சனி, 31 ஜனவரி, 2009

இயேசு பிறந்த கதை

கலிலியேயாவில் நாசரேத் எனும் ஊரைச்சேர்ந்த ஜோசப் எனும் தச்சனுக்கும் மரியாள் எனும் இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாயிருந்தது. ஒர் இரவில் கடவுளின் தூதன் கபிரியேல், கன்னியான மரியாளிடம் தூதுவந்தான்.

"மரியே வாழ்க," தூதன் அறிவித்தான்,"ஆண்டவர் உம்முடனே, பெண்களிலெல்லாம் பேறுபெற்றவர் நீர்." என்றான். மரியாள் குழம்பினாள்.

"அஞ்சாதே மரியே" வந்தவன் தொடர்ந்தான்,"கடவுளின் கருணையைப் பெற்றுள்ளாய். இதோ ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாய், அவனுக்கு இயேசு எனப் பெயரிடுவாய் அவன் கடவுளின் மகன் எனப்படுவான்.

தாவீதின் அரசை கடவுள் அவனுக்குத் தருவார். யாக்கோபின் சந்ததியை அவர் ஆள்வார் அவர் அரசுக்கு முடிவே இராது." என்றான் கபிரியேல்.

மரியாள் கபிரியேலிடம்,"இது எப்படி நடக்கும் எனக்கு இன்னும் மணமாகவில்லையே?" என்றாள். "தூய ஆவி உன்மேல் இறங்கும்; கடவுளின் அருள் உன்மேல் படரும்.

ஆகவே உன்னில் பிறப்பவரும் கடவுளின் மகன் எனப்படுவான்"பதிலளித்தான் கபிரியேல்,"மலடி என அழைக்கப்பட்ட உன் உறவினள் எலிசபெத்தும் வயதான காலத்தில் கருத்தரித்துள்ளாள்; அவளுக்கு இது ஆறாவது மாதம். கடவுளால் ஆகாதது எதுவுமில்லை".

"இதோ ஆண்டவரின் அடிமை; உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" எனப் பதிலளித்தாள் மரியாள்.

மரியாள் எழுந்து யூதாவின் நகரொன்றுக்குத் தன் உறவினள் எலிசபெத்தக் காணச் சென்றாள். மரியாள் எதிர்வந்ததும் எலிசபெத்தின் கருவிலிருந்தக் குழந்தை துள்ளியது.

எலிசபெத் குரலெடுத்துச் சொன்னாள்,"பெண்களில் பேறுபெற்றவள் நீ, உன் வயிற்றின் கனியும் பேறுபெற்றது.

என் ஆண்டவரின் தாய் என்னைக் காணவர நான் என்ன பேறுபெற்றேன் உன் வாழ்த்து என் காதில் எட்டியதும் அன் வயிற்றில் குழந்தை சந்தோஷத்தில் துள்ளியது."

"என் ஆன்மா இறைவனை ஏறிப் போற்றுகிறது", மரியாள் பதிலுறுத்திப் பாடினாள்,"என் ஆவி இறைவனில் மகிழ்கின்றது.

அவரின் அடியவர்களில் கீழானோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இனிவரும் தலைமுறையெல்லாம் எனைப் பேருடையாள் என்றிடும்.

வல்லமையுடையவர் மிகப்பெரும் செயலை எனக்குச் செய்துள்ளார் அவர் பெயர் புனிதப்படுத்தப்படுவதாக. தலைமுறை தலைமுறையாக, அவரை அஞ்சுபவர்களுக்கு அவர் கருணை புரிந்தார். அவரின் கரங்களின் வலிமையைக் காண்பித்துள்ளார்.

செருக்குற்றவரை சிதறடித்தார், வலிமைதங்கியவரை இருக்கைகளிலிருந்து வீழ்த்தினார், தாழ்த்தினார். பசியுற்றோருக்கு நற்பொருளளித்தார் செல்வந்தரை வெறுங்கயோடனுப்பினார்."

மரியாள் மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியபின் ஊர்திரும்பினாள்.

இளைஞன் ஜோசப் மரியாள் கற்பமாயிருப்பதை அறிந்தான். கவலை கொண்டான். நல்மனத்தோடு, ஊர்முன் அவளைக் கூட்டி அவமானப்படுத்தாமல் ஒதுக்கிவிட வேண்டும் என நினத்திருந்தான்.

ஜோசப்பின் கனவில் தேவதூதன் தோன்றி,"ஜோசப், தாவீதின் மகனே, நீ மரியாளை மனைவியாய் ஏற்றுக்கொள், அவள் கர்பமாயிருப்பது பரிசுத்த ஆவியின் அருளால். அவளுக்குப் பிறக்கும் மகனுக்கு இயேசு எனப் பெயரிடுங்கள் ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்." என்றார்.

ரோம அரசன் சீசரின் ஆணையின்படி ஒரு மக்கள்தொகை கணக்கெடுப்பொன்று நடந்தது. ஜோசப்பும் மரியாளை அழைத்துக்கொண்டு கலிலேயாவிலிருந்து யூதாவிலிருந்த பெத்லேகம் எனும் ஊருக்கு கணக்கெடுப்பில் கலந்துகொள்ளும்படி வந்தார்.

விடுதிகளில் இடம் கிடைக்காததால் கால்நடைகளை கட்டிவைக்கும் தொழுவமொன்றில் தங்க நேர்ந்தது. அப்போது மரியாள் அழகிய ஆண்மகனைப் பெற்றெடுத்தாள்.

தூரத்தில் கிடை போட்டிருந்த மேய்ப்பர்களுக்குத் தூதுவன் ஒருவன் தோன்றினான்."அஞ்சாதீர் இதோ நற்செய்தி ஒன்றை உங்களுக்குத் தருகின்றேன்

தாவீதின் நகரத்தில் இன்று இயேசுக் கிறீஸ்து பிறந்துள்ளார் துணியில் பொதியப்பட்டு முன்னணையில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையைக் காண்பீர்கள்." என்றார்.

அப்போது, வானம் திறந்தது. வானகத்தில் தூதுவர்களின் பாடல் ஒலித்தது. "உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக. பூவுலகில் நல் மனத்தவருக்கு அமைதியும் ஆகுக."

