திங்கள், 25 மே, 2009

திறவுண்டவாசல்

FMPB மற்றும் சில கிறிஸ்துவ நிறுவனங்கள் கடந்த 25 ஆண்டுகளாக தென்-குஜராத் பகுதியில் மிக தீவிரமான சுவிசே மற்றும் சமூக பணியில் ஈடுபட்டுவருகிறது.

குறிப்பாக ஃபில் மற்றும் குக்னா மக்கள் மத்தியில் எழுத்தறிவு, மருத்துவம், வேதாகம மொழி பெயர்ப்பு, சபைகள் நிறுவுவது என பல வழிகளில் சமுகப் பணியாற்றி வருகிறது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக FMPB தனது ஊழியத்தை தென் குஜராத் பகுதியில் தமது ஊழியத்தை ஆரமித்தது, அனேக மிஷனெரிகளின் உழைப்பால் சபைகள் நறுவி அனேக மக்கள் தங்கள் பாவ வழிகளைவிட்டு சிலுவையின் மேல் கிறிஸ்து இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து உயிரோடு எழும்பியதை விசுவாசித்து அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.

அந்த பகுதியில் உபத்திரவங்களின் மத்தியில் சபை எவ்வாறு நிறுவப்பட்டது, மக்களின் வாழ்க்கை தரம் எவ்வாறு மாறியுள்ளது என பல நிகழ்வுகளை விவரித்தனர். இந்த பகுதியில் சுமார் 2000 சபைகள் நிறுவப்பட்டுள்ளன்.

நம் மிஷனெரிகளின் உழைப்பையும் அர்பணிப்பான வாழ்வையும் தேவன் அவர்களை பயன்படுத்தியவிதத்தை எண்ணி வியப்பதுண்டு.

கடந்த சில ஆண்டுகளாக , குறிப்பாக தீய வகுப்புவாத சக்திகள் குஜராத்தில் வலுவாக காலுண்றிய பிறகு சுவிசே பணிகளை தடுக்கும் முயற்சியில் ஈட்டுபட்டு வருகின்றனர். அதில் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்,

மேலும் தங்களது அடுத்த கட்ட பணியாக "கர் வாபஸி"(घर वाबसि or Ghar Wapsi - வீடு திரும்பு or Back to Home) என்னும் திட்டத்துடன், தென் குஜராத்தின் டாங்ஸ்(Dangs) மாவட்டத்தில் உள்ள சுபிர்(Subir) ல் ஒரு கும்ப மேளா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த குதியில் அனேக கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களை மறுபடியும் இந்து மதத்திற்கு கட்டாயமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கும்பமேளா பிப்ரவரி 11- 14 -ம் தேதி வரை அங்கு நடை பெறும்.

கும்பமேளா என்பது ஒரு சில பகுதயில் தான் நடத்த முடியும், அதாவது புனித நகரம் அல்லது புனித இடம் என்று செல்லபபடும் ஹரித்துவார்,காசி,நாசிக். இந்த இடங்களில் மட்டும் பல காலமாக கும்பமேளா நடை பெற்று வருகிறது. இந்த இடங்களைத் தவிர வேறு எங்கும் கும்மமேளா நடைபெறுவதில்லை.

அப்படியிருக்க "சுபிர்" எனப்படும் ஒரு காட்டு பகுதியில் , அதுவம் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் கும்பமேளா நடை பெறப்போவது நடுநிலையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதற்காக சுமார் நாண்கு கோடி மதிப்பில் ஒரு கோயில் கட்டப் பட்டுள்ளது.

இந்த கும்பமேளாவின் போது இந்த பகுதியில் கிறிஸ்தவர்களை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை தாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக காவி கொடியை அனைத்து இந்துகளின் வீடுகள் மேலும் கட்டாயமாக பறக்கவிடும்படி கூறிவருகின்றனர்.

கொடி பறக்காத வீடுகள் கிறிஸ்துவர்களின் வீடுகள் என அடையாளம் காணப்படுகிறது. கும்பமேளாவின் போது சுமார் ஜந்து இலட்சம் மக்கள் அங்கு கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மக்களுடன் மக்களாக கலந்து இருக்கும் வெளிஆட்கள்(2002 குஜராத் கலவரத்தின் போது முஸ்ஸிம்களை தாக்கியது போன்று.) மூலம் கிறிஸ்தவர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டு தாளங்களை தாக்கி நீர்முலம் ஆக்கி அதன் முலம் அந்த பகுதியில் தங்கள் தளத்தை வலுவாக்கவும், பயந்த மக்களை மறுபடியும் இந்து மதத்திற்கு கொண்டுவரவும் "கர் வாபஸி" என்ற இந்த திட்டத்தை நடைமுறை படுத்த முற்பட்டு வருகின்றனர்.

