கி கொண்டான். பண்டிகை என்பது மனித குலத்தில் ஒரு வளமான பண்பாடு.

இன்னும் சொல்லப்போனால் எப்போதும் அழுதுக்கொண்டும், முட்டி மோதிக்கொண்டும் இருப்பது மட்டுமே மனித குலத்தின் இயல்பல்ல.

கடுமையான நெருக்கடிகளின் மத்தியிலேயும் மகிழ்ச்சியின் ஒளிக்கீற்றைக் கண்டு குதூகலிப்பது மனித இயல்பு.

சாமான்யன் முதல் சாம்ராஜ்யங்களை ஆள்வோர் வரை கொண்டாட்டமென்பது பொதுதான். ஆனால் கொண்டாடுகிற விதம்தான் வித்தியாசமானது.

கிறிஸ்துமஸ் ஒரு மனித நேய விழா. பிரபலங்கள் எப்படி கிறிஸ்துமஸை பார்க்கிறார்கள் என்பதைப் பார்ப்போமா.

தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் அருட் திரு. வின்சென்ட் சின்னதுரை, டி.வி. பிரபலம் ஜேம்ஸ் வசந்தன், திரைப்பட இசை அமைப்பாளர் இமான், திரைப்பட பின்னணி பாடகி கிரேஸ், சிறுகதை எழுத்தாளர் வினோலியா நீதி ஆகியோரை சந்தித்தோம்.

பேதங்கள் இல்லாத, பிளவுகள் இல்லாத சமத்துவ எண்ணம் கொண்ட, மனித நேயம் கொண்ட, அழுவாரோடு அழுது மகிழ்வாரோடு மகிழ்கிற சமுதாயமாய், மனிதனாய் நாம் மாற வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதே இக்கிறிஸ்மஸ் பெருவிழா...

கிறிஸ்துமஸ் என்பது கொடுக்கும் காலம். வசூலிக்கும் காலமல்ல. தேவன் தன் ஒரே மகனையே இந்த மண்ணுக்காக "கொடுத்த" காலம். எனவே வசூல் அல்லது நன்கொடை என்ற பெயரில் யாரிடமும் பெறாமல் நாமே ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும்...

கிறிஸ்துமஸ் காலங்களில் கொஞ்சம் அதிகமான உதவிகள் செய்வோம். முன்பெல்லாம் வரும் வாழ்த்துக்களைவிட இப்போது சினிமா துறைக்கு வந்த பின் திரைப்பட துறையினரிடமிருந்து வாழ்த்துக்கள் வருகிறது...

இந்த வருட கிறிஸ்துமஸுக்கு ஒரு சிறப்பு உண்டு. மடிப்பாக்கத்தில் அப்பா வீட்டில் மூன்றாவது மாடியில் ஒரு சேப்பல் (சர்ச்) கட்டியுள்ளார். அதில் இந்த வருட கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று உள்ளம் பூரிக்கிறார் கிரேஸ்...

கடவுள் தன் சொந்த மகனையே இந்த உலகுக்கு தந்த நாள் கிறிஸ்துமஸ். கடவுள் மனிதனை அளவுக்கு அதிகமாக நேசித்ததன் விளைவு தான் கிறிஸ்துமஸ்...

இயேசுநாதர் தே‌ர்‌ந்தெடுத்த 12 சீடர்கள்!

இம்மானிட குலத்தின் மீட்பராக இவ்வுலகில் தோன்றியவர் இயேசுபிரான் என்பதை அறிவோம்.

இவரை பின்பற்றும் கோடிக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளனர்.

இயேசுநாதரின் தோற்றம், பின்னர் அவரது போதனைகளைப் பொறுக்காமல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தது குறித்தும் ஏற்கனவே அறிந்தோம்.

இந்த கட்டுரையில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, அவரது போதனைகளைப் பின்பற்றிய 12 சீடர்கள் பற்றியும், அதன்பின் வந்த 2 சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

இஸ்ரேலின் பெத்லேகம் என்னும் ஊரில் சுமார் இரண்டாயிரத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் இவ்வுலகில் பிறந்தார். இவரின் தந்தை யோசேப்பு, தாயார் மரியாள்.

இயேசுபிரான் வாழ்ந்த முப்பத்து மூன்றரை ஆண்டுகளில் கடைசி மூன்றரை ஆண்டுகள் அவரே தே‌ர்‌ந்தெடுத்த 12 சீடர்கள் அவருடன் இருந்தனர்.

12 சீடர்களின் பெயர்கள் : (மத்தேயு 10 : 2-4)

1. பரிசுத்த சீமோன் (பேதுரு என்று அழைக்கப்பட்டவர்)
2. பரிசுத்த அந்திரேயா
3. பரிசுத்த யாக்கோபு (செபெதேயுவின் குமாரன்)
4. பரிசுத்த யோவான்
5. பரிசுத்த பிலிப்பு
6. பரிசுத்த பர்த்தலேமியு
7. பரிசுத்த தோமா
8. பரிசுத்த மத்தேயு
9. பரிசுத்த யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்)
10. பரிசுத்த ததேயு
11. பரிசுத்த சீமோன் (கானானியன்)
12. யூதாஸ் காரியோத் (இயேசுவைக் காட்டிக் கொடுத்ததால் இவரின் பெயருக்கு முன்பு பரிசுத்த என்ற வார்த்தை சேர்க்கப்படமாட்டாது.)

யூதாஸ் காரியோத் சீடர் பங்கினை இழத்தல் :

இயேசுநாதரின் போதனைகளை அன்றிருந்த ரோமானிய அரசும், யூத மதவாதிகளும் சிறிதும் விரும்பவில்லை. இயேசுவை பழித் தீர்க்க வகை தேடினர்.

அவரைப் பிடித்து பழி சுமத்த சதி செய்தனர். இத்திட்டத்தின் படி இயேசுநாதரின் பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்தை அணுகி 30 வெள்ளிக்காசுகளை கொடுத்தனர்.

இதற்கு கைமாறாக காரியோத், இயேசுநாதரைக் காட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டு அதன்படியே செய்தான்.

ரோமானிய அரசு, குற்றமற்ற இயேசுவின் மேல் பழி சுமத்தியது, இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

இப்பாவச் செயலைக் கண்ட யூதாஸ் மனமுடைந்தான். குற்றமில்லா இரத்தத்திற்கு பழியாகிவிட்டதை எண்ணி வேதனையடைந்து தான் வாங்கிய 30 வெள்ளியை வாங்கியவர்களிடம் கொடுக்கச் சென்றான்.
அவர்களோ மறுத்துவிட, அப்பணத்தை தேவாலயத்தில் எறிந்துவிட்டு தூக்குக் கயிற்றில் உயிர் விட்டான். (மத். 27 : 5)

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

விவிலியத்தின் விளக்கம்

விவிலிய நூல் (BIBLE) கிறித்துவர்களின் புனித நூலாகும்.

ஆங்கிலத்தில் பைபிள் என்பது கிரேக்க வார்த்தையான பிப்லியா (BIBLIA)வின் மொழிபெயர்ப்பாகும். பிப்லியா என்றால் புத்தகங்கள் என்று கிரேக்க மொழியில் கூறுவர்.

இப்புனித நூல் பழைய ஏற்பாடு (Old Testament), புதிய ஏற்பாடு (New Testament) என்று இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இயேசுநாதரின் பிறப்புக்கு முன் நடந்தவைகளின் தொகுப்பு பழைய ஏற்பாடாகும். இயேசுநாதரின் பிறப்பும், அதன்பின் ஏறக்குறைய 100 ஆண்டுகள் வரை நிகழ்ந்தவைகளின் தொகுப்பு புதிய ஏற்பாடாகும்.

இயேசுநாதரின் பிறப்பின் அடிப்படையில்தான் இன்றைய உலக சரித்திரமும் கி.மு. (BC), கி.பி. (AD) என்று பிரித்துக் காண்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஏற்பாடு :

இப்பகுதி உலக தோற்றமுதல் பல நிகழ்ச்சிகளை காலப் பகுதிக்கேற்ப பலரால் எழுதப்பட்ட தொகுப்பாகும்.

இது பழம் பெரும் நிகழ்வுகளை கொண்டுள்ளதால் தொன்றுதொட்டு வாய்மொழி வாயிலாகவும், பின்னர் மனிதன் எழுதும் திறனைப் பெற்றபோது காலப் பகுதிக்கேற்ப எபிரேயு (Hebrew), அரமைக் (Aramaic), சிரியாக் (Syriac), லத்தீன் (Latin), கிரேக்கம் (Greek) என்னும் மொழிகளில் எழுத்து வடிவம் பெற்றது.

இதில் சில மொழிகள் இப்போது வழக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் :

I. ஆகமம் (PENTATEUCH) (5) :


1. ஆதியாகமம்
2. யாத்திராகமம்
3. லேவியாகமம்
4. எண்ணாகமம்
5. உபாகமம்.

II. சரித்திரம் (HISTORICAL) (12) :

1. யோசுவா
2. நியாயாதிபதிகள்
3. ரூத்
4. I சாமுவேல்
5. II சாமுவேல்
6. I ராஜாக்கள்
7. II ராஜாக்கள்
8. I நாளாகமம்
9. II நாளாகமம்
10. எஸ்றா
11. நெகேமியா
12. எஸ்தர்

III. பாடல் (POETICAL) (5) :

1. யோபு
2. சங்கீதம்
3. நீதிமொழிகள்
4. பிரசங்கி
5. உன்னதப்பாட்டு

IV. தீர்க்கதரிசனம் (PROPHETICAL) :

பெரிய தீர்க்கதரிசிகள் (MAJOR PROPHETS) (5) :

1. ஏசாயா
2. ஏரேமியா
3. புலம்பல்
4. எசேக்கியல்
5. தானியேல்

சிறிய தீர்க்கதரிசிகள் (MINOR PROPHETS) (12) :

1. ஓசியா
2. யோவேல்
3. ஆமோஸ்
4. ஓபதியா
5. யோனா
6. மீகா
7. நாகூம்
8. ஆபகூக்
9. செப்பனியா
10. ஆகாய்
11. சகரியா
12. மல்கியா

பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் (Books of Apocrypha) :

கத்தோலிக்க கிறித்துவர்கள் (Catholics) மேலே குறிப்பிட்ட 39 புத்தகங்களுடன் 7 புத்தகங்களை சேர்த்து மொத்தம் 46 புத்தகங்களை பழைய ஏற்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

1. தொபியாசு ஆகமம்
2. யூதித் ஆகமம்
3. ஞான ஆகமம்
4. சீராக் ஆகமம்
5. பாரூக் ஆகமம்
6. I மக்கபே ஆகமம்
7. II மக்கபே ஆகமம்

இது கிறித்துவர்களிடையே பெரிய வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் யூதர்களின் 46 புத்தகங்களடங்கிய கிரேக்க மொழி பெயர்ப்பு (Greek Translation) பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர்.

புராடஸ்டன்ட் கிறித்துவர்கள் (Protestant-Christians) 39 புத்தகங்களடங்கிய எபிரேயு பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர்.