அந்த தெவீகக் காட்சி அகன்றதும் மேய்ப்பர்கள் பெத்லகேமுக்குச் சென்று குழந்தை ஏசுவைக் கண்டனர்.

ஏரோது மன்னன் அரசாண்டுவந்தான் அப்போது. கிழக்கிலிருந்து மூன்று அரசர்கள் நட்சத்திரம் ஒன்று வழிகாட்ட எருசலேமுக்கு வந்தனர்.

ஏரோதை சந்தித்து,"யூதர்களின் அரசன் பிறந்துள்ளாரே அவர் எங்கே?" என்றனர். இதைக் கேட்ட ஏரோது கலங்கினான்.

தன் அவையின் அறிஞர்களை அழைத்து வினவினான். அவர்களும் "முன்னறிவிக்கப்பட்டபடி, பெத்லகேமில்." எனக் கூறினர்.

ஏரோது மூவரையும் அழைத்து,"போய் அந்தக் குழந்தையைத் தேடுங்கள். கண்டதும் எனக்கும் சொல்லுங்கள் நானும் அவரை வணங்கவேண்டும்." என்றான்.

ஏரோதின் அவையை நீங்கி வந்ததும் வெளியே நட்சத்திரம் மீண்டும் தோன்றி இயேசு இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தது.

கனவில் எச்சரிக்கப்படவே மூவரும் ஏரோதிடம் செல்லாமல் வேறுவழியே தங்கள் ஊரை நோக்கிப் பயணித்தனர்.

ஏரோது ஏமாற்றமடைந்தான்.பெத்லகேமில் இரண்டுவயதுக்குட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொல்லச்சொன்னான்.

தேவதூதனால் எச்சரிக்கப்பட்ட ஜோசப் மரியாளையும் குழந்தையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போனார். ஏரோதின் காலம் முடிந்ததும் திரும்பிவந்து நசரேத்தில் வாழலாயினர்.

கத்தோலிக்கம் - ஒரு மேலோட்டம்

பிற மதங்கள் பற்றி அறிந்து கொள்வதில் எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு. அறியாத ஒன்றை அன்பு செய்வது, ஏன் சகித்துக்கொள்வதும் கூடக் கடினம்.

கத்தோலிக்கத் திருச்சபை (Catholic Church) பற்றி குறைந்த பட்சம் ஒரு மேலோட்டமான அறிதலையாவது ஏற்படுத்தவே இந்தக் கட்டுரை.

சிறப்பு ஆசிரியர் என்கிற முறையில் எனக்கு மிகவும் தெரிந்த ஒன்றை சொல்வதுவே முறையாகுமென நினைக்கிறேன்.

ஒரு மீட்பரை எதிர்பார்த்திருக்கும் யூதர்கள் மத்தியில், யூதராய் தோன்றுகிறார் இயேசு. இவர் பிறப்பு கி.மு 6 முதல் 4க்குள் இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இளம் போதகராய், யூத மத குருக்களை வெளிப்படையாக கண்டிக்கிறார். அவரின் போதனைகள் மனிதம் சார்ந்ததாக இருக்கின்றன அமைப்பு சார்ந்ததாக இல்லை.

மோயீசனின் பத்து கட்டளைகளை சுருக்கி, "எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசி; தன்னைத்தானே நேசிப்பது போல பிறறையும் நேசி" என்கிறார்.

ஒருவருக்கொருவர் அன்பு செய்வது, பகைவரை மன்னிப்பது, கடவுளின் அளவில்லா இரக்கம், பாவத்திற்கு மன்னிப்பு இவையே இயேசுவின் முக்கிய போதனைகளாயிருந்தது.

வெறும் போதனைகள் மட்டுமில்லாமல் சில அற்புதங்களையும் இயேசு செய்கிறார். இவர் இறைமகன் என பலரும் சொல்ல இந்த அற்புதங்கள் உதவுகின்றன.

இயேசு 12 சாதாரண மனிதர்களை (அதிகம் மீனவர்கள்) தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து தன் செய்தியை பரப்ப அவர்களை தயார் செய்கிறார்.

இவர்களில் ஒருவரான தோமையார்(தாமஸ்) சென்னை வந்து, இங்கே கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளார். சாந்தோம் தேவாலையத்தில் இவரது கல்லறை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இயேசு தன் சீடர் இராயப்பரை(பீட்டர்) சீடர்களின் தலைவராக நியமிக்கிறார். "நீ இராயப்பர். உன் மீது என் திருச்சபையை கட்டுவேன்...விண்ணரசின் திறவுகோல்களை உன் கையில் கொடுப்பேன்" என்கிறார் இயேசு.

பீட்டரைத் தொடர்ந்து வருபவர்கள் போப் எனப்படும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள்.

யூத மதக் குருக்கள் இயேசுவை தெய்வ நிந்தனை(Plasphemy) செய்பவன் எனச் சொல்லி அவரை சிலுவையில் அறைந்து கொல்லும்படி உராமை(Rome) அரசை வலியுறுத்தி அதில் வெற்றி பெறுகின்றனர்.

சிலுவையில் அகால மரணமைடைந்த இயேசு மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்து சீடர்களுக்குத் தோன்றுகிறார்.

நாற்பதாவது நாள் 'உலகெங்கும் போய் என் நற்செய்தியை அறிவியுங்கள்' எனச் சொல்லிவிட்டு வானகம் செல்கிறார்.

இவை அனைத்தும் மத்தேயு, லூக், மாற்கு மற்றும் ஜான் எழுதிய நற்செய்திகள் எனப்படும் Gospelகளிலிருந்து பெறப்படும் விவரங்கள்.

இதற்குப்பின் அவரின் சீடர்கள் ஊர் ஊராகத்திரிந்து பல யூதர்களிடமும் யூதரல்லாதவர் களிடமும் இயேசுவின் போதனைகளை பரப்புகிறார்கள்.

பொது வழிபாடு என எதுவும் இல்லை எனினும், ஆதி கிறித்தவர்கள் தங்கள் சொத்துக்களைக் கூட பொதுவில் வைத்து ஒன்றாய் வாழ்ந்ததாக 'அப்போஸ்தலர் பணி' எனும் விவிலிய புத்தகம் சொல்கிறது.