இதற்காக வெளி ஆட்கள் குறிப்பாக அண்டை மாநிலங்களான மாஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்து "சுபிர்" பகுதியில் குவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த நிகழ்சிகளை குறித்து கிறிஸ்துவ அமைப்புகள் மைய அரசுக்கும், மாநில அரசுக்கும் தெரிவித்துள்ளனர். மாநில பா.ஜ.க. அரசு இதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது ஊரறிந்தது.

இந்த பகுதியில் போதிய அளவு பாதுகாப்பு இருக்குமா? என்பது ஐயமே. மேலும் தற்போது ஒரு C.D இந்த பகுதியில் காண்பிக்க பட்டுவருகிறது,

அதில் கிறிஸ்துவர்களை இராவணனுக்க ஒப்பாக சித்தரித்தும், அவர்களை வதம் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் சாதாரண மக்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக திருப்பி விடவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் அங்கு ஒரு வித பதட்டமான சுழ்நிலை நிலவிவருகிறது.

கிறிஸ்துவின் மக்கள் ஒரு நாளும் ஆயதங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், வாணத்தையும் பூமியையும் தம் வார்த்தையால் உண்டு பண்ணி கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஜனம் என்பதால், சுபிர் கிறிஸ்தவர்கள் ஒருகாலும், எந்த சுழ்நிலையிலும் பின்வாங்க மாட்டர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இதற்காக நீங்கள் என்ன செய்ய முடியும்?

ஜெபம்.

ஆம் நண்பர்களே, ஜெபம் மட்மே நமக்கு ஜெயம் கொடுக்கும். முழங்கால் யுத்தம் முற்றிலும் வெற்றி தரும்.(தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.1கொரி -4:20)

நம் கடந்த கால அனுபவஙகள் முலம் நாம் இதை உணர்நதுள்ளோம். "நான் "சுபிர்" பகுதியில் இல்லை ஆகவே இதனால் எனக்கோ என் குடுபத்தினர்க்கோ எந்த பதிப்பும் இல்லை,

நான் இந்தி பிரச்சனைகள் எதுவும் இல்லாத பகுதியில் இருப்பதால் தேவனுக்கு நன்றி" -என இருந்து விடாமல் எஸ்தர் புத்தகத்தில் உள்ள இந்த வசனங்களை நினைவில் கொள்ளவும்

எஸ்தர் 4-13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொனனது:

நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.எஸ்தர் 4:14

நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்;

நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

ஆம், நண்பர்களே ஏற்ற காலத்தில் மவுனமாயிராமல், கிழ்கண்டவற்றை நம் ஜெபங்களில் நினைவு கொள்ளவும்.

1. கிழ் கண்ட கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் சபைகள் பணியாற்றி வருகிறது. அவர்களின் பாதுகாப்புக்காக, - CNI,IEM,FMPB,NMS,Roman Catholics Chruch.

2. மிஷனெரிகள், சபைகளின் மேய்ப்பர்கள், உள்ளுர் ஊழியக்காரர் களின் பாதுகாப்புக்காக (பவுல் இவ்வாறு கூறுகிறார் -

எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்;

நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும்மனுஷருக்கும் வேடிக்கையானோம்.1 கொரி 4:9)3.

இந்த உபத்திரவத்தின் உடே சபைகள் மேலும் வளர,4. Dangs மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை இனத்தவர்களின் பாதுகாப்புக்காக

5. வகுப்பு வாத சக்திகளின் மனமாற்றத்திற்காக, அவர்கள் கிறிஸ்து இயேசுவின் சிலுவை அன்பை புரிந்து கொண்டு இரட்சிக்கப்பட.(நான்(இயேசு) உங்களுக்குச்சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர் களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு - 5:44)6.

அங்குள்ள சபைகள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் அனைத்தும் தாக்குதல்கள் எதுவும் நடந்தால் முற்றிலும் அமைதி காப்பது என்று முடிவு எடுதுள்ளனர்.