புதிய ஏற்பாடு :

புதிய ஏற்பாட்டில் 27 ஆகமங்கள் உள்ளன. அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம் :

I. வாழ்க்கை வரலாறு (BIOGRAPHICAL) (5) :

1. மத்தேயு
2. மாற்கு
3. லூக்கா
4. யோவான்

II. வரலாறு (HISTORICAL) (1) :

(1) அப்போஸ்தலருடைய நடபடிகள்

III. பரி. பவுலின் நிரூபம் (PAULINE EPISTLES) (14) :

1. ரோமர்
2. I கொரிந்தியர்
3. II கொரிந்தியர்
4. கலாத்தியர்
5. எபேசியர்
6. பிலிப்பியர்
7. கொலொசெயர்
8. I தெசலோனிக்கியர்
9. II தெசலோனிக்கியர்
10. I தீமோத்தேயு
11. II தீமோத்தேயு
12. தீத்து
13. பிலமோன்
14. எபிரேயர்

IV. மற்றைய நிரூபம் (GENERAL EPISTLES) (7) :

1. யாக்கோபு
2. I பேதுரு
3. II பேதுரு
4. I யோவான்
5. II யோவான்
6. III யோவான்
7. யூதா

V. தீர்க்கதரிசனம் (PROPHETICAL)

(1) வெளிப்படுத்தின விசேஷம்

ஆக, பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் சேர்த்து கத்தோலிக்க கிறித்துவர்கள் 73 (46+27) புத்தகங்களடங்கிய விவிலிய நூலை பின்பற்றுகின்றனர். புராடஸ்டன்ட் கிறித்துவர்களின் விவிலிய நூல் 66 (39+27) புத்தகங்களை கொண்டுள்ளது.

இயேசுவை காட்டிக் கொடுத்தல்

அந்நாட்களில் யூத மதவாதிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் எப்பொழுதும் இயேசுவிற்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர்.

காரணம் இயேசு வாழ்க்கைப் பாதையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடி வந்தார். எனவே இயேசுவை தந்திரமாக பிடித்து கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி இயேசுவைப் பிடிக்க அவருடன் இருந்த பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாசுக்கு (Judas) பெருந்தொகையை கொடுத்தனர்.

யூதாஸ் நள்ளிரவில் இயேசு இருக்கும் கெத்சமனே தோட்டத்திற்கு சென்றான். அவன் பின்னே ஒரு கூட்டமும் சென்றது. தவறுதலாக வேறு யாரையும் காட்டிக் கொடுக்காமலிருக்க முன் கூட்டியே திட்டமிட்டு இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தான்.

இயேசுவின் அன்பு :

மக்கள் கூடி விட்டனர். அங்கு சூழ்ந்திருந்தவர்களில் ஒருவன் பட்டயத்தை உருவி இயேசுவை பிடிக்க வந்த பிரதான ஆசாரியரின் (Chief Priest) வேலைக்காரனுடைய காதை வெட்ட, இயேசு அவனை தொட்டு சுகமாக்கினார்.

வெட்டியவனை நோக்கி "பட்டயத்தை உரையில் போடு, பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தால் அழிவான்" என்றார்.

உலகம் கைவிடுதல் :

இயேசு பிடிக்க வந்தவர்களை நோக்கி கள்வனைப் பிடிக்க வருவது போல் வந்தீர்களே. நான் தினமும் தேவாலயத்தில் உங்களுடன் இருக்கையில் நீங்கள் ஏன் பிடிக்கவில்லை.

"இதுவோ உங்கள் வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது (Power of darkness)" என்றார். அவர் சீடர்களில் ஒருவரான பேதுருவைத் தவிர மற்ற யாவரும் ஓடிவிட்டனர்.

கூட்டத்தினர் பேதுருவை அடையாளம் காட்டினர். ஆனால் பேதுருவோ நான் அல்ல என்று ஒரு முறையல்ல, மூன்று முறை கூறிவிட்டான். இந்த அறியாமைக்கு தனிமையிலே மனங்கசந்து அழுதான் என்று விவிலியம் கூறுகிறது.

சட்டம் கட்டழிந்த காட்சி :

மக்கள் கூட்டத்தினர் இயேசுவை குட்டினார்கள், முகத்தில் காறி துப்பி அறைந்தனர். உன்னை அடித்தவன் யார் என்று ஞான திருஷ்டியில் சொல் என்று ஏளனம் பண்ணினார்கள்.

இரவில் ஆலோசனை சங்கத்தின் முன் (Jewish Council) :

இயேசுவை பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டு சென்றனர். மற்ற மதவாதிகளும் அங்கிருந்தனர். கொலை செய்ய பொய் சாட்சிகளைத் தேடினர். அகப்படவில்லை. கடைசியில் நீ "தேவனுடைய குமாரனா" என்றனர்.

இயேசு : "நீங்கள் சொல்கிற படியே நான்" என்றார். உடனே வேறு சாட்சி தேவையில்லை. இவரே தன் வாயினால் சொல்லக் கேட்டோமே என்றனர்.

ரோம தேசாதிபதியாகிய பிலாத்துவின் முன் (Roman Governor, Pontius Pilote) :

பொழுது விடிந்துவிட்டது. ஆலோசனைச் சங்கத்தினர் இயேசுவை பிலாத்துவிடம் அழைத்துச் சென்று அவர் பேரில் சாட்டிய குற்றச்சாட்டுக்கள் :

- தன்னை கிறிஸ்து என்னப்பட்ட ராஜா (Christ a King) என்பது.

- ராயருக்கு வரி (Tribute to Ceasar) கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லி மக்களை கலகப்படுத்துவது.

பிலாத்து யாவற்றையும் கேட்டு, இயேசுவை நோக்கி "நீ யூதருடைய ராஜாவா" என்று கேட்க, "நீர் சொல்கிறபடி தான்" என்றார்.

யூதாஸ் மரணம் :

இதற்கிடையில் யூதாஸ், ஒரு குற்றமுமில்லாத இயேசுவை தான் காட்டிக் கொடுத்ததினாலே அவர் மரண தண்டனை அடைவதை உணர்ந்து மனம் உடைந்தான். அவன் காட்டிக் கொடுக்கப் பெற்ற பணத்தை தேவாலயத்தில் எறிந்து விட்டு தூக்கில் உயிர்விட்டான்.

ஏரோது(Herod)வின் விசாரணை :

மதவாதிகளையும், மக்கள் கூட்டத்தினரையும், பிலாத்து பார்த்து நான் இயேசுவிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்றான். அதற்கு அவர்கள் கலிலேயா தொடங்கி யூதேயா தேசம் வரை உபதேசம் பண்ணி ஜனங்களை கலகப்படுத்துகிறான் என்று கூறினார்.

இயேசு கலிலேயாவை சேர்ந்தவர் என்பதை கேட்ட பிலாத்து, கலிலேயா நாடு ஏரோது ராஜாவின் அதிகாரத்திற்குள் வருகிறது என்று கூறி ஏரோதுவிடம் அனுப்பி வைத்தான்.

பிலாத்துவின் விசாரணை தொடர்கிறது :

ஏரோது இயேசுவை இதுவரைக் கண்டதில்லை. அவரை பார்க்க சமயம் கிடைத்தது. பல காரியங்களை இயேசுவிடம் கேட்டான்.

மதவாதிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். ஏரோது ராஜா இயேசுவுக்கு மினுக்கான உடை அணிவித்து பிலாத்துவிடம் திரும்ப அனுப்பி வைத்தான்.

முன்பு ஏரோதுவும் பிலாத்துவும் பகைவர். ஆனால் இயேசுவின் விசாரணையில் நண்பர்களானார்கள்.

பிலாத்து யாவரையும் அழைத்து நீங்கள் கூறிய குற்றச்சாட்டை உங்கள் முன் விசாரித்தேன். நான் ஒரு குற்றமும் காணவில்லை.

ஏரோதும் ஒரு குற்றமும் காணவில்லை. ஆகவே விடுதலையாக்குகிறேன் என்று பிலாத்து கூறினான்.

பரபாஸ் (Ba rabbas) விடுதலை :

பரபாஸ் என்பவன் ஒரு கொலை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டிருந்தான்.

அந்நாட்களில் பண்டிகை (Feast) தோறும் ஒருவனை விடுதலையாக்குவது வழக்கம். இதன்படி பிலாத்து இயேசுவை விடுதலையாக்க முனைந்தான்.

இதனைக் கேட்ட ஜனங்கள் பரபாஸை விடுதலையாக்கும் என்றனர். பிலாத்துவோ, மூன்று முறை இயேசு மரணத்துக்கு கேதுவான ஒரு குற்றமும் செய்யவில்லையே என்று கூறியும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

மாறாக சிலுவையில் அறையும் என்று உறத்த சத்தத்தோடு கூறினார்கள். பிலாத்துவும் மக்களின் எண்ணத்திற்கிசைய மனம் மாறினான்.

இயேசுவின் மேல் பழி :

கலகம் வலுவடைவதை பிலாத்து கண்டான். தன் பிரயாசத்தினால் பிரயோசனமில்லை என்று கண்டு, பிலாத்து தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி, இந்த நீதிமானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த இவ்வழக்கின் முடிவே உலக வரலாற்றை இரண்டாக பிரித்து விட்டது.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

பிளாகர் உதவி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

ஒரு பிளாகர் கணக்கை எவ்வாறு உருவாக்குவது?

ஒரு பிளாகர் வலைப்பதிவை எவ்வாறு உருவாக்குவது?

எனது வலைப்பதிவில் எவ்வாறு இடுகையிடுவது?

படங்களை எப்படி இடுகையிடுவது?

என்னால் உள்நுழைய முடியவில்லை. என்ன செய்ய வேண்டும்?

ஒரு வலைப்பதிவை எவ்வாறு நீக்குவது?

எனது கணக்கை எவ்வாறு ரத்து செய்வது?

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இடுகையிடுமாறு ஒரு வலைப்பதிவை வைத்திருக்க முடியுமா?

எனது சுயவிவரத்தில் புகைப்படத்தை எவ்வாறு சேர்ப்பது?

என்னுடைய வெளிப்புற வலை ஹோஸ்டிற்கு ஒரு FTP (அல்லது sFTP) இணைப்பை எவ்வாறு அமைப்பது?

எனது வலைப்பதிவில் ஒரு தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட டொமைனை எவ்வாறு பயன்படுத்துவது?

பிளாகர் மொபைல் எவ்வாறு செயல்படுகிறது?

எனது இடுகைகளுக்கு எவ்வாறு லேபிளிடுவது?

எனது வலைப்பதிவில் AdSense -ஐ எவ்வாறு சேர்ப்பது?

நான் எனது வலைப்பதிவிற்கான தள ஓடையை எப்படிச் செயலாக்குவது?

?கொடியிடு? பொத்தான் என்பது என்ன?

நான் எனது வலைப்பதிவில் உள்ள கருத்துரைகளை எப்படி மதிப்பீடு செய்வது?

பிளாகரின் தளவமைப்பு அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

இடுகைப் படிவத்தில், சொல் சரிபார்ப்பு ஏன் உள்ளது?

எனது வலைப்பதிவு ஏன் முடக்கப்பட்டது?

இடுகையிடும் போது, விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பயன்படுத்த முடியுமா?

ஒலிபெயர்ப்பு அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

பிளாகரின் இடுகைத் திருத்தியை எவ்வாறு பயன்படுத்துவது?

எனது வலைப்பதிவிற்கான தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட டொமைன் பெயரை எங்கு வாங்க முடியும்?

எனது வலைப்பதிவில் காண்பிக்கப்படும் தேதிகளின் வடிவமைப்பை எப்படி மாற்றுவது?

இடுகை டெம்ப்ளேட் என்பது என்ன?

பின்னிணைப்புகள் என்பவை என்ன, அவற்றை நான் எவ்வாறு பயன்படுத்துவது?

சொல் சரிபார்ப்பு விருப்பம் என்பது என்ன?

எனது வலைப்பதிவின் தளவமைப்பின் HTML ஐத் திருத்த முடியுமா?