கிறித்துவ மதம், முழுவதுமாய் உருப்பெறாத இந்த நாட்களில் பல பிரிவினைகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்துவந்தன. கி. பி 50ல் ஒரு சங்கமமைத்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த கால கட்டத்தில் புனித பால் கவனிக்கத்தக்கவராகிறார். பால் கிறித்தவர்களை கொன்றுபோடச் செல்லும் படைத் தளபதி. வழியில் அவருக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைக்கிறது. கடவுளின் குரல் கேட்கிறது.

அதுமுதல் கிறித்துவை நம்பலானார். கத்தோலிக்க கிறித்துவக் கோட்பாடுகள் பலவும் புனித பால் வறையறுத்தார். இவர் அன்றைய கிறித்துவ மக்களுக்கு எழுதிய கடிதங்கள் பைபிளில் அடக்கம்.

கி. பி 50 வாக்கில்தான் நற்செய்திகள் எழுதப்பட்டன என கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இயேசு இறப்புக்கு 25 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பின்.

கி.பி 69ல் நீரோவின் உரோமை அரசு கிறித்துவர்களை கொடுமைப் படுத்தி கொல்ல ஆரம்பிக்கிறது. பீட்டர் சிலுவையில் தலைகீழாக அறையப்படுகிறார். புனித லினஸ் பொறுப்பேற்கிறார்.

Quo Vadis என்கிற ஆங்கிலப் படத்தில் இந்தக் காலத்தை அழகாகச் சொல்லியிருப்பார்கள். பயந்து வாழும் கிறித்துவர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ள மீன் குறியீட்டை பயன்படுத்தினர்.

இன்றும் அமெரிக்க கார்களில் இந்த அடையாளம் பார்க்கலாம்.
அதிகம் கிறீத்தவர்கள் இறக்க, இறக்க கிறித்தவம் அழியாமல் தழைக்கவே செய்தது.

கி.பி 110 ஆன்டியொக்கின் பிஷப் இக்னேஷியச் முதன்முறை 'கத்தோலிக்க திருச்சபை' எனும் பெயரை பயன்படுத்துகிறார், பெயர் நிலைக்கிறது. வரலாறு பல போராட்டங்களுடன் தொடர்கிறது.

பலமுறை பல அரசர்களால் கிறித்துவர்கள் கொடுமை படுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். யூத பழக்கங்கள் பல கைவிடப்பட்டன

மற்ற மதங்களிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் பழக்கங்கள் பெறப்பட்டன. கி.பி 150ல் பைபிள் தொகுப்பாக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சபை வளர்ந்தது.

உரோமை பேரரசர் கான்ஸ்டாண்டைன் கிறீத்தவர்களுக்கெதிரான துன்புறுத்தலை நிறுத்தினார், ஒருவகை மத நல்லிணக்கத்தை நிறுவ முயற்சித்தார்.

நிசியாவில் ஒரு குழு கூடி கடவுள் மகன்(இயேசு) பரிசுத்த ஆவி எனும் மூன்றும் ஒன்றான கடவுள் கொள்கையை உருவாக்கினர்.

தமத்திரித்துவம் (The Holy Trinity) என இது அழைக்கப்படுகிறது. 'ஆரிய கிறீத்துவர்களின்' (அந்தக் காலத்தில் இருந்த ஒரு கிறித்துவக் குழு) கடவுள் ஒருவரே, இயேசு அவரின் தூதரே எனும் கொள்கை மறுக்கப்பட்டது.

கான்ஸ்டாண்டின் கிறித்துவத்தை அங்கீகரிக்கிறார். அவருக்குப் பின் தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு கிறீத்துவத்தை அரச மதமாக அறிவிக்கிறார்.

கத்தோலிக்கம் உரோமை அரசின் ஆட்சி மதமாகிறது 'ரோமன் கத்தோலிக்கம்'(RC) எனப் பெயர் வருகின்றது.

பைபிள் பழைய, புதி ஏற்பாடாக வரையறுக்கப்படுகிறது. மற்ற புத்தகங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஆர்த்தடாக்ஸ் கிறித்துவமும் கத்தோலிக்க கிறித்துவமும் கி.பி 476 வாக்கில் பிரிகின்றன.

கி.பி 638ல் இஸ்லாமிய படைகள் கிறித்துவத்தை குறிவைத்து தாக்குகின்றன. பல நாடுகள் இஸ்லாமிய படையின் கீழ் வருகின்றன.

1095ல் போப் அர்பன் சிலுவைப் போரை அறிவிக்கிறார் கிறித்துவரல்லாத, சில கிறித்துவ, அரசாங்கங்கள் சிலுவைப்போராளிகளால் வீழ்த்தப்படுகின்றன.

புனிதத் தலம் (Holy Land) ஆன எருசலேமை இஸ்லாமியர்களிடமிருந்து கைப்பற்றுவதே சிலுவைப் போரின் முக்கிய நோக்கம்.

இன்றும் ஆறா வடுவாய் சிலுவைப் போர்கள் கிறித்துவத்தின் வரலாற்றில் நிலைக்கின்றன.

1517ல் மார்டின் லூத்தர்(அமெரிக்கர் அல்ல) கத்தோலிக்க திருச்சபை காணிக்கைக்கு/காசுக்கு ஆன்மீக பரிகாரங்களை(Indulgance) வழங்குவதை எதிர்க்கிறார். 1582 போப் கிரகொரி தற்கால காலண்டரை அறிவிக்கிறார்.

ஒரு கால கட்டத்தில் திருச்சபை பல அரசாங்கங்களை தன் கைக்குள் வைத்திருக்கும் மாபெரும் அரசியல் சக்தியாக விளங்கியது.

கலை, இலக்கிய, அறிவியல் படைப்புக்கள் எல்லாமே திருச்சபையின் அனுமதியுடனேயே வெளியிடப்பட்டன.

மைக்கல் ஆஞ்சலோ, டா வின்சி, கலிலியோ போன்றவர்கள் திருச்சபையின் கண்காணிப்பில், நிற்பந்தத்தில் படைப்புக்களை உருவாக்க நேர்ந்தது.

இரண்டாவது சிலுவைப்போரும், ஸ்பானிஷ் இன்குயிசிஷன் போன்ற கறுப்பு நிகழ்வுகளும் நடந்தேறின. இந்தியா, இந்தோனேசியா துவங்கி ஆசிய நாடுகளிலும் கிறித்துவம் பெரிதாய் பரவ ஆரம்பித்தது.