இந்தமுடிவுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் (நான்(இயேசு) உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;

ஒருவன் உன்னை வலதுகன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. மத்தேயு - 5:39)

உங்கள் கருத்துகளை நீங்கள் இங்கு பதியலாம். "சுபிர்" பகுதியில் நடைபெறும் நிகழ்சிகளை திரட்டி விரைவில் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

மேலும் இது குறித்த செய்திகள் நவம்பர் 18 Week -கில் காணலாம்

பி.கு.:- முடிந்தால் இந்த மின்-ஆஞ்சலை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் இந்த ஜெப யுத்ததில் பங்கு பெறும் படி செய்யுங்கள்).

வெள்ளி, 15 மே, 2009

சந்திரக்கடவுள் - அல்லா

அநேகர் நினைக்கின்றனர், யூதர்களும், கிறிஸ்தவர்களும், மற்றும் இஸ்லாமியர்களும் ஒரே கடவுளாகிய யெகோவா தேவனை வழிபடுகின்றனர் என்று. ஆனால் உண்மை அதுவல்ல.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே தேவனை வழிபடுகின்றனர் என்பது உண்மை. ஆனால் இஸ்லாமியர்கள் ? குர்-ஆனில் சொல்லப்படும் அல்லா அரேபியர்களின் புற மத கடவுளா?

அல்லா எனும் வார்த்தை அல்-இலா எனும் வார்த்தையில் இருந்து தோன்றியது. அல் என்றால் (the), இலா என்றால் (GOD).

முன்பிருந்த அநேக சரித்திர ஆய்வாளர்கள் கருதினார்கள் அல்- இலா எனும் வார்த்தை எல் அல்லது எலோகிம் எனும் வேதாகம வார்த்தையிலிருந்து உருவாகியிருக்க வேண்டுமென்று.

ஆனால் உண்மை அதுவல்லவென்று இப்பொழுது அநேக சரித்திர ஆய்வாளர்கள் அந்த கருத்தை ஏற்க மறுக்கின்றார்கள்.

காரணம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாவுக்கும் அரேபியர்களினது புரதான தெய்வமாகிய ஹ_பால்-(அல்லா)க்கும் அநேகம் ஒற்றுமைகள் இருக்கின்றபடியாலும், அதே சமயம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வழிபடும் தெய்வமாகிய யெகோவா தேவனுக்கும் இஸ்லாமியர்களினது அல்லாவுக்கும் அநேக வேற்றுமைகள் இருக்கின்றபடியாலும்;, ஆய்வாளர்கள் இப்படி கருதுகின்றனர்.

யெகோவா தேவனை நாங்கள் கர்த்தர்(கடவுள்) என்று சொல்லுவது போல, ஹ_பால்-ஐ அரேபியர்கள் அல்லா என்று அழைத்தனர்.

அல்லா என்றால் கடவுள் என்று அர்த்தம் -

The God = Jehova

Allah = Hubal

இப்படி சரித்திர, வேத, வரலாற்று, மற்றும் அகழ்வாராய்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் கருதுவதற்கான காரணம் என்னவென்றால்.

சந்திரக்கடவுள்கள்

அகழ்வாராய்ச்சியாளர்கள, நைல் நதி முதல் துருக்கி வரையிலுள்ள மத்திய ஆசியப்பகுதியில் அநேகம் சந்திரதெய்வங்களை கண்டுபிடித்திருக்கின்றனர்.

ஆதி நாகரிக மக்களாகிய சுமேரிய மக்கள் சந்திரனை தெய்வமாக வழிபட்டிருக்கின்றனர், சந்திரனுக்கு வௌ;வேறு பெயர்களை அவர்கள் வைத்து வழிபட்டனர்: நன்னா, சுயென், அசிம்பாபர்.

இந்த சந்திரதெய்வத்தின் சின்னம்(அடையாளம்): வளர்பிறை நிலவு

மெசொப்பத்தாமிய மக்கள் மத்தியில் சந்திரனை வழிபடும் பழக்கம் எல்லாரிடமும் பிரபல்யமாக இருந்தது. அசீரியர்கள் பாபிலோனியர்கள், அக்காடிய-ர்கள் சுயென் எனும் பெயரை "சின்" ஆக மாற்றி, சந்திரனை தங்கள் பிரியமான தெய்வமாக மாற்றினார்கள்.

புரதான சிரியாவிலும், கானானிலும் சந்திரதெய்வத்தின் குறியீடு வளர்பிறை நிலவிற்குள் முழுநிலவை வைத்திருந்தனர்.

சந்திரக்கடவுளின் மனைவி சூரியக்கடவுள், அவர்களுக்கு 3 நட்சத்திரங்கள்(பிள்ளைகள்) இருந்தன.

உதாரணம்:- சின்"னுடைய பிள்ளை இஷ்தார்.