எனது வலைப்பதிவின் தலைப்பு எங்கு தோன்றும்?

URL என்பது என்ன?

?பட்டியலிடுதல்? அமைப்பு என்ன செய்யும்?

குறியீடாக்க அமைப்பு என்ன செய்யும்?

FTP சர்வர் என்பது என்ன?

FTP பாதை என்பது என்ன?

அட்டவணையை மீண்டும் வெளியிடுவதற்கும் முழு வலைப்பதிவையும் மீண்டும் வெளியிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

சட்டப்பூர்வ சிக்கல் குறித்து நான் எங்கு புகார் அளிக்கலாம்?


1. ஒரு பிளாகர் கணக்கை எவ்வாறு உருவாக்குவது?

பிளாகர் முகப்பு பக்கத்தில், "வலைப்பதிவை உருவாக்குக" என்ற பொத்தானை கிளிக் செய்யவும். பின்வரும் பக்கத்தில் நீங்கள் ஒரு Google கணக்கை உருவாக்குமாறு கேட்கப்படுவீர்கள்.

Google கணக்கை மற்ற Google சேவைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். Gmail, Google குழுக்கள் அல்லது orkut ஆகியவற்றின் மூலமாக முன்பே உங்களுக்கு ஒரு Google கணக்கு இருந்தால், முதலில் உள் நுழையவும்.

உள் நுழைந்த பின்னர், ஒரு காட்சிப் பெயரை உள்ளிட வேண்டும் மற்றும் பிளாகரின் சேவை விதிமுறைகளை ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் இவற்றைச் செய்து முடித்தவுடன், ஒரு வலைப்பதிவை உருவாக்குமாறு கேட்கப்படுவீர்கள், பின்னர் தொடங்குங்கள்!

2. ஒரு பிளாகர் வலைப்பதிவை எவ்வாறு உருவாக்குவது?

பிளாகரின் ஹோஸ்டிங் சேவையான Blog*Spot இல் ஒரு இலவச வலைப்பதிவை உருவாக்கும் முன்பு, blogger.com இல் ஒரு கணக்கைப் பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் blogger.com இல் உள் நுழைந்தவுடன், ?வலைப்பதிவை உருவாக்குக? என்ற இணைப்பை கிளிக் செய்யவும். படி 2 இல், ஒரு தலைப்பு மற்றும் முகவரியை (URL) உள்ளிடவும்.

நீங்கள் இந்த பக்கத்தில் காண்பிக்கப்படும் சரிபார்ப்பு சொல்லையும் தட்டச்சு செய்ய வேண்டும். முடிந்ததும், தொடருக? என்பதை கிளிக் செய்யவும்.

படி 3 இல், உங்கள் வலைப்பதிவிற்கு ஒரு டெம்ப்ளேட்டைத் தேர்வு செய்யலாம்; இது, நீங்கள் உங்கள் வலைப்பதிவை வெளியிடும்போது அது எப்படி காட்சியளிக்கும் என்பதாகும்.

அடுத்து, பிளாகர் உங்கள் வலைப்பதிவை உருவாக்கி, BlogSpot இல் உங்கள் வலைப்பதிவிற்கென இடத்தை ஒதுக்கீடு செய்யும். உங்கள் முதல் இடுகையை உருவாக்கியவுடன், நீங்கள் தேர்வு செய்யும் முகவரியில் உங்கள் பக்கம் தோன்றும்.

3. எனது வலைப்பதிவில் எவ்வாறு இடுகையிடுவது?

உங்கள் டாஷ் போர்டில், நீங்கள் இடுகையிட விரும்பும் வலைப்பதிவிற்கு அடுத்ததாக இருக்கும் ?புதிய இடுகை? என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

அடுத்ததாக நீங்கள், புதிய இடுகையை உருவாக்கவும் என்ற பக்கத்தைக் காண்பீர்கள். உங்கள் இடுகைக்கு தலைப்பு கொடுப்பதிலிருந்து தொடங்குங்கள் (விரும்பினால்), பின்னர் இடுகையை உள்ளிடுங்கள்.

இதை முடித்ததும், அது செல்வதற்குத் தயாராக உள்ளதா என சரிபார்க்க ?முன்னோட்டம்? என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

உங்கள் இடுகை திருப்திகரமாக இருக்கிறது என்றால், வெளியிடு? என்ற பொத்தானை கிளிக் செய்யவும். இதனால் உங்கள் புதிய இடுகை வெளியிடப்படும்.

4. படங்களை எப்படி இடுகையிடுவது?

இடுகை திருத்தி கருவிப் பெட்டியில் உள்ள பட ஐகானைப் பயன்படுத்தி புகைப்படங்களைப் பதிவேற்றலாம். இந்த ஐகானை கிளிக் செய்யும்போது, உங்கள் கணினியிலிருந்து ஒன்று அல்லது மேற்பட்ட படங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் ஒரு சாளரம் தோன்றும்.

நீங்கள் விரும்பும் ஒன்றின் இருப்பிடத்தை தேர்வு செய்ய, ?உலாவு? என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

மாற்றாக, உங்கள் இடுகையில் செருக, முன்பே ஆன்லைனில் உள்ள ஒரு படத்தின் URL ஐ உள்ளிடலாம். ஒரு தளவமைப்பைத் தேர்வு செய்வதற்கான இணைப்பில் கிளிக் செய்தால், நீங்கள் உங்கள் படங்கள் இடுகையில் எப்படித் தோன்ற வேண்டும் என்பதைத் தனிப்பயனாக்கம் செய்து கொள்ளலாம்.

இடது, மையம், வலது ஆகிய விருப்பங்கள் படங்களைச் சுற்றிலும் உரை எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிக்கும். இடுகைப் பகுதிக்குள் படங்களை வெவ்வேறு அளவிற்கு மாற்ற இந்த அளவு என்ற விருப்பம் பயன்படுகிறது.

5. என்னால் உள்நுழைய முடியவில்லை. என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் உங்கள் Google கணக்கு தகவலை மறந்துவிட்டால், பிளாகரின் உள்நுழைவு பக்கத்தில், "கடவுச்சொல்" என்பதற்கு அருகிலுள்ள "?" ஐ கிளிக் செய்வதன் மூலம், உங்கள் Google கணக்கு உள்நுழைவு தகவலை நீங்கள் மீண்டும் பெறலாம் அல்லது Google கணக்குகளுக்கான கடவுச்சொல் உதவி பக்கத்தைப் பயன்படுத்தலாம்.

உங்கள் Google கணக்கு பயனர் பெயரானது உங்கள் கணக்கை உருவாக்க நீங்கள் பயன்படுத்திய முழு மின்னஞ்சல் முகவரியாகும் (எ.கா. yourname@example.com).

நீங்கள் உங்கள் கணக்கில் உள்நுழைய முடிந்து, ஆனால் உங்கள் டாஷ் போர்டில் சரியான வலைப்பதிவுகளைப் பார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் தவறான கணக்கில் உள்நுழைந்திருக்கக்கூடும்.

இது போன்ற நேரங்களில், தேவையானால் கடவுச்சொல் உதவி படிவத்தை பயன்படுத்தி, உங்கள் அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் பயன்படுத்தி உள்நுழையுங்கள்.

நீங்கள் ஒரு கணக்கை மட்டும்தான் கொண்டிருக்கிறீர்கள் என நினைத்தாலும் இதை முயற்சி செய்து பாருங்கள். பல நேரங்களில் சிலர் அறியாமலே, கூடுதல் கணக்குகளை உருவாக்கி வைத்திருப்பார்கள்,

ஆகவே உங்கள் விவகாரத்திலும் இதைப் பயன்படுத்துவதே, உங்கள் வலைப்பதிவை மீட்பதற்கான விரைவான வழியாகும்.

6. ஒரு வலைப்பதிவை எவ்வாறு நீக்குவது?

உங்கள் முழு வலைப்பதிவையும் நீக்க, அமைப்புகள் | அடிப்படை என்ற தாவலுக்குச் செல்லவும். இப்போது, நீங்கள் சரியான வலைப்பதிவில் தான் இருக்கிறீர்களா என்றும் நிச்சயமாக அந்த வலைப்பதிவை நிரந்தரமாக நீக்க விரும்புகிறீர்களா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பின்னர், இந்த வலைப்பதிவை நீக்கு? என்பதை கிளிக் செய்யவும். உங்கள் வலைப்பதிவு உங்கள் சொந்த சர்வரிலேயே இருந்தால் அதன் கோப்புகளை நீக்க முடியாது.

உங்கள் சர்வரை ஒரு FTP கிளையண்டின் வழியாக இணைப்பதன் மூலம், நீங்கள் அவற்றைக் கைமுறையாக நீக்கலாம்.

7. எனது கணக்கை எவ்வாறு ரத்து செய்வது?

உங்கள் வலைப்பதிவுகள் உட்பட உங்கள் Google கணக்கை நீக்க, Google கணக்குகள் முகப்பு பக்கத்தில் உள்நுழையவும். உள்நுழைந்தவுடன், எனது சேவைகள்? என்பதற்கு அடுத்துள்ள ?திருத்து? என்பதை கிளிக் செய்யவும்,

பின்னர் உங்கள் கணக்கை நீக்க உதவும் ஒரு பக்கத்தை அடைவீர்கள். ஒரு கணக்கை நீக்குவதால், அந்த கணக்கோடு கூடிய உங்கள் orkut சுயவிவரம், உங்கள் iGoogle பக்கம் மற்றும் உங்கள் பிளாகர் வலைப்பதிவுகள் போன்ற அனைத்து Google சேவைகளும் நீக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இடுகையிடுமாறு ஒரு வலைப்பதிவை வைத்திருக்க முடியுமா?

ஆம், இவை ?குழு வலைப்பதிவுகள்? என அழைக்கப்படுகின்றன. அடிப்படையாக, முதலில் ஒரு நபர் ஒரு வலைப்பதிவை உருவாக்க வேண்டும், பின்னர் மற்றவர்களை அதில் இணைய அழைப்பு விடுக்க வேண்டும்.

குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளாகவோ அல்லது சாதாரண இடுகையிடுபவர்களாகவோ இருக்கலாம். நிர்வாகிகள் (அவர்களுடையதை மட்டும் இன்றி) அனைத்து இடுகைகளையும் திருத்த முடியும்,

குழு உறுப்பினர்களைச் சேர்க்க மற்றும் அகற்ற முடியும் (மற்றும் நிர்வாகி அணுகலையும் வழங்க முடியும்), மற்றும் வலைப்பதிவு அமைப்புகளை மாற்றியமைக்கவும் முடியும். நிர்வாகிகளல்லாதவர்கள் வலைப்பதிவில் இடுகையிட மட்டுமே முடியும்.

மற்றவர்களை ஒரு வலைப்பதிவிற்கு அழைக்க, முதலில் அமைப்புகள்| அனுமதிகள் என்ற தாவலுக்குச் செல்லுங்கள், பின்னர் "ஆசிரியர்களைச் சேர்" என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து, நீங்கள் வலைப்பதிவிற்கு அழைப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை தட்டச்சு செய்யுங்கள்; அவர்கள் விரைவில் ஒரு அழைப்பு மின்னஞ்சலைப் பெறுவார்கள். அவர்களுக்கு Google கணக்குகள் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,

இல்லையெனில், புதிதாக ஒன்றை உருவாக்குமாறு கேட்கப்படுவார்கள். நீங்கள் அழைப்புகளை அனுப்பத் தயார் எனும்போது, அழைக்கவும்? என்பதை கிளிக் செய்யவும். புதிய குழு உறுப்பினர் வெற்றிகரமாக வலைப்பதிவில் சேரும் போது, ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

9. எனது சுயவிவரத்தில் புகைப்படத்தை எவ்வாறு சேர்ப்பது?