இடையே 1500களில் இங்கிலாந்து அரசர் தன் திருமணத்தை ரத்து செய்ய போப்பை கோரினார். அது மறுக்கப்படவே தன்னை ரோமன் கத்தோலிக்கத்திலிருந்து விலக்கிக்கொண்டு இங்கிலாந்து திருச்சபை (Church of England) என ஒன்றை ஆரம்பித்தார்.

மார்ட்டின் லூத்தரின் கத்தோலிக்க எதிர்ப்பும் சேர்ந்து ப்ராட்டஸ்டாண்ட்(Protestant) திருச்சபைகள் வளர ஆரம்பித்தன.

ம்ம்ம் வரலாறு சோர்வளிக்கிறதா?

ஒரு வேடிக்கையான நிகழ்வு. மார்டின் லூத்தர் ஒரு கத்தோலிக்க பாதிரியாரிடம் சென்றார். "நூறு ரூபாய் காணிக்கையாய் தந்தால் என் மாமாவின் ஆவி சொர்க்கம் போய்விடுமா?" என்றார்.

பாதிரியாரும் "ஆமாம்" என்றார். மார்டின் லூத்தரும் காசை பாதிரியாரிடம் தந்தார். கொஞ்ச நேரம் கழித்துவந்து "ஃபாதர் என் மாமா ஆவிதான் சொர்க்கம் போயிருக்குமே அந்தக் காசை திருப்பிக் கொடுங்கள் என்றார்".

நல்லதும் கெட்டதுமாய் வளர்ந்து வந்தது திருச்சபை. 1962 முதல் 1965 வரை இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூடி இன்று திருச்சபை எப்படி உள்ளதோ அதை வரையறுத்தது. பல கலாச்சாரங்களோடு திருச்சபை இணங்கியது.

திருச்சபை கதவை அகலத் திறந்தது. லத்தீன் மட்டுமல்லாமல் மக்கள் தத்தம் மொழியில் வழிபாடுகளில் பங்கெடுக்க முடிந்தது.

இரண்டாம் வத்திக்கான் கவுன்சிலின் முக்கிய நோக்கமே "திருச்சபையின் சன்னல்களைத் திறந்துவிட்டு நம்மால் மக்களைப் பார்க்கவும் மக்களால் நம்மை பார்க்கவும் வழி வகுப்பது" என்பதுதான்.

20 நூற்றாண்டு கண்ட பல சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல திருத்தங்களை திருச்சபை செய்தது. இன்றும் பல மாறுதல்களைத் தொடர்ந்து செய்துகொண்டு பயணிக்கிறது கத்தோலிக்கத் திருச்சபை.

இதைவிட குறுகலாக கத்தோலிக்க கிறித்துவத்தின் வரலாற்றை சொல்ல முடியாது என நினைக்கிறேன்.

கத்தோலிக்க கிறித்துவத்தின் அடிப்படை நம்பிக்கை என்ன? பன்னிரண்டு வரிகளில் இதை சொல்லிவிடலாம்.

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவை நம்புவது, அவரின் ஒரே மகனான இயேசு கிறீத்துவை நம்புவது, இவர் பரிசுத்த ஆவியின் வல்லமையால் கற்பமாய் உற்பவித்து கன்னி மரியாளிடம் பிறந்தார் எனவும்,

போஞ்சு பிலாத்தின் (Pontius Pilate) அதிகாரத்தில் பாடுபட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார், பரலோகத்தில் எல்லாம் வல்ல இறைவனின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்,

வாழ்பரையும், இறந்தவரையும் தீர்ப்பிட வருவார் எனவும் நம்புவது, பரிசுத்த ஆவியை நம்புவது, கத்தோலிக்க திருச்சபையை நம்புவது, புனிதர்கள் உறவை நம்புவது,

பாவ மன்னிப்பை நம்புவது, உடலின் உயிர்ப்பை நம்புவது மற்றும் நித்திய வாழ்வை நம்புவது. என பன்னிரண்டு அடிப்படை நம்பிக்கைகள்.

இவை ஒவ்வொன்றிலிருந்தும் எடுக்கப்படும் பல்வேறு கிளை நம்பிக்கைகள், ஒவ்வொன்றும் கலந்தாய்வுகளோடு வரையறுக்கப்பட்டுள்ளன.

கத்தோலிக்கத்தின் மிக முக்கிய வழிபாடாக திருப்பலி(Holy Mass) உள்ளது. பொதுவாக 'பூசை' என அறியப்படும்.

வெறும் வேண்டுதல் மட்டுமல்லாமல், பாவங்களுக்கு மனம் வருந்துவதும், போதனைகளை கேட்பதுவும், நன்றியறிவித்தலும் என பலக் கூறுகளை உள்ளடக்கியது திருப்பலி.

எல்லாவற்றிற்கும் மேலாக 'திரு விருந்து'. இயேசுவின் கடைசி இராவுணவின்போது அவர் "இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றதற்கேற்ப இந்த திருவிருந்து வழிபாடு நடைபெறுகிறது. கத்தோலிக்கராயினும் இந்த விருந்தில் பங்குகொள்ள சில தகுதிகள் வேண்டியுள்ளது.

இதில் வழங்கும் அப்பமும், இரசமும் இயேசுவின் உடலும், இரத்தமும் என்பது நம்பிக்கை. இவை வெறும் அடையாளங்களல்ல.

அப்படியே இயேசுவின் உடலும் இரத்தமும். இதனால்தான் பொதுவாக பாவமன்னிப்பு பெற்று தயார் நிலையிலுள்ளவர்களை மட்டும் இதில் பங்கெடுக்க அழைக்கிறார்கள்.

திருச்சபை ஏழு திருச்சாதனங்களை (Sacraments) வழங்குகிறது. ஞானஸ்நானம், பச்சாதாபம், புது நன்மை, உறுதி பூசுதல், திருமணம், குருத்துவம் மற்றும் நோயில் பூசுதல். இவை ஏழில் ஆறு திருச்சாதனங்களை ஒரு கத்தோலிக்கர் பெறலாம்.

திருமணமானவர் குருத்துவத்தை தேர்ந்தெடுக்க முடியாது. இந்த விதிக்கு மிகவும் குறைந்த விலக்குகளே உள்ளன.