எகிப்திலும் சந்திரக்கடவுளை வழிபட்டனர்" சந்திரத்தெய்வத்தின் வேலை: மனிதனையும் கடவுளையும் நியாயம் தீர்ப்பது.

பழையேற்பாட்டுக்காலத்தில் பாபிலோனிய கடைசி அரசன் நபோநிதுஸ் (கி.மு 555- 539) தாய்மா-வைக் கட்டி, மத்திய ஆசியா தான் சந்திரதெய்வத்தின் பிரதான இடம் என்பதை நிரூபித்தான்.

புரதான சவுதி அரேபியாவில் சந்திரன் தான் முதற்கடவுள் என பல ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். சீனாய் மலை கூட ... "சின்" எனும் வசனத்தின் ஒரு பகுதிதான்.

மெக்காவிலும் அதே சந்திரனைத்தான் வழிபட்டனர், " பெயர் அல்-இலா (ஹ_பால்);. அல்-இலா முகமதுவிற்கு பிறகு அல்லா-வாக மாறியிது.

முகமதுவும், அவனுடைய குடும்பமும் இந்த அல்-இலா(அல்லா)வைத்தான் வழிபட்டு வந்தனர்.

ஏன் அல்லா(அல்-இலா) எனும் பெயரை முகமது அந்நிய தெய்வங்களாக சொல்லவில்லை என்று. மற்ற தெய்வங்களின் பெயர்களை முகமது சொல்லியிருக்கிறான், ஆனால் ஏன் இந்த பெயரை மட்டும் சொல்லவில்லை?

ஏன் என்றால் முகமது அல்லா-வினுடைய பிள்ளைகளையும், மற்ற 360 தெய்வங்களையும் தான் அகற்றியிருக்கிறான்.

ஆனால் அல்லாவை மட்டும் தனிக்கடவுளாக, எல்லாக்கடவுளுக்கும் மேலான கடவுளாக அதே சந்திரக்கடவுளை மாற்றினான்.

அல்லா என்றால் அரேபியர்களுக்குத்தெரியும் சந்திரக்கடவுள் தான் என்று.

முகமது அரேபியர்களுக்கு சொல்லும்பொழுது அல்லா-வை சந்திரக்கடவுளாக சொன்னான்.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சொல்லும்பொழுது அல்லவை யெகோவா தேவன் என்று சொன்னான்.

ஆனால் யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் கர்த்தராகிய யெகோவா தேவனை சரியாக அறிந்தபடியால் முகமதுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


அரேபியா- முகமதுவிற்கு முற்பட்ட காலம் (கி.பி 610க்கு முதல்)

காபா - தற்போதைய மெக்கா ...


இஸ்லாம் எனும் மார்க்கம் உருவாக முன்பு அரேபியர்கள் மத்தியில் பலவிதமான தெய்வ வழிபாடுகள் இருந்தது. காபாவிலே மட்டும் ஏறக்குறைய 360 தெய்வங்கள் அவர்களுக்கு இருந்தன.

ஹ_பால் (ர்ரடியட ) எனும் தெய்வம் அங்கேயிருந்த தெய்வங்களுக்குள் முன்னுரிமையான தெய்வமாக இருந்தது. ஹ_பால் ஒரு சந்திரக்கடவுள.;

ஏறக்குறைய கி.மு 2000 ஆண்டளவிலிருந்து சந்திரக்கடவுளை வழிபடுவது அரேபியர்களின் வழக்கமாக இருந்தது. மெக்காவில் தான் இந்த ஹ_பால்- ஐ வைத்து அரேபியர்கள் வழிபட்டனர்.

அங்கே அல்லாவையும் வணங்கினார்கள். ஆனால் அல்லாவிற்கு எந்தவிதமான சிலையையும் அவர்கள் வைக்கவில்லை. இதனால் அரேபியர்கள் ஹ_பால்-ஐ அல்லாவிற்கு பதிலாக கும்பிட்டார்கள்,

அதனிடமே தங்கள் விண்ணப்பங்களை வைத்தனர். அல்-இலாவுக்கு சிலை இல்லாததால் அரேபியர்கள் ஹ_பால் எனும் சிலையை அல்-இலாவாக பாவித்து வணங்கினர்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால்: ஹ_பால் தான் அல்லா.

தற்போது இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாவை முன்பு : அல்-இலா என்று அழைத்தனர். கி.பி 610ற்கு பிற்பாடு முகமதுவினால் இப்பெயர் அல்லாவாக மாற்றப்பட்டது.