முதலில், உங்கள் டாஷ் போர்டில் உள்ள ?சுயவிவரத்தைத் திருத்து? என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

அங்கிருந்து, சுயவிவர படத்தின் URL ஐ படிவத்தில் உள்ளிடவும், பின்னர் பக்கத்தின் கீழ்ப்புறமுள்ள ?சேமி? பொத்தானை கிளிக் செய்யவும்.

உங்களிடம் முன்பே வேறு இடங்களில் வெளியிடப்பட்ட புகைப்படம் இல்லையென்றால், முதலில் உங்கள் வலைப்பதிவிற்கு ஒரு புகைப்படத்தை இடுகையிடலாம்.

இதைச் செய்த பின்னர், HTML ஐ திருத்து பயன்முறை செயலில் இல்லாவிட்டால், இடுகை திருத்தியை HTML ஐ திருத்து பயன்முறைக்கு மாற்றவும்.

இப்போது, புகைப்படத்தின் URL ஐ நகலெடுத்து, இந்த URL ஐ உங்கள் சுயவிவரத்தில் உள்ள ?புகைப்பட URL என்ற புலத்தில் ஒட்டவும்.

பின்னர் பக்கத்தின் கீழ்ப்புறத்தில் உள்ள ?சேமி? பொத்தானை கிளிக் செய்யவும், அவ்வளவுதான் முடிந்தது. படம், 50 KB அல்லது அதற்குக் குறைவான அளவில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

10. நான் எனது வெளிப்புற வெப்ஹோஸ்டுக்கு ஒரு FTP (அல்லது sFTP) இணைப்பை எவ்வாறு அமைப்பது?

அமைப்புகள் | வெளியீடு-க்குச் சென்று ஒரு இணைப்பு முறையைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் அமைப்புகளை உள்ளிடுங்கள்.

இதைச் செய்து முடித்தவுடன், கீழே உள்ள ?அமைப்புகளைச் சேமி? பொத்தானை கிளிக் செய்து உங்கள் சர்வர் விவரங்களைச் சேமித்து, உங்கள் வலைப்பதிவை மறுவெளியீடு செய்யுங்கள்.

இயல்புநிலை போர்ட் எண்களைப் பயன்படுத்த வேண்டும் (FTP –க்கு :21 மற்றும் SFTP –க்கு :22) என்பதை நினைவில் கொள்ளுங்கள்; வேறு போர்ட்டைக் குறிப்பிடுவது பயன்படாது.

மேலும் சர்வர் முகவரி அல்லது பாதை அமைப்புகளில் http:// அல்லது ftp:// ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.

11. எனது வலைப்பதிவில் ஒரு தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட டொமைனை எவ்வாறு பயன்படுத்துவது?

உங்கள் வலைப்பதிவு முகவரியில் blogspot.com என்பது இருக்க வேண்டாம் என விரும்பினால், உங்களுக்கென தனியாக ஒரு டொமைனைப் பெறலாம்.

தொடர்ந்து உங்கள் உள்ளடக்கத்தை வழங்குவோம், ஆனால் அது உங்கள் புதிய முகவரியில் காண்பிக்கப்படும். இதை அமைப்பதில் மூன்று உறுப்புகள் உள்ளன:

உங்கள் டொமைன்

நீங்கள் முதலில் செய்யவேண்டியது mysite.com என்பது போன்ற ஒரு டொமைன் பெயரைத் தேர்வு செய்வது,

பின்னர் அதைப் பதிவு செய்வது. நீங்கள் உங்கள் டொமைன் பெயர்களை, பல்வேறு வேறுபட்ட பதிவாளர்களிடம் பதிவு செய்யலாம்.

DNS அமைப்புகள்

அடுத்ததாக நீங்கள், உங்கள் டொமைனை ghs.google.com உடன் இணைக்கும், DNS உடன் உங்கள் டொமைனுக்கான CNAME பதிவை உருவாக்க வேண்டும்.

இதைச் செய்வதற்கான சரியான வழிமுறை, உங்கள் டொமைன் பதிவாளரைப் பொருத்து வேறுபடும், ஆகவே நேரடியாக உங்கள் பதிவாளரைத் தொடர்பு கொள்ளுங்கள், அவர்கள் உங்களுக்கு உதவலாம்.

புதிய DNS பதிவு உடனடியாகச் செயல்படாமல் போகலாம், என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பிளாகர் அமைப்புகள்


இந்த நேரத்தில், உங்கள் வலைப்பதிவைப் பார்க்க விரும்பும் நபர்களை Google –க்கு திருப்பிவிட DNS சர்வரால் முடியும்,

ஆகவே Google உங்கள் டொமைனுக்கு சரியான வலைப்பதிவைத்தான் இணைத்துள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.

இதை நீங்கள் பிளாகரில் உங்கள் வலைப்பதிவிற்கான அமைப்புகள் | வெளியீடு என்ற தாவலில் செய்யலாம்.

நீங்கள் Blog*Spot இல் வெளியிடுகிறீர்கள் என்றால், மேலே தனிப்பயனாக்க டொமைனுக்கு உங்களை மாற்ற உதவும் ஒரு இணைப்பை காணலாம்.

அந்த இணைப்பை கிளிக் செய்யவும். Blog*Spot முகவரி அமைப்பு இப்போது உங்கள் டொமைனுக்கு மாறிவிடும்.

செயல்முறையின் தொடக்கத்தில், நீங்கள் பதிவு செய்த டொமைனை நிரப்புங்கள், பின்னர் உங்கள் அமைப்புகளைச் சேமிக்கவும்.

குறிப்புகள்:

உங்கள் டொமைன் வலைப்பதிவிற்கு அழைத்துச் செல்லவில்லை என்றால், அனைத்து DNS சர்வர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என உறுதிப்படுத்திக்கொள்ள இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் காத்திருங்கள்.

பின்னரும் அது வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் DNS அமைப்புகளைச் சரியாக உள்ளிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள பதிவாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் உண்மையான Blog*Spot முகவரி, தானாகவே உங்கள் புதிய டொமைனுக்கு அனுப்பிவைக்கும். இதனால் உங்கள் தளத்துக்கான இணைப்புகள் அல்லது புக்மார்க்ஸ் ஆகியவை தொடர்ந்து செயல்படும்.

நீங்கள் இந்த அம்சத்தை டொமைன்கள் (எ.கா. mysite.com) அல்லது துணை டொமைன்கள் (எ.கா. name.mysite.com) ஆகியவற்றுடன் பயன்படுத்தலாம்.

இருப்பினும், நீங்கள் துணை கோப்பகங்களைக் குறிப்பிட முடியாது (எ.கா. mysite.com/blog/) அல்லது ஒயில்ட்கார்டு (எ.கா. *.mysite.com) போன்றவை.

12. பிளாகர் மொபைல் எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு மொபைல் வலைப்பதிவைத் தொடங்க, go@blogger.com –க்கு ஒரு செய்தியை (அது ஒரு புகைப்படமாகவோ, ஏதேனும் உரையாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம்) அனுப்புங்கள், நாங்கள் உங்களுக்காக ஒரு வலைப்பதிவைத் தொடங்குவோம்.

செய்தியை அனுப்பிய பின்னர், நீங்கள் மொபைல் வலைப்பதிவு URL மற்றும் உங்கள் புதிய வலைப்பதிவிற்கு உரிமை கோரப் பயன்படும் டோக்கன் ஆகியவற்றுடன் ஒரு செய்தியைப் பெறுவீர்கள்.

உங்கள் வலைப்பதிவைப் பெற டோக்கனை, http://go.blogger.com -இல் உள்ளிடுங்கள். மொபைல் வலைப்பதிவைக் கோரல் Blogger.com அமைப்புகள் மற்றும் அம்சங்களுக்கு முழு அனுமதியைத் தரும்,

Google கணக்குடன் உங்கள் வலைப்பதிவை ஒருங்கிணைக்கவும் உதவும், மற்றும் உங்கள் முந்தைய வலைப்பதிவை மொபைல் வலைப்பதிவுடன் இணைக்க உதவுகிறது.

13. எனது இடுகைகளுக்கு எவ்வாறு லேபிளிடுவது?

ஒரு இடுகையை எழுதும்போது, படிவத்தின் கீழ்ப்பகுதியில் ?இடுகைகக்கான லேபிள்கள்? என்ற இடம் இருக்கும்.

நீங்கள் விரும்பும் லேபிள்களை, கமாவால் பிரித்து உள்ளிடுங்கள். நீங்கள் முன்பே பயன்படுத்தி லேபிள்களை காண்பிக்க "அனைத்தும் காண்பி" என்ற இணைப்பையும் கிளிக் செய்யலாம்.

பின்னர் லேபிள்களின் மேல் கிளிக் செய்து அவற்றைச் சேர்க்கலாம். இடுகையை வெளியிடும்போது அதனுடன் லேபிளும் பட்டியலிடப்படும்.

லேபிள்களில் எதையாவது கிளிக் செய்வதன் மூலம் அந்த லேபிளைக் கொண்ட இடுகைகள் மட்டும் கொண்ட பக்கத்துக்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.

அனைத்து லேபிள்களின் பட்டியலையும் உங்கள் வலைப்பதிவின் பக்கப்பட்டியில் சேர்க்கலாம். இதனை அகரவரிசைப்படி அல்லது பயன்பாட்டு கால இடைவெளியின்படி வரிசைப்படுத்தலாம்.

14. எனது வலைப்பதிவில் AdSense -ஐ எவ்வாறு சேர்ப்பது?

உங்கள் வலைப்பதிவில் AdSense-ஐ சேர்க்க, வலைப்பதிவின் டெம்ப்ளேட் அல்லது தளவமைப்புகள் என்ற தாவலில் கிளிக் செய்யுங்கள்.

தளவமைப்பு செயலாக்கப்பட்ட ஒரு வலைப்பதிவில், ஒரு புதிய பக்க உறுப்பைச் சேர்த்து AdSense விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஒரு கிளாஸிக் டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தினால், டெம்ப்ளேட் தாவலில் உள்ள 鄭dSense இணைப்பைத் தேர்ந்தெடுங்கள்.

உங்கள் விளம்பரங்களின் அளவுகளையும் தேர்வு செய்யவும், அவை வலைப்பதிவில் எப்படி காட்சியளிக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்படி அவற்றைத் தனிப்பயனாக்கம் செய்துகொள்ளவும் முடியும்.

15. நான் எனது வலைப்பதிவிற்கான தள ஓடையை எப்படிச் செயல்படுத்துவது?

முதலில் அமைப்புகள்| தள ஓடை தாவலுக்குச் செல்லவும். இங்கே, எவ்வளவு உள்ளடக்கத்தை ஒருங்கிணைக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க ஒரு எளிய வழி உள்ளது.

?முழுவதும்? என்பது உங்கள் தள ஓடையில் உள்ள ஒவ்வொரு இடுகையின் மொத்த உள்ளடக்கத்தையும் வைக்கும், ?சுருக்கம்? என்பது, ஒவ்வொரு இடுகையின் தொடக்கத்திலும் இருந்து சிறு பகுதிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும்.

?எதுவுமில்லை? என்ற தேர்வு, உங்கள் தள ஓடையை முழுதுமாக அணைத்துவிடும்.

16. ?கொடியிடு? பொத்தான் என்பது என்ன?