'ஞானஸ்நானம்' , முதல் பெற்றோர்களான ஆதாம் ஏவாளின் பாவத்தின் சுவடை நம்மிலிருந்து நீக்குகிறது. இதை 'ஜென்ம பாவம்' (Origional Sin) என்கிறோம்.

'பச்சாதாபம்' பாவ மன்னிப்பு பெறும் வழி. தன் பாவங்களை குருவிடம் முறையிட்டு பரிகாரம் செய்து மன்னிப்பு பெறுவது.

'புதுநன்மை' திருவிருந்தில் பங்கு கொள்ளும் தகுதி அளிக்கிறது. இதன் பிறகே ஒருவர் தொடர்ந்து திருவிருந்தில் பங்கேற்க முடியும்.

'உறுதிபூசுதல்' பரிசுத்த ஆவியில் கத்தோலிக்கரை உறுதிப்படுத்துவது. பிறகு 'திருமணம்' 'குருத்துவம்' ஏதேனும் ஒன்றில்தான் பங்குகொள்ள முடியும்.

நோய்வாய்பட்டு மரண படுக்கையில் இருப்பவர்களுக்கு 'நோயில் பூசுதல்' எனும் அருட்சாதனம் வழங்கப்படுகிறது.

பண்டிகைகள் என்றால் அதிகம் பிரபலம் 'கிறிஸ்துமஸ்' மற்றும் 'ஈஸ்ட்டர்'. இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவது கிறிஸ்துமஸ் அவரின் உயிர்ப்பை கொண்டாடுவது ஈஸ்ட்டர்.

ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிறு 'குருத்து ஞாயிறு'. இயேசு சிலுவை மரணத்திற்கு முன்பு எருசலேம் நோக்கி பயணிக்கிறார். மக்கள் அவரை வாழ்த்தி வரவேற்கிரார்கள்.

ஒலிவ மரக்கிளைகளை கையில் எடுத்து கழுதைமேல் பவனிவரும் போதகரை வணங்குகிரார்கள். இதே மக்கள் சில நாட்களில் 'இவனை சிலுவையில் அரையுங்கள்' என எதிர் சாட்சி சொல்வார்கள்.

இதை நினைவு கூறுவது குருத்து ஞாயிறு(Palm Sunday'). ஆலிவ் கிளைகளுக்குப் பதில் தென்னை ஓலை பயன் படுத்தப்படுகிறது.

சாம்பல் புதன் அல்லது விபூதி புதன் என்றும் அழைக்கப்படும் நாள் கத்தோலிக்கர்களுக்கு மிக முக்கியமான நாள். இந்த நாள் துவங்கி நாற்பது நாட்கள் 'தவக்காலம்' (Lent) என அழைக்கப்படுகிரது .

தவக்கால நாட்கள், லௌகீகப் பயணத்திலிருந்து கொஞ்சம் விலகி ஆன்மீக நிழலில் இளைப்பாற வாய்ப்பளிக்கும் நாட்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இந்தக் காலத்தை பயன்படுத்துவார்கள்.

தவக்காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் 'சிலுவைப் பாதை' நடைபெறும். சிலுவைப் பாதையில் இயேசுவின் இறுதிப் பயணத்தில், அவர் சிலுவையில் அறையப்படுவதைச் சுற்றிய 14 நிலைகளை அல்லது நிகழ்வுகளை தியானிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

பொதுவாக கத்தோலிக்க கோவில்களில் இந்த பதிநான்கு தலங்களின் படங்களும் பார்க்கக்கிடைக்கும்.

தவக்காலத்தின் நிறைவான வாரம் 'புனித வாரம்'. இதில் புனித வியாழன் (Maundy Thursday), பெரிய/புனித வெள்ளி (Good Friday) எனும் நாட்கள் வருகின்றன.

புனித வியாழன் இயேசுவின் கடைசி இரா உணவை நினைவு கூறும் நாள். அன்றைய வழிபாட்டில் இயேசு செய்ததைப்போல பாதிரியார் 12 பேரின் கால்களைக் கழுவுவார். 'பணிவிடை செய்யவே வந்தேன்' என இயேசு சொன்னதன் நினைவாக.

அமெரிக்காவில் குடும்பத்தலைவர் மற்றவர்களுக்கு இதைச் செய்ய எல்லோரும் மாரி மாறி சேவகர்கலாவதைப் பார்த்திருக்கிரேன். இந்தியாவில் இந்தப்பழக்கம் இல்லை.

'புனித வெள்ளி' இயேசு இறந்த நாளை நினவு கூறுகிறது. பெரிய அளவில் சிலுவைப்பாதையும், சிலுவையை முத்திசெய்யும் ஒரு வழிபாடும் நடைபெறும்.

இந்த வழிபாடுகளில் மெல்லிய சோக இழையோடும். மனம் வருந்தவும் மனம் திருந்தவும் நல்ல தருணங்கள் இவை.

புனத வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை நள்ளிரவு, சிறப்பு ஈஸ்டர் விழிப்பு பூசை நடைபெறும்.

பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் மனிதனின் மீட்பின் வரலாறு ஆதாம் ஏவாள் துவங்கி முழுவதும் வாசிக்கப்படும். சிறப்பாய் ஒரு பெரிய மெழுகுத் திரி ஏற்றிவைக்கப்படும்.

சரி கிறிஸ்த்துமஸுக்கு லீவ் கிடைக்கும் ஆனா ஈஸ்டருக்கு? யோசியுங்க.

இது போக சகல ஆத்துமாக்கள் திருநாள், மாதா பரலோகம் போன திருநாள், திருக்குடும்பத் திருநாள் என சில பொதுவான திருநாட்கள் வரும்.

மற்றபடி புனிதர்களை நினைவு செய்ய அந்தந்த புனிதர்களுக்கென ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தோனியார், சவேரியார், இராயப்பர் & சின்னப்பர் போன்ற பெயர்போன புனிதர்களின் திருநாட்கள் பெரிதாய் கொண்டாடப்படும்.

கத்தோலிக்க கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு காவல் புனிதரை (Patron Saint) கொண்டிருக்கும் அல்லது ஒரு கருத்தமைப்பை முதன்மை படுத்தியிருக்கும்.

சாந்தோம் (San Thom = Saint Thomas) புனித தோமையாரை காவல் புனிதராகக் கொண்டிருக்கிறது.