அரேபியர்கள் மத்தியில் ஒரு மரபு வழிக்கதை இருக்கின்றது, அவர்கள் அல்லாவை கும்பிடுகின்ற சமயம் ஹ_பால்-க்கு அருகில் நின்று வணங்குவார்கள் என்று.

ஹ_பால்-ஐ அவர்கள் காபாவின் உச்சியிலே வைப்பார்கள். ஹ_பால் உடன் இன்னும் 3 பெண் தெய்வங்களை அவர்கள் வைத்து வணங்கினார்கள்.

அல்- லத்

அல்- உத்சா

மனாத்

இந்த மூன்றும் அல்லாவின் பிள்ளைகள்.

அல்லா என்றால் - கடவுள். அரேபியர்களை பொறுத்தமட்டில் அல்லா என்றால்: ஹ_பால்.

(ஹ_பால் தான் அல்-இலா என்பதில் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு. இருவரும் ஒகே கடவுளா அல்லது வௌ;வேறான கடவுளா என்பதில் தான் அந்த கருத்து வேறுபாடு).

முகமதுவின் அல்லா, முகமதுவின் குர்-ஆன்

முகமது உருவாக்கிய புதிய மதத்தில் ஹ_பால்(அல்லா) தான் கடவுள், அத்துடன் வேதாகமத்தை தனக்கு சாதகமாக மாற்றி புதிய மதத்தையும், ஹ_பால் சிலை ஏதும் இல்லாமல் அல்லாவை-யும் உருவாக்கினான்.

குர்-ஆன் உண்மையில் அரேபியர்களின் கலாச்சாரத்தையும், அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும், முகமதுவின் சொந்த வசனங்களையும், கட்டளைகளையும் மற்றும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை அப்படியே உண்மையாகவும், சில பகுதிகளை பொய்யாகவும், சில பகுதிகளை தனக்கேற்றதாகவும் திரிபுபடுத்தி எழுதப்பட்டிருக்கின்றது.

ஆதாரங்கள்

Collier's Encyclopedia: அல்லாவைப்பற்றி:

அரேபியர்கள் மத்தியில் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே அல்லா எனும் முதற்கடவுள் இருந்தது" என்று. (பக்கம் 570)

Britanica: மெக்காவைப்பற்றி: (அரேபிய சரித்திரம், பக்கம் 1045, 1979)

தற்பொழுது நடப்பதுபோல ஹஜ் யாத்திரை, மற்றும் அநேக சடங்கு முறைகள் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே மெக்காவில் நடைபெற்றது.

The Joy of Sects, Peter Occhigrosso, 1996

Die Hadsch, F. E. Peters, p 3-41, 1994

Muhammad und Muhammadanism, S. W. Koelle, 1889, p. 17-19

First Encyclopedia of Islam, E.J. Brill, 1987, Islam, p. 587-591

Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 38-49

Muhammad's Mecca, W. Montgomery Watt, Chapter 3: Religion In Pre-Islamic Arabia, p26-45

History Of The Arabs, Philip K. Hitti, 1937, p 96-101

The Hajj, F. E. Peters, p 3-41,

Muhammad and Muhammadanism, S.W. Koelle, 1889, p. 17-19

History of the Islamic Peoples, Carl Brockelmann, p 8-10

Meet the Arab, John Van Ess, 1943, p. 29

Fabled Cities, Princes & Jin from Arab Myths and Legends, Khairt al-Saeh, 1985, p. 28-30

Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 16-17

Karen Armstrong, Muhammad, (New York: San Francisco, 1992) p. 69.

Britannica, Arabian Religions, p1057, 1979

Southern Arabia, Carleton S. Coon, Washington, D.C. Smithsonian, 1944, p.399

History of the Islamic Peoples, Carl Brockelmann, p 8-10

Islam in the World, Malise Ruthven, 1984, p 28-48

Muhammad The Holy Prophet, Hafiz Ghulam Sarwar (Pakistan), p 18-19, Musli

இஸ்லாம் - அல்லா

இஸ்லாமியர்கள் கூறுவது போல: அல்லாவும் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள கடவுளும் ஒன்று+ஆ?

ஏன் இஸ்ரவேலர்களும், கிறிஸ்தவர்களும் முகமது நபியையும், குர்-ஆனையும் தள்ளி வைத்தனர். என்ன காரணத்தினால் அவர்கள் தள்ளி வைத்தனர்? சிறிது ஆராய்வோம்.