இந்த அம்சம், மறுக்கத்தக்கது எனக் கொடியிடு? என அழைக்கப்படுகிறது, இதை பிளாகர் Navbar வழியாக அணுகலாம். ?கொடியிடு?? பொத்தான், வலைப்பதிவாக்க சமூகம், கேள்விக்குரிய உள்ளடக்கத்தை எளிதில் கண்டு கொள்ள உதவுகிறது,

இதனால் நாங்கள் தேவைப்படும் போது நடவடிக்கை எடுக்க உதவியாக உள்ளது. ஒருவர், ஒரு வலைப்பதிவைப் பார்வையிடும் போது, பிளாகர் Navbar-இல் உள்ள ?கொடியிடு? பொத்தானை கிளிக் செய்தால், அவர் அந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் மிகத் தீயதாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ இருக்கலாம் என நம்புகிறார் என்பதாகும்.

நாங்கள் ஒரு வலைப்பதிவு எத்தனை முறை மறுக்கப்படுவதென கொடியிடப்படுகிறது என்பதைக் கண்காணித்து, இந்த விவரத்தை, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப் பயன்படுத்திக் கொள்வோம்.

பயனர்கள் தங்கள் கொடியிடுதலை திரும்ப பெற்று கொள்ள, இரண்டாவது முறை இந்த பொத்தானை கிளிக் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

17. நான் எனது வலைப்பதிவில் உள்ள கருத்துரைகளை எப்படி மதிப்பீடு செய்வது?


கருத்துரை மதிப்பீடு செய்வதற்கான அமைப்புகளை அமைப்புகள் | கருத்துரைகள் என்ற தாவலில் காணலாம். இது ஒரு எளிய ஆம்/இல்லை தேர்வுதான்.

இந்த விருப்பத்தில் ?ஆம்? என்பதைத் தேர்வு செய்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட ஒரு இடம் தரப்படும்.

இது, உங்கள் வழக்கமான கருத்துரை அறிவிப்பு அமைப்பைப் பாதிக்காமல், மின்னஞ்சல் வழியாக கருத்துரைகளை மதிப்பீடு செய்ய அனுமதிக்கும்.

நீங்கள் பிளாகர் இடைமுகத்திலேயே எப்போதும் கருத்துரைகளை மதிப்பீடு செய்யலாம் என்பதால், இது உங்கள் விருப்பத்திற்கேற்றது.

ஆகவே, தேர்வை ?ஆம்? என அமையுங்கள், விருப்பப்பட்டால், அறிவிப்பு முகவரியை உள்ளிடுங்கள், அமைப்புகளைச் சேமியுங்கள் பின்னர் உங்கள் அடுத்த கருத்துரைக்காகக் காத்திருங்கள்.

இப்போது, உள்வரும் அனைத்து கருத்துரைகளும் இடுகையிடுதல் என்ற தாவலில் உள்ள ஒரு சிறப்பு "கருத்துரைகள் மதிப்பீடு? பக்கத்திற்குச் செல்லும்.

இந்த பக்கத்தில், நீங்கள் உருவாக்கப்பட்ட அனைத்து கருத்துரைகளையும் காணலாம், ஆனால் அவை எதுவும் ஏற்கப்படவும் இல்லை நிராகரிக்கப்படவும் இல்லை.

(இந்த பட்டியலில், வலைப்பதிவின் நிர்வாக உறுப்பினர்களின் கருத்துரைகள் சேராது.)

பட்டியலில் உள்ள ஒவ்வொரு வரியும், கருத்துரையின் தொடக்கம், எழுதியவர் பெயர் மற்றும் உருவாக்கப்பட்ட நேரம் ஆகியவற்றைக் காண்பிக்கும்.

இடது பக்கத்தில் உள்ள முக்கோணத்தை கிளிக் செய்தால், நீங்கள் கருத்துரையை ஏற்கவும் நிராகரிக்கவும் பயன்படக்கூடிய ?வெளியிடு? மற்றும் ?நிராகரி? ஆகிய இணைப்புகளுடன், கருத்துரையின் முழு உரையையும் காண்பிக்குமாறு வரியானது, விரிவாகும்.

இந்த முழு செயல்முறையையும் மின்னஞ்சல் வழியாகவும் செய்ய முடியும். நீங்கள் மதிப்பீட்டுக்காக ஒரு மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டால், ஒவ்வொரு கருத்துரைக்கும், வெளியிடு? மற்றும் ?நிராகரி? இணைப்புகள் மற்றும் முதன்மை மதிப்பீடு பக்கத்திற்கான இணைப்பு ஆகியவற்றை கொண்ட ஒரு செய்தியைப் பெறுவீர்கள்.

18. பிளாகரின் தளவமைப்பு அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

முதலில், உங்கள் டாஷ் போர்டில் வலைப்பதிவின் பெயரைத் தேடுங்கள், பின்னர் அதற்கு அடுத்ததாக உள்ள ?டெம்ப்ளேட்? இணைப்பை கிளிக் செய்யவும்.

அதற்குப் பதிலாக இந்த இணைப்பு ?தளவமைப்பு? என்று இருந்தால், நீங்கள் முன்பே தளவமைப்பு அம்சத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்,

ஆகவே இந்த முதல் படிகளைத் தவிர்க்கலாம். டெம்ப்ளேட் பக்கத்தில், உங்கள் வடிவமைப்பைத் தனிப்பயனாக்கவும்? என்ற தாவலில் உள்ள வழிச்செலுத்துதல் இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்.

பிளாகர் உங்களுடைய தற்போதைய டெம்ப்ளேட்டின் மறுபிரதியை எடுக்கும் என விளக்கும் ஒரு செய்தியைப் பெறுவீர்கள்.

(இந்த மறுபிரதி பின்னர், தேவைப்படும் போது அதற்கு மீட்டமைக்க கிடைக்கப்பெறும்.) தொடர, ?உங்கள் டெம்ப்ளேட்டை மேம்படுத்தவும்? என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

பின்னர், எங்களுடைய நான்கு இயல்புநிலை டெம்ப்ளேட் வடிவமைப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து பின்னர் ?டெம்ப்ளேட்டைச் சேமி? என்பதை கிளிக் செய்யவும். முடிந்தது.

உங்கள் டெம்ப்ளேட்டை மேம்படுத்திவிட்டால், அதன் உறுப்புகளை நீங்கள் காட்சிப்படுத்த விரும்பும்படி ஒழுங்கமைக்க முடியும்.

நீங்கள் நகர்த்த விரும்பும் உறுப்பை கிளிக் செய்து எளிதாக இழுத்து நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்கவும்.

(குறிப்பு: பெரும்பாலான டெம்ப்ளேட்களில், Navbar, வலைப்பதிவு இடுகைகள் மற்றும் மேற்குறிப்பு ஆகியவற்றைத் தவிர அனைத்து உறுப்புகளையும் நகர்த்த முடியும்.)

?ஒரு பக்க உறுப்பைச் சேர்? என்பதை கிளிக் செய்து உங்கள் வலைப்பதிவு பக்கம் அல்லது பக்கப்பட்டிக்கு, பல பக்க உறுப்புகளைச் சேர்க்கலாம்.

இது ஒரு பாப்-அப் சாளரத்தைத் திறக்கும், அதில் உங்களுக்கு விருப்பமான உறுப்புப் பிரிவில் ?வலைப்பதிவுக்குச் சேர்? என்பதை கிளிக் செய்து வலைப்பதிவுக்கு உறுப்புகளைச் சேர்க்கலாம்.

19. இடுகைப் படிவத்தில், சொல் சரிபார்ப்பு ஏன் உள்ளது?

இடுகை படிவத்தில் உள்ள சொல் சரிபார்ப்பு என்பது, பொதுவாக BlogSpot –க்கான ஸ்பேம் குறைப்பு செயல்முறையாகும். இதற்கான இரண்டு முக்கிய காரணங்கள்:

ஸ்பேமாக இருக்க சாத்தியக்கூறுள்ளவை

இதில், ஸ்பேமாக இருக்கும் சாத்தியக்கூறுள்ள வலைப்பதிவுகளுக்கு, சொல் சரிபார்ப்பு ஒரு தானியங்கு முறைமையின் மூலம் பயன்படுத்தப்படுகிறது.

இது ஒரு தானியங்கு முறையில் செயல்படும் முறையாக இருப்பதால், சில பிழைகளும் நேரலாம், இருப்பினும் நாங்கள் இவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்த தொடர்ந்து பணிபுரிந்து வருகிறோம்.

உங்கள் இடுகை படிவத்தில் சொல் சரிபார்ப்பு இருப்பது, நீங்கள் வெளியிட தடையாக இருக்காது மேலும், உண்மையில் எங்கள் கொள்கைகளை மீறாதபட்சத்தில், வலைப்பதிவு நீக்கப்படும் அல்லது வேறு வகைகளில் தண்டிக்கப்படுவீர்கள் என்று பொருள் இல்லை.

வெளியிடும்போது மேலும் சிக்கல்கள் வராமல் தவிர்க்க, உங்கள் இடுகை படிவத்தில் சொல் சரிபார்ப்புக்கு அருகில் உள்ள??? (கேள்விக்குறி) ஐகானைக் கிளிக் செய்யவும்.

இது உங்களை வலைப்பதிவிற்கு ஒரு மதிப்பாய்வைக் கோரும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். நாங்கள் இதைப் பார்த்து, அது ஸ்பேம் அல்ல என உறுதிப்படுத்தி, ஏற்றுக் கொண்டதாக அறிவிப்போம் இதனால், இனி உங்கள் வலைப்பதிவுக்கு சொல் சரிபார்ப்பு தேவையிருக்காது.

அதிக இடுகையிடுதல் வீதம்

ஒரே நாளில் நீங்கள் அதிக எண்ணிக்கையிலான இடுகைகளை வெளியிட்டால், உங்கள் வலைப்பதிவு ஸ்பேம் அல்ல என அறியப்பட்டிருந்தாலும் இல்லையென்றாலும், ஒவ்வொரு இடுகைக்கும் நீங்கள் ஒரு சொல் சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

உங்களுக்கு இப்படி நேர்ந்தால், ஒவ்வொரு இடுகைக்கும் சொல் சரிபார்ப்பைப் பூர்த்தி செய்யுங்கள், அல்லது 24 மணி நேரம் காத்திருங்கள் அப்போது அது தானாகவே அகற்றப்படும்.

இந்த தடை, எங்கள் சர்வரின் பளுவைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படையாகத் தோன்றக்கூடிய ஸ்பேம்களைத் தடுக்கவுமே உள்ளது.

ஆகவே, தனிப்பட்ட வலைப்பதிவுகளை விலக்களிக்க, ஏற்பு மதிப்பாய்வு செயல்முறை கிடையாது.

20. எனது வலைப்பதிவு ஏன் முடக்கப்பட்டது?

எங்களுடைய தானியங்கு அமைப்புகள் ஒரு வலைப்பதிவை தானாகவே ஸ்பேம் என்று வகைப்படுத்துவதன் மூலமாக முடக்கப்படுகிறது. உங்களுடைய வலைப்பதிவு ஸ்பேம் வலைப்பதிவு இல்லையென்றால், எங்களுடைய தானியங்கு அமைப்பு தவறாக வகைப்படுத்தியிருக்கலாம். மன்னிப்பு கோருகிறோம்.

உங்கள் வலைப்பதிவு முடக்கப்பட்டிருந்தாலும், உங்கள் டாஷ்போர்டில் அது பட்டியலிடப்பட்டிருக்கும், ஆனால் அதை கிளிக் செய்வதன் மூலமாக அணுக முடியாது.