பூக்கடையில் செவ்வய் கிழமையில் கூட்டமாயிருப்பது அந்தோனியார் கோவில், எழும்பூரில் இயேசுவின் திருஇருதயம், வேளாங்கண்ணியில்.... வேளாங்கண்ணி மாதா. தங்கள் காவல் புனிதரின் நினைவு நாளில் அந்தந்த கோவில் திருவிழாக்கள் நடைபெறும்.

யார் இந்தப் புனிதர்கள்? கத்தோலிக்க திருச்சப்பை மட்டுமே புனிதர்களை அங்கீகரிக்கிறது, பட்டமளிக்கிறது. உதாரணபுருஷர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து மூன்று நிலைகளாக வழங்கப்படுகிறது புனிதர் பட்டம்.

ஒருவரின் இறப்புக்கு 5 வருடங்கள் கழிந்தபின்னரே இதற்கான முயற்ச்சிகள் துவங்கும். அன்னை தெரசாவிற்க்காக இந்த விதி தளர்க்கப்பட்டுள்ளது.

மாதா தெய்வமா? இல்லவே இல்லை. இயேசுவின் தாய் மாதா மேலே சொல்லப்பட்டுள்ளதுபோல ஒரு புனிதர்தான். இயேசுவின் தாய் என்பதால் ஒரு சிறப்பு இடம் அவருக்கு தரப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாது.

கிறித்துவர்கள் பலரும் கழுத்தில் போட்டிருக்கும் செபமாலை மாதாவிற்கான சிறப்பு ஜெபம் சொல்லப் பயன்படுத்தப்படுகிறது.

பல இடங்களில் மாதா காட்சி தந்ததாக நம்பப்படுகிறது. நாகப்பட்டினம் வேளாங்கண்ணியும் அப்படி ஒரு இடம். மாதா தோன்றிய அந்தந்த ஊர் பெயரிலேயே பாத்திமா, லூர்து என மாதா அழைக்கப்படுவது வழக்கம்.

சரி இந்திய நாட்டுக்குப் பாதுகாவல் புனிதர் யார்? மாதாதான். ஆகஸ்ட் பதினைந்து மாதா விண்ணேற்றமடைந்த திருநாள்.

பரலோகம்(சுவர்க்கம்), நரகம் மற்றும் உத்தரிக்கஸ்த்தலம் எனும் மூன்று இடங்களை இறப்புக்குப் பின் வருமென நம்புகிறது திருச்சபை.

உத்தரிக்கஸ்த்தலம் திரிசங்கு சொர்க்கம்போல. நவீன சிந்தனையில் நரகம் என்பது நித்தியத்துக்கும்(Eternaly) கடவுளைக் காணமுடியாமல் ஒருவித ஆன்மீக வேட்கையுடன் ஆன்மா ஏங்கும் நிலை என நம்மப் படுகிறது.

பிறந்து ஞானஸ்னானம் பெறாமல் இறந்து போகும் குழந்தைகளுக்கான லிம்போ எனும் இடம் ஒன்று இருந்தது சில மாதங்களுக்கு முன் இது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபை அடிப்படையில் ஒரு ஆன்மீக 'நிறுவனம்'. போப் தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பு.

போப்பின் கீழ் கர்தினால்கள், பிஷப், பிஷப்பின் கீழ் பங்கு குருக்கள், குருக்கள் தலைமையில் மக்கள் என இந்த அமைப்பு செயல்படுகிறது.

மேலிருந்து கீழ் என சீராக வரயறுக்கப்பட்ட ஒரு ஆட்சியமைப்பைக் கொண்டியங்குகிறது திருச்சபை.

இப்போது இந்தத் தகவல்கள் போதும் என நினைக்கிறேன்.

இயேசுவின் போதனைகளின் அடிப்படையிலே பிறந்து வளர்ந்த அமைப்பாகினும் சில நேரங்களில் அவர் எதிர்த்த அமைப்பு சார்ந்த பல மதிப்பீடுகளைக் கொண்டுள்ளதாக கத்தோலிக்கம் காணப்படுகிறதென்பதுண்மை.

தலமை (போப்) மாறும்போது சில நேரங்களில் நிலமையும் கொஞ்சம் மாறுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக பல குறைகளை நிவர்த்திசெய்தும், சிலநேரங்களில் மூடிமறைத்தும் பல தடைகளையும் தாண்டி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பிரமாண்டமான உலகளவிலான ஒரு ஆன்மீக அமைப்பாக கத்தோலிக்க திருச்சபை வளர்ந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

வெள்ளி, 30 ஜனவரி, 2009

தேவன் விரும்பும் காணிக்கை

கிறிஸ்மஸ் என்றாலே மனமகிழ்ச்சியும் குதூகலமும் நம்மைப் பிடித்துக்கொள்கிறது. புத்தாடைகள் அணிவதும் ஆலயங்களுக்குச் செல்வதும் உறவினர்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதும் நம்முடைய வழக்கம்

ஆனால் கிறிஸ்து உலகத்திற்கு ஏன் வந்தார்? எவ்வித பொறுப்புகளை நமக்குக் கொடுத்தார் என்பதை மறந்துவிட்டு அனேக வருடங்களாக நாம் கிறிஸ்மஸை வெறும் பண்டிகையாகவே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்மஸ் என்றாலே கொடுத்தலைத் தான் நினைவு படுத்த வேண்டும். பிதா நம்மேல் கொண்ட அன்பினால் தம் ஒரே பேரான குமாரனை இந்த பூமியில் நமக்காக கொடுத்ததை நினைவு கூறும் நாள் தான் கிறிஸ்மஸ்.

ஆனாலும் தேவன் இந்த கிறிஸ்மஸ் நாட்களில் நம்மோடு வழ‌க்காடுகிறார் காரணம்: நாம் கிறிஸ்துவை காணிக்கைகளால் வஞ்சிக்கிறோம் என்பதே…!!!