யெகோவா தேவனிடம் இல்லாத அல்லாவின் சில தன்மைகள்:

அல்லா மிகப்பெரிய சதிகாரன்

ஸீரா 3: 54 (குர்- ஆன்)

ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத் திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் (செல்லப்பெயர்: Bhagdad Bob) அவர் தன்னுடைய பேச்சிலே குறிப்பிட்டிருந்தார், அல்லா எல்லாரை விடவும் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் என்று. இதனுடைய அர்த்தம் என்ன ?

ஸீரா 3: 54 சொல்கிறது அல்லா சூழ்ச்சிக்காரன் என்று. அரபிய மொழியில் Makara என்று எழுதப்பட்டிருக்கின்றது. Makara எனும் அரபிய வார்த்தைக்கு சூழ்ச்சி, தந்திரம் அல்லது சதி என்று பொருள்படும்.

இதே Makara எனும் அராபிய வசனம் பரிசுத்த வேதகமத்தில் சாத்தானுக்கு பாவிக்கப்படுகின்றது (ஆதியாகமம் 3:1)

காலிப் அபு பக்ர் ஒரு தடவை சொன்னார், அல்லாவினுடைய சூழ்ச்சியின் சக்திக்கு தான் அஞ்சுவதாக.

ஸீரா 8: 30 (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக.

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

ஸீரா 10: 21 மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது

'திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும் நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சதி, சூழ்ச்சி, தந்திரம் இப்படிப்பட்ட தன்மைகளை உடையவர் இல்லை எங்கள் யெகோவா தேவன்.

சத்தியம் செய்தல்

யெகோவா தேவனுக்கும், அல்லாவிற்கும் இடையிலுள்ள இன்னுமொரு பெரிய வித்தியாசம் என்னவென்றால்: யெகோவா தேவன் தம்மேல் (அவர் மேல்) மட்டும் தான் சத்தியம் செய்வார்.

அவர் தம்மேல் மாத்திரம் சத்தியம் செய்வதற்கான காரணம்: சத்தியம் செய்வதற்கு அவரைவிட பெரியவர் யாருமில்லை என்பதனால்.

எபிரேயர் 6:13 ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:

ஏசாயா 45:23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன், இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது, இது மாறுவது இல்லையென்கிறார்.

எரேமியா 22:5 நீங்கள் இந்த ர்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறாh

ஆனால் குர்-ஆன் கூறும் அல்லா தன்னைவிட சிறிய எல்லாவற்றின் மீதும் சத்தியம் பண்ணுகிறார்.

வானத்தின் பேரில் சத்தியம் குர்-ஆன் 86: 1 வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக 74:32 (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.

74:33 இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

74:34 விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,

53:1 விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

எழுதும் எழுதுகோலின்மீது சத்தியம்
68:1 நூன்- எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!


நகரத்தின் மீது சத்தியம்
90:1 இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.


படைப்புக்களின் மீது சத்தியம்
92:1 (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

92:2 பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

92:3 ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-


அல்லா எல்லாவற்றின் மேலும் சத்தியம் பண்ணுகின்றார், ஆனால் யெகோவா தேவன் தம்மீது மாத்திரம் சத்தியம் செய்கின்றார்.

இப்படியிருக்கையில் இருவரும் ஒன்று என்று சொல்வது "பொருந்தவில்லை".

தவறான கனவை காட்டும் அல்லா

குர்-ஆன் 8:43 (நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக!

எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான் நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.

8:44 நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான் இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் -

இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.

முகமது நபியினுடைய கனவில் அல்லா பொய்யான காட்சியை காண்பிக்கின்றார். ஏனென்றால் போரில் எதிரிகள் அதிகமாக இருக்கின்றபடியால், எதிரிகளுக்கு முஸ்லிம்கள் பயந்து போரை நிறுத்திவிடுவார்கள் என்பதனால்.

வசதியானவர்களுக்கு மட்டும் அல்லாவின் கண்களில் தயவு

17:16 நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம். ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள்.

அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.

வசதியில்லாதவர்கள் ? ஏழைகள் ? அவர்களுக்கு நேர்வழியை பின்பற்ற வேண்டுமென்று அல்லா சொல்ல மாட்டாரோ ?