இந்நிலையின் போது, நீட்டிப்பு காலம் வழங்கப்படும், அந்த காலத்தில் உங்கள் வலைப்பதிவை மதிப்பாய்ந்து மீட்டெடுப்பதற்கு கோரலாம்.


21. இடுகையிடும் போது, விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பயன்படுத்த முடியுமா?


இடுகைகளைத் திருத்தும்போது பயன்படுத்த பல விசைப்பலகை குறுக்குவழிகள் பிளாகரில் உள்ளன. நிச்சயமாக Internet Explorer 5.5+/Windows மற்றும் Mozilla family (1.6+ மற்றும் Firefox 0.9+), போன்றவற்றில் செயல்படும், பிற உலாவிகளில் செயல்படக்கூடும். இங்கே அவைத் தரப்பட்டுள்ளன்:

control + b = தடித்த
control + i = சாய்ந்த
control + l = ப்ளாக்கோட் (HTML-பயன்முறையில் மட்டும்)
control + z = செயல்தவிர்
control + y = மீண்டும்செய்
control + shift + a = இணைப்பு
control + shift + p = முன்னோட்டம்
control + d = வரைவாக சேமி
control + s = இடுகையை வெளியிட
control + g = ஹிந்தி ஒலிப்பெயர்ப்பு

22. ஒலிபெயர்ப்பு அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

ரோமன் எழுத்துகளை ஹிந்தி மொழியில் பயன்படுத்தப்படும் தேவநாகரி எழுத்துகளாக மாற்றுவதற்கான தானியங்கு ஒலிபெயர்ப்பு விருப்பத்தை பிளாகர் வழங்குகிறது.

இதனால் ஹிந்தி சொற்களை ஒலியியல் முறையில் ஆங்கில எழுத்துகளைத் தட்டச்சு செய்வதன் மூலமாகவே சரியான எழுத்துகளில் பெற முடியும்.

இந்த அம்சத்தை இயக்க, அமைப்புகள் | அடிப்படைகள் பக்கத்துக்கு சென்று, ஒலிப்பெயர்ப்பு விருப்பத்தில் "ஆம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தொகுத்தல் பயன்முறை அமைப்புகளைப் போலவே இந்த அமைப்பும் உங்கள் கணக்கின் அனைத்து வலைப்பதிவுகளையும் பாதிக்கும்.

23. பிளாகரின் இடுகைத் திருத்தியை எவ்வாறு பயன்படுத்துவது?

பிளாகரின் இடுகைத் திருத்தியில் மூன்று பயன்முறைகள் உள்ளன:

தொகுத்தல்: நீங்கள் காண்பது போலவே வடிவமைப்பைத் தரும் WYSIWYG பயன்முறை, இதில் வடிவமைத்தல் பொத்தான்களைக் கொண்டு உரையை வடிவமைக்கலாம்.

HTML திருத்துதல்: மூல பயன்முறையான இதில் நீங்கள் html ஐ திருத்தலாம்.

முன்னோட்டம்: இடுகையின் முழுத்திரை முன்னோட்டம், இதில் தலைப்பு, இணைப்புகள் மற்றும் படங்கள் ஆகியவை காண்பிக்கப்படும்.

இந்த பயன்முறைகளுக்கு இடையே, முறையான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டும். குறிப்பிட்ட உலாவிகளில் மட்டுமே வடிவமைப்பு பொத்தான்கள் காண்பிக்கப்படும்.

அம்சங்கள், இடமிருந்து வலம்:

எழுத்துரு

எழுத்துரு அளவு

தடித்த

சாய்வு

எழுத்துரு வண்ணம்

இணைப்பு

இடது சீரமை

மையம்

வலது சீரமை

முழு ஓரச்சீரமைவு

வரிசைப்படுத்தப்பட்ட (எண்ணிடப்பட்ட) பட்டியல்

வரிசைப்படுத்தபடாத (பொட்டுக்குறி) பட்டியல்

ப்ளாக்கோட்

எழுத்துப்பிழை சரிபார்ப்பு

படத்தைப் பதிவேற்று

தேர்வு செய்தவற்றிலிருந்து வடிவமைப்பை அகற்றுதல்

24. எனது வலைப்பதிவிற்கான தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட டொமைன் பெயரை எங்கு வாங்க முடியும்?

உங்களுக்கு நியாயமான ஆண்டு கட்டண அடிப்படையில் டொமைன் பெயர்களை வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. டொமைன் பதிவாளருக்கான Google தேடல், எண்ணற்ற வழிகளை வழங்கும். இந்த பட்டியலில் உள்ளவற்றிலும் நீங்கள் பெறலாம்:


GoDaddy.com
ix web hosting
1and1
EveryDNS.net
Yahoo! சிறு வணிகம்
No-IP
DNS Park

25. எனது வலைப்பதிவில் காண்பிக்கப்படும் தேதிகளின் வடிவமைப்பை எப்படி மாற்றுவது?

உங்கள் வலைப்பதிவு அமைப்புகளை மாற்றுவதன் மூலம், இடுகைகள் மற்றும் காப்பக இணைப்புகள் ஆகியவற்றுக்கான தேதி வடிவமைப்பை மாற்றலாம்.

அமைப்புகள் | வடிவமைத்தல் பக்கத்தில், "தேதி மேற்குறிப்பு வடிவமைப்பு" மற்றூம் "காப்பக அடைவு தேதி வடிவமைப்பு " என்ற புலங்கள் உள்ளன.

இரண்டு புலங்களிலும், தேதி தோற்றத்துக்கான விருப்பங்களை பட்டியலிடும், கீழ்தோன்றும் மெனு உள்ளது.
(தேதி மேற்குறிப்புகள் உங்கள் இடுகைகளின் மேல் பகுதியில் இடம்பெறும், காப்பக அடைவு வழக்கமாக, பக்கப்பட்டியில் உள்ள காப்பக இணைப்புகளின் பட்டியலாகும்.)

முடித்தவுடன் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள ?சேமி? பொத்தானை கிளிக் செய்யவும்.

26. இடுகை டெம்ப்ளேட் என்பது என்ன?

இடுகை டெம்ப்ளேட் என்பது, இடுகைத் திருத்தியை முன்னரே வடிவமைத்துவிடுவதன் மூலம் பயனரின் நேரத்தைச் சேமிக்க உதவுகிறது.

சில பயனர்கள் தங்கள் இடுகைகள் குறிப்பிட்ட விதத்தில் வடிவமைக்கப்பட வேண்டும் என விரும்புவார்கள்.

எடுத்துக்காட்டாக, முதல் வரியில் ஒரு கட்டுரைக்கு இணைப்பை வைத்து, பின்னர் அதைக் கீழே மேற்கோளிட விரும்புவார்கள்.

இந்நிலையில், இணைப்பு மற்றும் ப்ளாக்கோட் குறிச்சொற்கள் ஆகிய அனைத்தையும் இடுகை டெம்ப்ளேட்டில் உள்ளிட முடியும்,

பின்னர் அவை, ஒவ்வொரு புதிய இடுகையிலும் நிரப்புவதற்கு செய்யத் தயாரான நிலையில் தோன்றும்.

27. பின்னிணைப்புகள் என்பவை என்ன, அவற்றை நான் எவ்வாறு பயன்படுத்துவது?

பின்னிணைப்புகள் மூலமாக வலையில் உங்கள் இடுகையை இணைக்கும் மற்ற பக்கங்களை நீங்கள் பின் தொடரலாம்.

உங்கள் நண்பர் உங்களுடைய ஒரு இடுகைக்கு இணைப்பு ஏற்படுத்தினால், எடுத்துக்காட்டாக, அந்த இடுகை தானாகவே, யாரோ ஒருவர் அதற்கு இணைப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள் எனக் காண்பிக்கும்,

மேலும் அது நண்பரின் உரையின் ஒரு சிறு துண்டறிக்கையையும், அவருடைய இடுகைக்கான ஒரு இணைப்பையும் வழங்கும்.

பின்னிணைப்புகளுக்கான அமைப்பு அமைப்புகள் | கருத்துரைகள் தாவலில் இருக்கும், அதில் இயக்க அல்லது அணைக்க ஒரு எளிய தேர்வு உள்ளது.

அது இயக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு இடுகையின் கருத்துரை இணைப்புக்கும் அருகில், இந்த இடுகைக்கான இணைப்புகள்? என்று குறிக்கப்பட்ட ஒரு இணைப்பு இருக்கும்.

28. சொல் சரிபார்ப்பு விருப்பம் என்பது என்ன?

"சொல் சரிபார்ப்பு விருப்பம்" என்பது உங்கள் வலைப்பதிவுக்கான அமைப்புகள் | கருத்துரைகள் தாவலில் இருக்கும்.

நீங்கள் இந்த அமைப்பில் ?ஆம்? என்று தேர்வு செய்தால், உங்கள் வலைப்பதிவில் கருத்துரைகளிட விரும்புபவர்கள், வலைப்பதிவை உருவாக்கும் போது நீங்கள் பூர்த்தி செய்வதைப் போன்ற ஒரு சொல் சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

மனிதர்கள் மட்டுமே இதை வாசித்து இந்தப் படியைக் கடக்க முடியும் என்பதால், தானியங்கு அமைப்புகள் உங்கள் வலைப்பதிவிற்கு கருத்துரைகளைச் சேர்ப்பதைத் தடுக்க முடியும்.

நீங்கள் எப்போதாவது, விளம்பரம் போன்ற அல்லது ஏதேனும் ஒரு தொடர்பில்லாத ஒரு தளத்திற்கு இணைக்கும் கருத்துரைகளைப் பெற்றால், நீங்கள் கருத்துரை ஸ்பேமை எதிர்கொண்டுள்ளீர்கள் எனப் புரிந்து கொள்ளுங்கள்.

இவற்றில் பெரும்பாலானவை, சொல் சரிபார்ப்பைக் கடக்க முடியாத மென்பொருளாலேயே செய்யப்படுகின்றன, ஆகவே இந்த வசதியைச் செயலாக்குவது, தேவையற்ற கருத்துரைகளைத் தடுப்பதற்கு சிறந்த வழியாகும்.

29. எனது வலைப்பதிவின் தளவமைப்பின் HTML ஐ திருத்த முடியுமா?

தாராளமாக, டெம்ப்ளேட் | HTML ஐ திருத்து தாவலுக்குச் செல்லவும். இந்த பக்கத்தில் முதலில் இருப்பது, உங்கள் டெம்ப்ளேட்டின் ஒரு நகலை கணினியின் நிலைவட்டிற்கு உரைக் கோப்பாகப் பதிவிறக்கம் செய்வதற்கான ஒரு தேர்வு.

நாங்கள் இதை மிகவும் பரிந்துரைக்கிறோம், ஏனெனில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதே கோப்பை மீண்டும் பதிவேற்றம் செய்வதன் மூலம் அதனை மீட்டெடுக்க முடியும்.

அடுத்ததாக, உங்கள் டெம்ப்ளேட்டிற்கான அசல் குறியீடு இருக்கும். அதில் வழக்கமான HTML மற்றும் CSS குறியீடுகள் இருப்பதைக் காணலாம்,

ஆனால் எங்கள் இழுத்து விடுவித்தல் தளவமைப்பு திருத்தி மற்றும் எழுத்துரு மற்றும் வண்ண தேர்வி ஆகியவற்றோடு இணக்கமுடையதாக மாற்றும் ஏராளமான தனிப்பயன் குறிச்சொற்களும் சேர்ந்திருக்கும்.

30. எனது வலைப்பதிவின் தலைப்பு எங்கு தோன்றும்?