உங்கள் கைகளில் உள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல (மல்கியா 1:10)
அன்று வேதாகம காலம் தொடங்கி இன்று நவீன காலம் வரை (2008ஆம் ஆண்டு வரை) பக்தர்கள் தேவனுக்கு காணிக்கை கொடுப்பது என்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது

காரணம் கொடுத்தல் என்பது ஆராதனையின் ஒரு பகுதியே மனிதன் தேவனுக்கு நான் கடவுளை பிரியப்படுதுகிறேன் என்பதற்கும் கனப்படுத்துகிறேன் எனப‌தற்கும் அடையாளமாகவே காணிக்கை கொடுக்கிறான்,

ஆனாலும் தேவன் எல்லா பக்தர்களின் காணிக்கைகளையும் அங்கரிப்பதில்லை. ஆனால் ஆபேல், தாவீது போன்ற பக்தர்களின் காணிக்கையில் பிரியமாக இருந்திருக்கிறார்.

காரணம் என்ன? அவர்கள் தேவனுடைய இருதயத்தை அறிந்து கொடுத்தார்கள் என்பதே மாபெறும் உண்மை.

வேதாகமம் இல்லாதநாட்களில் ஆபிரகாம் விசுவாததோடு தசம பாகம் கொடுத்தான், யாக்கோபு நிபந்தனையோடு தசம பாகம் கொடுத்தான்.

யோபு தனக்கும் தன் குடும்பத்திற்கும் எந்த தீமையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் தவறாமல் பலி செலுத்தினான்.

மேலும் தாவீது, இஸ்ரவேல் மக்கள், பர்னபா, ஆதித்திருச்சபை விசுவாசிகள், மக்கதோனியா சபை விசுவாசிகள் போன்றவர்கள் உற்சாகமாய் காணிக்கை கொடுத்தார்கள் என்பது நாமும் தேவனுக்கு உற்சாகமாக கொடுக்க வேண்டும் என்ற உணர்வை நமக்கு கொடுக்கின்றது.

இன்றும் தசம பாகம், நன்றி படைப்பு காணிக்கை, பொருத்தனை காணிக்கை, மிஷினரி காணிக்கை, கட்டிட நிதி போன்ற எல்லா விதமான காணிக்கைகளையும் திருச்சபையில் படைக்கின்றோம். நல்லது,

ஆனால் இருதயத்தின் ஆழத்திலிருந்து நாம் கொடுக்கின்றோமா? வாரா வாரம் ஆராதனைக்கு செல்கிறோம் ஆராதனையில் காணிக்கை எடுப்பதால் நாமும் கொடுக்க வேண்டும் என்று சடங்காச்சாரமாக கொடுக்கின்றோமா?

அல்லது அந்த வாரம் முழுவதும் தேவன் நமக்கு செய்த நனமைகளை நினைத்து நன்றியோடு கொடுக்கின்றோமா? நம்மை நாமே நிதானிப்போம்.

வீணான வைராக்கியத்தினால் சகோதரனை மன்னிக்க முடியாத கசப்புகளை நமக்குள் வைத்துக்கொண்டு நாம் கொடுக்கும் காணிக்கையில் தேவன் பிரியமாக இருப்பாரோ?

சபையில் நான் தான் அதிகமாக காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற‌ பெருமையோடு நாம் படைக்கும் காணிக்கை தேவனுக்கு அருவருப்பானது.

இஸ்ரவேல் மக்கள் அன்னிய தேவர்களைப் பணிந்து கொண்ட போது அவர்களுடைய காணிக்கையை தேவன் ஏற்றுக்கொள்ளவில்லை, சிறப்பானதை கொடுக்காத காயீனின் காணிக்கையை தேவன் அங்கீகரிக்கவில்லை.

அன‌னியா சாப்பீராள் காணிக்கையை வஞ்சித்த போது தேவன் தண்டித்ததை நாம் நினைவில் கொள்வோம்.

ஆனால் நோவா ஜலப்பிரளயத்திற்கு பின்பு பரிசுத்தமானவைகளில் இருந்து பலி செலுத்தினான் தேவனும் அதை முகர்ந்து பார்த்தார் காரணம் நோவாவினுடைய பலி சிறப்பானதானது என்பதால் அல்ல நோவாவின் கீழ்படிதலையே தேவன் பார்த்தார்.

ஆம், அன்பானவர்களே நாம் கோடி கோடியாய் காணிக்கை கொடுப்பதைக் காட்டிலும் தேவனுக்கு கீழ்ப்படிவதே தேவனுக்கு பிரியம்.

நம் தேவன் சர்வ வல்லவர்தான், பராக்கிரமம் நிறைந்தவர்தான், இல்லாதவைகளைக் கொண்டு இருகிறவைகளாக அற்புதம் செய்கிறவர்தான்.

ஆனாலும் அவருக்கும் ஒரு பற்றாக்குறை உண்டு. அவருடைய பணியைச் செய்ய வேலையாட்கள் தேவை என்ற பற்றாக்குறை அன்று முதல் இன்று வரை இருந்து கொண்டே இருகின்றது.

நம்முடைய பொருட்களாளும் பணங்களாலும் ஆலயங்களை நிரப்பும் நாம், நம் பிள்ளைகளை தேவனுடைய பணிக்கு அனுப்பாதது ஏன்? எதிர்காலத்தில் என் பிள்ளைகள் நல்ல மருத்துவராகவும், பொறியாளராகவும் உயர்ந்த அரசு அதிகாரிகளாகவும் ஆசிரியர்களாகவும், சமுதாயம் அங்கீகரிக்கும் அளவுக்கு உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று விரும்பி கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களே…!!!

என் மகன் நல்ல போதகராக வரவேண்டும், என் மகள் தேவனை அறியாத மக்கள் உள்ள இடத்திற்கு மிஷினரியாக செல்ல வேண்டும் என்று ஜெபித்து உங்கள் பிள்ளைகளை தேவனுக்காக பிரதிஸ்டை பண்ணாதது ஏன்?

யாத்திராகமம் 13:12-ன் படி உங்கள தலையீற்றுகள் கர்த்தருக்கு உரியது. உங்கள் பிள்ளைகளை தேவனுடைய ஊழியத்திற்கு கொடுக்காமல் வஞ்சித்து வைத்துக் கொண்டு எழுப்புதலுக்காக ஜெபிப்பதும் உபவாசிப்பதும் உண்மையான காணிக்கை செலுத்துதல் ஆகுமா?

உங்கள் குழந்தைகள் வியாதிப்பட்டிருக்கும் போது ஊழியத்திற்கு அனுப்புவேன் என்று பொருத்தனை செய்யும் நீங்கள் தேவனிடம் சுகம் பெற்ற பின் உண்மையாகவே அனுப்பிவிட்டீர்களா?