கடவுளுடைய பெயர்கள்

வேதாகமத்தில் - எபிரேய மொழியில்

எலோகிம் (கர்த்தர்) 2550 அல்லா(கடவுள்)
அடோனாய்(தேவன்) 340 ராப்(தேவன்)
யெகோவா(இருக்கின்றவராக இருக்கிறேன்) 6823 எதுவுமில்லை

பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளுடைய எந்தப்பெயரும் ஏன் குர்-ஆனில் குறிப்பிடப்படவில்லை. ஏன்? குர்-ஆன் சொல்கின்றது மோசேக்கு தேவன் வேதத்தை அருளினார் என்று,

அப்படியானால் குறைந்தபட்சம் யெகோவா (இருக்கிறவராக இருக்கின்றேன்) என்கின்ற பெயராவது குர்-ஆன் இல் குறிப்பிடப்பட்டிருக்கலாமே? ஏன் குறிப்பிடப்படவில்லை?

அல்லா என்றால் அரபு மொழியில் கடவுள் என்று அர்த்தம். எந்தக்கடவுளைப்பற்றி முகமது குர்-ஆனில் குறிப்பிட்டிருக்கின்றார்?

நிச்சயமாகத்தெரியும் வேதாகமத்தில் அல்லாத ஒரு கடவுளை என்று. காரணம் வேதாகமத்தில் உள்ள கடவுளுடைய எந்தப்பெயரும் குர்-ஆனில் குறிப்பிடப்படவில்லை என்பது தான்.

குர்-ஆனை மட்டும் முகமது நபி உருவாக்கவில்லை, ஒரு புதிய கடவுளையும் குர்-ஆனோடு அறிமுகப்படுத்தியிருக்கின்றான்.

நான் நினைக்கின்றேன் இப்படிப்பட்ட குணாதிசயங்களை உடைய அல்லாவிற்கும், யூதர்களும், கிறிஸ்தவர்களும் வணங்கும் யெகோவா தேவனிற்கும் அநேக வேற்றுமை இருப்பதால்- அன்றும், இன்றும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் முகமதுவையும், அல்லாவையும், குர்-ஆனையும் தள்ளிவைத்தனர் என்று.

இஸ்லாம்

இஸ்லாம் மதத்தை உருவாக்கிய முகமது நபி கி.பி சித்திரை மாதம், 20ம் திகதி, 571ம் ஆண்டு மெக்காவிலே (தற்காலத்து சவுதி அரேபியா) பிறந்தான். சிறுவயதிலே தாயையும், தந்தையையும் இழந்த முகமதுவுக்கு, அவனுடைய சிறியதகப்பன் புகலிடம் கொடுத்தார். முஹமது ஒரு வர்த்தக வியாபாரியாக தொழில் செய்து வந்தான்.

பின்பு முஹமது தன்னுடைய 25 ஆவது வயதில் 40 வயது கதியா எனும் பணக்கார விதவையை திருமணம் செய்தான். அதனால் மிகவும் பணக்காரன் ஆனான்.

முகமதுவிற்கு 40 வயதாக இருக்கையில்: ஒருநாள் தன்னுடைய மனைவியாகிய கதியாவிற்கு சொன்னான்:

ஹிரா எனும் குகையில் அல்லாவுடைய தூதன் காபிரியேலை சந்தித்ததாகவும், தன்னை ஓதுவீராக என்று சொன்னதாகவும், தான் அதற்கு எனக்கு ஓத தெரியாது என்று தான் சொன்னதாகவும்,

மூன்றாம் முறை ''படைத்த உம் இறைவனின் திருப் பெயர் கொண்டு ஓதுவீராக! கரு வறைச் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு நிலையிலிருந்து அவன் மனிதனைப் படைத் தான்.

ஓது வீராக! உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில் அவனே எழுது கோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை யெல்லாம் கற்றுக் கொடுத்தான்""(96:1-5) எனக் கூறியாதாகவும், பின்னர் காபிரியேல் தூதன் திரும்பி சென்று விட்டதாகவும்.

பின்பு 22 வருடங்களாக முகமது நபியின் மரணம் வரை காபிரியேல் முகமதுவுடன் பேசியவைகள் எனப்படுபவைகளே குர்-ஆனில் அடங்கியுள்ளது.

கதியா தான் முகதுவினால் முதலாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டவள். அதன் பின்பு முகமது ஜனங்களுக்கு அல்லாவைப்பற்றி கூறத்தொடங்கினான். ஆரம்பத்தில் முகமதுவை அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மாறாக மெக்காவிலே முகமதுவிற்கு எதிர்ப்பு வந்தது. அதனால் மெதினாவுக்கு முகமதுவும், முகமதுவின் ஆட்களும் தப்பியோடினார்கள். மெதினாவிலே முகமதுவினுடைய போதனைக்கு வரவேற்பு இருந்தது.