பிளாகரில் உங்கள் அமைப்புகள் | அடிப்படை தாவலில் அமைக்கப்பட்ட தலைப்பு, பல இடங்களில் தோன்றக்கூடும்: வெளியிடப்பட்ட வலைப்பதிவு, உங்கள் டாஷ் போர்டு, உங்கள் சுயவிவரம் மற்றும் டாஷ் போர்டில் உள்ள "சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டவை" பட்டியல் (உங்கள் வலைப்பதிவு பட்டியலிடப்பட்டிருந்தால்). ஆகவே அது ஆக்கத்திறன் மிக்கதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்!

31. URL என்பது என்ன?

ஒரு URL என்பது வலையில் உள்ள ஒரு கோப்பின் இருப்பிடம் ஆகும். URLகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் http://www.blogger.com/, அல்லது http://myblog.blogspot.com/. நீங்கள் தேர்ந்தெடுக்கும் URL ஐ பயன்படுத்திதான் நீங்களும் உங்கள் பார்வையாளர்களும் உங்கள் வலைப்பதிவை அணுக முடியும்.

வலைப்பதிவை உருவாக்கும் செயலின்போது, உங்கள் வலைப்பதிவை Blog*Spot இல் ஹோஸ்ட் செய்ய விரும்பினால், அதற்கு ஒரு URL ஐ தேர்ந்தெடுக்குமாறு கேட்கப்படுவீர்கள்.

முன்பே அதிக அளவிலான Blog*Spot வலைப்பதிவுகள் உள்ளதால், கூடுமானவரை அதனைக் ஆக்கத்திறன் மிக்கதாகவும், வித்தியாசமானதாகவும் உருவாக்கி பின்னர் அது கிடைக்கிறதா என சோதிக்கவும்.

உங்கள் வலைப்பதிவின் URL ஐ தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியது, ஆல்ஃபா-நியூமரிக் எழுத்துகளில் ஹைஃபன்கள் (டாஷ்கள் எனவும் கூறப்படுவது, - )மட்டுமே அனுமதிக்கப்படும்.

இடைவெளிகள் அனுமதிக்கப்படாது, அண்டர்ஸ்கோர்களும் (_) அல்லது மற்ற எந்த சிறப்பு எழுத்துகளும் அனுமதிக்கப்படாது.

32. ?பட்டியலிடுதல்? அமைப்பு என்ன செய்யும்?

?உங்கள் வலைப்பதிவை எங்கள் பட்டியல்களில் சேர்க்க வேண்டுமா?? என்ற அமைப்பு, blogger.com &mdash ஆகியவற்றில் தோன்ற வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது;

குறிப்பாக, உங்கள் சுயவிவர பக்கத்தில் உள்ள வலைப்பதிவுகள் பட்டியல் மற்றும் பிளாகரின் முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்படும் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வலைப்பதிவுகளின் பட்டியல் ஆகியவற்றில் தோன்ற வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

இந்த அமைப்புகளை அமைப்புகள் | அடிப்படை பக்கத்தில் காணலாம். குறிப்பு: உங்கள் வலைப்பதிவு டெம்ப்ளேட், BlogMetaData குறிச்சொல்லைப் பயன்படுத்தினால், அதனை அணைப்பதன் மூலமும், வலைப்பதிவு தேடுபொறிகளால் அடையாளம் காணப்படுவது தடுக்கப்படும்.

33. குறியீடாக்க அமைப்பு என்ன செய்யும்?

உங்கள் வலைப்பதிவை எவ்வாறு காண்பிக்க வேண்டும் என்பதை குறியீடாக்க அமைப்பு வலை உலாவிக்கு தெரிவிக்கிறது.

இது ஆங்கில மொழி வலைபதிவுகளுக்கு அவ்வளவு முக்கியமானது அல்ல, ஆனால் ஆங்கிலமல்லாத மற்ற மொழி வலைப்பதிவுகளைச் சரியாகக் காண்பிப்பதற்கு இதுதான் அடிப்படையானது.

UTF-8 அனைத்து மொழிகளுக்கும் ஆதரவளிக்கக்கூடியது என்பதால், இயல்புநிலையில் அதுவே தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால், சில நிலைகளில் நீங்கள் மற்ற குறியீடாக்கத்தை முயற்சிக்க வேண்டியிருக்கலாம்.

உங்களுக்கு வேண்டிய குறியீடாக்கம் பட்டியலில் இல்லையென்றால், எங்களுக்குத் தெரிவியுங்கள் விரைவில் அதைச் சேர்ப்போம்.

34. FTP சர்வர் என்பது என்ன?

FTP சர்வர் என்பது, பயனர்களிடமிருந்து பதிவேற்றம் செய்யப்பட்ட கோப்புகளை ஏற்றுக் கொள்ள FTP ஐ பயன்படுத்தும் ஒரு கணினி ஆகும். உங்கள் FTP சர்வரின் முகவரி வழக்கமாக இப்படி இருக்கும்: ftp.example.com

நீங்கள் ஒரு ஹோஸ்டிங் சேவையை வாங்கும்போது, அதைப் பயன்படுத்த நீங்கள் FTP சர்வரின் முகவரி உங்களுக்கு வழங்கப்படும். உங்களிடம் இந்த தகவல் இல்லை அல்லது அது குறித்து தெளிவாக தெரியவில்லை என்றால், உங்கள் ஹோஸ்டிங் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

குறிப்புகள்:

இயல்பு நிலையான போர்ட் எண்கள் பயன்படுத்தப்படும் (FTP -க்கு :21 மற்றும் SFTP –க்கு :22 ). மாற்று போர்ட்டைக் குறிப்பிடுவது செயல்படாது.

மேலும் சர்வர் முகவரியில் http:// அல்லது ftp:// ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.

35. FTP பாதை என்பது என்ன?

உங்கள் FTP பாதையானது உங்கள் வலைப்பதிவு கோப்புகளை எங்கு வைக்க வேண்டும் என்று பிளாகருக்கு தெரிவிக்கிறது. அது இந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும்:

directory/directory/ (பின் தொடரும் சாய் கோடுகளைச் சேர்க்கத் தவறாதீர்கள்)

உங்களுக்கு FTP ஐ பற்றி நன்றாகத் தெரியும் என்றால், உங்கள் பாதையே வலை மூலம் அணுகக் கூடிய டைரக்டரியாகும். எடுத்துக்காட்டாக, ‘htdocs' அல்லது 'www' அல்லது 'public_html,' ஆகியவையாக இருக்கலாம், அல்லது நீங்கள் வலைப்பதிவை சப்டைரக்டரியில் வைக்க விரும்பினால், 'htdocs/blog/' போன்றவை இருக்கலாம்.

இவை அனைத்தும் சிறிது சிக்கலாக இருப்பது போலத் தோன்றினால், உதவிக்கு உங்கள் ஹோஸ்டிங் வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும். குறிப்பிட்ட சர்வருக்கு அனைத்தையும் எப்படி அமைக்க வேண்டும் என அவர்கள் கூறுவார்கள்.

குறிப்புகள்:

பாதையில், http:// அல்லது ftp:// அல்லது சர்வர் முகவரி ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.

நீங்கள் குறிப்பிடும் டைரக்டரி முன்பே உங்கள் FTP சர்வரில் கட்டாயமாக இருக்க வேண்டும்.
இது அப்ஸல்யூட் பாதையாக இருக்கக்கூடாது - அது சர்வரில் உள்ள உங்கள் ftp மூலப் பாதைக்குத் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

36. அட்டவணையை மீண்டும் வெளியிடுவதற்கும் முழு வலைப்பதிவையும் மீண்டும் வெளியிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

உங்களிடம் ஒரு FTP வலைப்பதிவு இருந்து, உங்களுடைய புதுப்பித்தல்களை காண்பிப்பதற்கு வலைப்பதிவை மறு வெளியீடு செய்ய வேண்டியது அவசியம். அட்டவணையை மட்டும் மறு வெளியீடு செய் என்பதன் பொருள் அட்டவணைப் பக்கம் மட்டும் (மற்றும் செயலாக்கப்பட்டிருந்தால் தள ஓடையும்) மறு வெளியீடு செய்யப்படும் என்பதாகும்.

முழு வலைப்பதிவையும் மறு வெளியீடு செய் என்பது, முழு வலைப்பதிவையும் மறு வெளியீடு செய்யும்- அட்டவணைப் பக்கம், ஓடை, காப்பகம் & இடுகைப் பக்கங்கள் ஆகியவை. இது உங்கள் சமீபத்திய டெம்ப்ளேட் மாற்றங்களை அனைத்து வலைப்பதிவு பக்கங்களுக்கும் பயன்படுத்தும். உங்களிடம் அதிக இடுகைகள் இருந்தால், இதற்கு சிறிது நேரம் ஆகலாம்.

37. சட்டப்பூர்வ சிக்கல் குறித்து நான் எங்கு புகார் அளிக்கலாம்?

சட்டப்பூர்வ சிக்கல்களைப் பற்றி புகாரளிக்க விரும்பினால் தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

புதன், 4 பிப்ரவரி, 2009

சோ ஒரு படித்த கோமாளி

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சோ எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்.

முட்டை, முட்டைக் கண்களை உருட்டி பல படங்களில் அவர் அடித்த லூட்டிகள் மறக்க முடியாதவை.

தேன் மழைன்னு ஒரு படம். கடத்தி வச்சிருக்கற கும்பல் அவரோட நண்பரோட தொலைப்பேசி எண்ணை சொல்றியா இல்லையான்னு கத்திய காட்டி மிரட்டும்.

இவர் கண்களை உருட்டியவாறு சொல்வார்'டேய் இதுக்கெல்லாம் பயந்து அந்த ஃபோன் நம்பர் 4678120னு சொல்லுவேன்னு பாத்தியா? சொல்ல மாட்டேன்.' அதாவது ஃபோன் நம்பர சொல்லிட்டு சொல்லமாட்டேன்னு சொல்வார்.

இதே மாதிரி தொடர்ந்து வீட்டு விலாசத்தையும் சொல்லிட்டு சொல்வேன்னு பாத்தியா, சொல்ல மாட்டேன்னு சொல்வார்.

தமாஷாருக்கும்.

அதே மாதிரி இந்த வாரத்து வார இதழ் ஒன்னுலயும் (அந்த எந்த இதழ்னு சொல்லணுமா என்ன?) நிறைய ஜோக் அடிச்சிருக்கார்.

அதாவது மு.க அவர்களுக்கு இந்து மத கடவுள்களை பழிப்பதற்குத்தான் தெரிகிறது. ராமர் இருந்தாரா இல்லையா, முருகர் இருந்தாரா இல்லையா என்றெல்லாம் கேட்கும் இவர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்துவ மதங்களில் நடந்தவைகளுக்கெல்லாம் சரித்திர, அறிவியல் சாட்சிகளை கேட்பாரா என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் நாங்கள் அப்படியில்லை. கிறிஸ்து மரித்து உயிர்த்ததற்கு சரித்திர, அறிவியல் சான்றுகள் உண்டா என்று நாங்கள் கேட்போமா? கேட்க மாட்டோம். என்று தமாஷ் செய்திருக்கிறார்.

'அதான் கேட்டுட்டீங்களே சார், அப்புறமென்ன கேக்க மாட்டோம்னு சொல்றீங்க?' அப்படீன்னு நாங்க கேப்போமா சோ அவர்களே, கேட்க மாட்டோம்.

சோ ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மற்றபடி சுப்பிரமண்ய சாமியைப் போலவே இவரும் ஒரு படித்த முட்டாள். கோமாளி, சந்தர்ப்பவாதி. சமயத்திற்கேற்றாற்போல் பேசுவார், எழுதுவார். நாகரீகம் என்று வாய் கிழிய பேசுவார். ஆனால் அவருடைய எழுத்தில் அதை பார்க்க முடியாது.

மு.க. இந்துக்களை பரிகசித்து, இழித்து பேசிவிட்டார் என்றால் அவரை சாடிவிட்டு போங்க. அத விட்டுட்டு மத்த மதங்களை பற்றி எதுக்கு சார் பேசறீங்க?

சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டு நாங்க சொல்ல மாட்டோம்னு வேற சொல்லிக்கறீங்க.... ஏன் சார் இதென்ன காமெடி டயலாக்கா?

என்னத்த படிச்சி என்ன பிரயோசனம்? இதுல சட்டவல்லுனர்னு வேற சொல்லிக்கறது.

கேவலம்.

கோமாளின்னு வேணும்னா சொல்லிக்குங்க. அதான் சரியாருக்கும்.

தரம் இறங்குவது சரியா?

கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலக விஷயமாக சென்னை டைடல் பார்க் வரை செல்ல வேண்டியிருந்தது.

சாதாரணமாக அலுவலக அலுவல் நிமித்தம் வெளியில் செல்லும் சமயங்களில் என்னுடைய வாகனத்தில் செல்வதில்லை.

அதற்கென வங்கி நியமித்திருக்கும் டிராவல் நிறுவனத்திலிருந்து அமர்த்தப்பட்ட வாகனத்தில் செல்வது வழக்கம்.

போக்குவரத்து குறைந்திருக்கும் நேரங்களிலேயே (non peak hours) அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் வாகனங்கள் நிறம்பி வழிவதுண்டு.

காலை நேரத்தில் கேட்கவே வேண்டாம். அந்த சந்திப்பிலிருந்து வலப்புறம் திரும்பும் (It corridor) வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

அன்றும் அப்படித்தான். என்னுடைய வாகனம் சந்திப்பை நெருங்கவும் சிவப்பு விளக்கு விழவும் சரியாக இருந்தது. அதற்கு முன் எப்படியாவது சந்திப்பைக் கடந்துவிடவேண்டுமென்ற எண்ணத்துடன் வேகமாய் சென்ற என்னுடைய ஓட்டுனர் எத்தனை முயன்றும் அவருக்கு முன்பு சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது தொடாமால் நிறுத்த முடியவில்லை.

என்னுடைய வாகனத்தின் முகப்பு பம்ப்பர் அவருடைய வாகனத்தை 'தொட்டது' என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயம் 'இடிக்க'வில்லை.

ஆனால் அவருக்கு வந்ததே கோபம். வாகனத்தை என்னுடைய வாகனத்திற்கு குறுக்கே நிறுத்திவிட்டு (அதாவது வழிமறித்துவிட்டு) இறங்கி வந்து என்னுடைய ஓட்டுனரின் கதவைத் திறந்து சரமாரியாக வசைமாரி பொழிந்து தள்ளிவிட்டார். அதாவது எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகளால்.

என்னுடைய ஓட்டுனர் மட்டும் சளைத்தவரா என்ன? அவரும் வாகனத்திலிருந்து இறங்கி பதிலுக்கு வார்த்தை விளையாட்டில் இறங்கினார். அக்கம் பக்கத்து வாகன ஓட்டுனர்கள் காதுகளைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு.

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தேன். நின்றபாடில்லை.

வேறு வழியின்றி இறங்கி அந்த இளைஞரைப் பார்த்தேன். கழுத்தில் தொங்கிய ஐ.டி கார்டிலிருந்தே அவரும் டைடல் பார்க்கிலிருந்த மிகப் பெரிய ஐ.டி நிறுவனத்தில்தான் பணியாற்றுகிறார் என்பது தெரியவந்தது. நிச்சயம் பொறியாளர். பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாக இருந்தார்.

நான் அவரிடம், 'என்ன தம்பி நீங்க. பாக்கறதுக்கு ஸ்மார்ட்டா ஒரு எக்ஸ்க்யூட்டிவ் மாதிரி இருக்கீங்க, நீங்களும் இவர் லெவலுக்கு இறங்கி வந்து பேசறீங்களே, ரிலாக்ஸ்.' என்றேன்.

சட்டென்று அவருடைய முகமே மாறிப்போனது. அக்கம்பக்கத்து வாகனங்களில் அமர்ந்திருந்த பெரும்பாலோனோர் அந்த இளைஞரைப் போன்றவர்கள்தான்.

அவர்களும் முகம் சுளிக்கும் அளவுக்கு அவர் பேசியிருந்ததை அவர் உணர்ந்திருப்பார் போலிருந்தது. சட்டென்று சென்று தன்னுடைய வாகனத்தை விலக்கிக் கொண்டார்.

அடுத்த நொடியே சிவப்பு விளக்கு பச்சையாக மாற புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் என்னுடைய வாகன ஓட்டிக்கு என் மீது வருத்தம். 'என்ன சார் என்னுடைய லெவல்லுன்னு சொல்லி என்னையும் மட்டம் தட்டிட்டீங்களே. அவன் அப்படி பேசறப்போ நா எப்படி சார் பேசாம இருக்கறது?' என்றார் வருத்தத்துடன்.

நான் புன்னகையுடன், 'நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க தம்பி?' என்றேன்.

'எட்டாம் க்ளாஸ் சார். ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்?'

'இருக்கு தம்பி. படிக்கற படிப்புதான் நமக்கு ஒரு அந்தஸ்த்த ஏற்படுத்தி குடுக்குது, இல்லையா?'

நான் சொல்ல வந்தது புரிந்திருக்க வேண்டும். அவர் பதில் பேசாமல் இருந்தார்.

'அவர் நிச்சயம் எஞ்சினியரிங் படிச்சிருக்கணும். நல்ல அந்தஸ்த்துல இருக்கார். அதனால அப்படி சொன்னேன்.

உங்கள மட்டம் தட்டணும்னு இல்லை. ஆனா அதுக்காக உங்கள மாதிரி ஆளுங்களும் இந்த மாதிரி தரக்குறைவான பேச்சு பேசணும்னு இல்லை. சரிதானே?'

அவர் உடனே, 'நீங்க சொல்றது சரிதான் சார். மன்னிச்சிருங்க.' என்றார்.

ஒருவர் நம்மை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக நாமும் அதே பாணியில் பேசவோ, எழுதவோ செய்தால் பிறகு நமக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?

சிந்திக்க வேண்டிய விஷயம்

அரசியலும் ஆன்மீகமும்

Bowler should bowl, batsman should bat என்பார்கள். இரண்டிலும் வல்லவரானாலும் மட்டை பிடிக்க வேண்டிய நேரத்தில் பந்து எரிபவரைப் போல் ஓடிவந்து கையிலுள்ளதை வீசினால் என்னாவது!

அதுபோலத்தான் அரசியலும் ஆன்மீகமும்.

ஆன்மீகவாத அரசியல் பேசுவது எவ்வளவு தவறோ அதுபோலத்தான் அரசியல்வாதி ஆன்மீகம் பேசுவதும்.

ஆட்சியில் இருந்தாலும் ஆட்சிக்கு வெளியில் இருந்தாலும் அரசியல்வாதி அரசியல்வாதிதான், மறுப்பதற்கில்லை. ஆனால் ஆட்சிக்கு வெளியில் இருக்கும் சமயங்களில் பேசுகிற அதே தோரணையில் (பொறுப்பற்ற முறையில் என்று சொன்னால் சற்று அதிகபட்சமாகிவிடும்) ஆட்சியில் இருக்கும் சமயத்திலும் பேசினால்? பிரச்சினைதான். அதிலும் மதம் அல்லது இறைநம்பிக்கையைப் பற்றி பேசும்போது...

எதிரணியில் இருக்கும் அரசியல்வாதி ஆட்சியாளரை குறைகூற ஆன்மீகம் என்ன எதை வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்வது சகஜம்தான்.

அவர் ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளையே ஆட்சியை இழந்த பிறகு வேறொருவர் செயல்படுத்த முனையும்போது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த முனைவதும் ஒன்றும் புதிதல்ல.

அதைத்தான் இன்று எதிரணியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.கவும் அ.இ.அ.தி.மு.கவும் செய்கின்றன. அந்த வகையில் அவர்களுக்கு இப்போது ஆயுதமாக பயன்படுவது ஆன்மீகம்.

அது வலுவிழந்து போகின்ற சூழலில் வேறெதையாவது கையில் எடுத்துக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

அதற்கு அயோத்தி ராமரானாலும் ராமேஸ்வரம் ராமரானாலும் ஒன்றுதான். காலத்திற்கேற்ப, சந்தர்ப்பத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளப்படும் கருவியும் கருத்தும் மாறிக்கொண்டே போகும்.

இதுபோலத்தான் கூட்டணிகளும். காங்கிரஸ் ஆட்சியை பதவியிழக்க செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மதசார்பற்ற ஜனதா தளம் மதவாத பா.ஜ.கவுடன் இணைந்து ஆட்சியை பகிர்ந்துக்கொள்ளவில்லையா? இதெல்லாம் இந்தியா போன்றதொரு நாட்டில் மிகவும் சகஜமப்பா என்கிற நிலைதான் இன்று!

மதம், இறை நம்பிக்கை என்பது அதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் புனிதமானது. இறைவனில் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்களிடம் அதையெல்லாம் எதிர்பார்ப்பதே முட்டாள்தனம்.

நான் இறை நம்பிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா என்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. அது என்னுடைய சொந்த விஷயம்.

ஆனால் பிறருடைய நம்பிக்கையை குறைத்துக் கூறுவதற்கோ அல்லது எள்ளி நகையாடுவதற்கோ எனக்கு உரிமையில்லை. அது என்னுடைய சொந்த கருத்து என்று ஒரு பொறுப்பான பதவியிலிருந்துக்கொண்டு நான் கூறினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அரசியல்வாதியானாலும் சரி ஆன்மீகவாதியானாலும் சரி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஜால்ரா அடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் முழுநேர அரசியல்வாதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.

அந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருக்கலாம் உயர் பதவியில் உள்ளவர்களும் இருக்கலாம். அவரவர் தேவைக்கேற்ப அதை வளைத்து, உருமாற்றி அர்த்தம் கொள்வது வழக்கமாகிப் போன ஒன்று.

இன்று மு.க அவர்கள் கூறியதை சரி என்று சொல்ல ஒரு கூட்டம் இருப்பது போல் வேதாந்தி சொல்வதிலும் தவறில்லை என்று சொல்லவும் ஒரு கூட்டம் இல்லையா?

இந்த இரண்டு கூட்டங்களுமே தங்களுக்கு பொதுவான எதிரியை தாக்க நாளைக்கு ஒன்று சேர்ந்துக்கொண்டாலும் வியப்பதற்கில்லை.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை நாளை ஆன்மீகத்திலும் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை வந்தாலும் வரும்.. யார் கண்டது!!

புதிய ஏற்பாடு மத்தேயு

மத்தேயு 2 அதிகாரம்

ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.

ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.

அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:

யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தில் இருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.

அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை ரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:

நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்து கொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.

ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.

அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.

அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான்.

அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய்,

ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,

எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்கு சொப்பனத்தில் காணப்பட்டு:

நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான்.

அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.

ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,

நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம் பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு

1 அதிகாரம்

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.

ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;

உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;

எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;

சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;

ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;

எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.