8 வருடங்களுக்கு பின்பு முகமது மெக்கவை கைப்பற்றினான். இப்போது மெக்கா ஒரு புனித நகரமாக விளங்குகின்றது.

முகமதுவையும், குர்-ஆனையும் அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும் ஏற்றுக்கொள்ளவவில்லை. இன்றும், என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கிறிஸ்துவுக்கு பின்

571: முகமது பிறப்பு
623: முகமது மெதீனாவுக்கு செல்லுதல்
631: முகமதுவினால் மெக்கா கைப்பற்றப்பட்டது
633: முகமதுவின் மரணம்

குர்-ஆன்- அறிமுகம்

முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆன் எழுதப்படவில்லை. முகமதுவுக்கு எழுதப்படிக்கவும் தெரியாது. முகமதுவினுடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய போதனைகளை குறித்து பல வித்தியாசமான கருத்துக்கள் இருந்தது. முகமதுவின் வார்த்தைகள் அழிந்து விடுமோ, மாற்றப்பட்டுவடுமோ என்று கருதினர்.

கி.பி 634 அளவில் யமாமா எனும் போரில் முகமதுவின் வார்த்தைகளை கேட்ட அநேகர் கொல்லப்பட்டுவிட்டதனால், சையத் பின் தபீத் என்பவரை நியமித்து அலி என்ற கலிபா குர்-ஆன் வாக்கியங்களை தொகுக்க கட்டளையிட்டார். அலியின் மரணத்தின் பின்பு கலிபா உத்மான் அரேபியாவை ஆணடார்.

குவைது என்ற போர்வீரன் உத்மானிடம் குர்-ஆன் வாக்கியங்களை குறித்து பேசினான். அதன் பின்பு அவர் 14 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, குர்-ஆன் வாக்கியங்களை சேகரிக்க முயன்றார்.

முகமது வாய் வழியாக சொன்னவற்றை கேட்ட அநேகர் வந்து முகமது இதையெல்லாம் என்று சொன்னார்கள். அதிகளவு ஜனங்கள் வந்ததனால், இனி யாரும் குர்-ஆன் வாக்கியங்களை கொண்டுவர வேண்டாம் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதுவரை சேகரித்த வாக்கியங்களை எல்லாம் தொகுத்து அமைத்தனர்.

இந்த நிகழ்ச்சி கி.பி 650- 656 வரையில் நடந்தது. குர்-ஆனின் தொகுப்பில் எவை சேர்க்கப்பட வேண்டும், எவை சேர்க்கப்பட கூடாது என்று உத்மான் கட்டளையிட்டார். அதிகாரப்பூர்வமான குர்-ஆன் ஒன்று தான் இருக்க வேண்டுமென்று இப்படி செய்யப்பட்டது.

தன் காலத்தில் கொடுக்கப்பட்ட குர்-ஆனின் பிரதியை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, அல்லது அப்படி கருதப்படுகின்ற எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், அல்லது துண்டுப்பகுதிகளாக இருப்பினும் அவற்றையும் எரித்து விட வேண்டுமென்று உத்மான் கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6: 479)

இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது.

ஹதீஸ்- அறிமுகம்

இஸ்லாமியர்கள் குர்-ஆனிற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவம் ஹதீஸ் கலைக்கும் கொடுக்கின்றார்கள். ஹதீஸ்- இல் முகமது நபியினுடைய உரைகள், செயல்கள் (வாழ்க்கை), அவர் அனுமதித்த காரியங்கள் ஆகியவைகள் அடங்கியுள்ளது.

உலகத்திலுள்ள அனைத்து இஸ்லாமியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் நபிமொழிகள்:

ஸஹீஹ் அல்புகாரி (100 சத விகிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நடைமுறையில் இருப்பதும்)

ஸஹீஹ் முஸ்லிம்

சுனன் இப்னுமாஜா

சுனன் அபுதாவூது

ஜாமி உத் திர்மிதீ

சுனன் நஸாஜி

இவற்றில் குர்ஆனுக்கு அடுத்து ஆதாரப்பூர்வமானது என அனைத்துத் தரப்பினராலும் அ';கீகரிக்கப்பட்டுள்ளது ஸஹீஹ் அல்புகாரி ஆகும். புகாரா என்னும் ஊரில் பிறந்த இமாம் முஞம்மது பின் இஸ்மாயீல் என்பவரால் வகுக்கப்பட்டது தான்: ஸஹீஹ் அல்புகாரி எனும் நபி மொழி தொகுப்பு ஆகும்