சகரியா எலிசபெத், யெப்தா, மனோவா தம்ப‌திகள் அண்ணாள், தம்பதிகள் மரியாள் இவர்களுடைய வாழ்க்கை நமக்கு தேவனுடைய பணிக்கு பிள்ளைகளை அர்பணிக்க வேண்டும் என்ற உண்ர்வைக் கொடுக்கவில்லையா?

பிதா நம்மேல் கொண்ட அன்பினால் தம்முடைய ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவை நம் பாவங்களை நீக்கும் பரிகார பலியாக ஒப்புக்கொடுத்ததை நாம் ஏன் மறந்து போனோம்.

அன்று இயேசு சிலுவையில் பாடுபட்டபடியால்தான் இன்று நாம் பாவமன்னிப்பு பெற்றவர்களாய் பரலோகம் செல்வோம் என்ற நம்பிக்கையில் சுக போகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயேசுதான் மெய்யான தேவன் என்று அறிந்திடாத கோடிக்கணக்கான மக்கள் நரகத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கும்போது உங்கள் பிள்ளைகளை நீங்கள் அனுப்பாவிட்டால் அல்லது நீங்கள் போகாவிட்டால் யார் அவர்களை காப்பாற்ற முடியும்?

பிரியமானவர்களே.., இந்த கிறிஸ்மஸ் காலங்களில் தேவன் இதுவரையிலும் நம்மை நடத்தினதற்காக நீங்கள் தேவனுக்கு என்ன காணிக்கை செலுத்தப் போகிறீர்கள்?

உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கொண்டு தேவன் உலகை இரட்சிக்க திட்டம் வைத்திருக்கும் போது நீங்கள் உலக வேலைகளில் உங்களை பிணைத்துக்கொள்வது ஏன்?

தேவனுக்கு தேவை உங்கள் பணமல்ல நீங்கள்தான்…..!! உங்கள் குடும்பதினர்தான்……..!! உங்கள் பிள்ளைகள் தான்…!!

இதுவே தேவன் விரும்பும் உன்ன‌தமானதும், உயர்வானதுமான காணிக்கை. ந‌ம்மை நாமே நிதானிப்போம்…!! தேவ‌னுடைய‌ பாத‌த்தில் ந‌ம்மை முழுமையாக‌ ஒப்புக்கொடுப்போம்,

வ‌ருகிற‌ புது வ‌ருட‌த்தில் தேவ‌னுக்காக‌ செய‌ல்ப‌டும் செய‌ல் வீர‌னாக மாற‌ தேவ‌ன் உங்க‌ளை அழைக்கிறார். அனைவ‌ருக்கும் இனிய கிறிஸ்ம‌ஸ் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்க‌ள்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

ஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து "கிறிஸ்துமஸ்" என்றுச் சொல்லக்கூடிய "கிறிஸ்து ஜெயந்தியை" கொண்டாடுகிறோம்.

இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள்.

உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால்,

இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே.

وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آَيَةً لِلْعَالَمِينَ

இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (குர்‍ஆன் 21:91)

எனினும், சில இஸ்லாமியர்கள் கிறிஸ்து ஜெயந்தி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சொல்வது,

"கிறிஸ்தவர்கள் இயேசுவை திரித்துவத்தில் ஒருவர் என்று கருதி அவரை வணங்குகிறார்கள்" என்பதாகும்.

இறைவன் தனித்தன்மை வாய்ந்த ஒருவரே இறைவன் என்றும் மற்றும் அந்த இறைவன் தான் இயேசுவாக இறங்கிவந்தார் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது(உபாகமம் 6:4,5, சகரியா 14:9, யோவான் 1).

கிறிஸ்தவத்தில் உள்ள அனைத்து பெரிய குழுக்களின் முக்கிய போதனையும் இது தான். இதை ஏன் எல்லா கிறிஸ்தவ குழுக்களும் உண்மை என்று நம்புகிறார்கள் என்பதற்கான முக்கிய காரணம், "பைபிள் இதை போதிக்கிறது" என்பதால் தான்.

தேவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்ற "அதிர்ச்சி தரும்" உண்மையை நாம் நீக்கிவிட்டால், பைபிளில் உள்ள அனைத்தையும் நம்புவது இஸ்லாமியர்களுக்கு சுலபமாகிவிடும்.

தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் இயேசுவைப் பற்றிய உண்மை இருந்தும் ஏன் இஸ்லாமியர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புவதினால் தான்.

உண்மையில் சிந்தனையில் மாறுபாடுள்ளவர்கள் "கடினமான பகுதிகளை" எடுத்துவிட விரும்புவார்கள், ஆனால் "நம்புவதற்கு கடினமான" விவரங்களை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்

கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான‌ இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கள் பெரும்பான்மையாக "அவைகள் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?" என்ற சந்தேகத்தைச் சுற்றியே இருக்கும்,

அதற்கு பதிலாக, "ஏன் அவைகள் அப்படி இருக்கின்றன என்று முன்வைக்கபப்டும் காரணங்களை" அவர்கள் கவனிப்பதில்லை.

இது மிகவும் ஆச்சரியமானது, ஏனென்றால், விசுவாசிகள்(இறை நம்பிக்கை யுள்ளவர்கள்) "இறைவன் என்பவர் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவருக்கு ஆரம்பமுமில்லை, முடிவுமில்லை மற்றும் அவருக்கு எல்லாம் தெரியும்" போன்ற அவருடைய குணங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஆகையால், நம்முடைய இப்போதைய விளக்கத்தில், "ஏன் இறைவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்பது தான் முக்கியமே தவிர அவர் அதை எப்படி செய்தார்" என்பதல்ல

கிறிஸ்து ஜெயந்திக்கான முதல் காரணம்: பாவத்தின் முக்கியத்துவம்

நாம் நினைப்பதை விட நம்முடைய பாவங்கள் மிகவும் கொடுமையானவைகளாகும். உங்களில் அனேகருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்,

ஆதாமும் ஏவாளும் எத்தனை பாவங்கள் செய்தார்கள் என்று அவர்களை இறைவன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார்.

அவர்கள் செய்தது ஒரே ஒரு பாவம் தான். ஒரே ஒரு முறை பாவம் செய்து கீழ்படியாமல் போனதினால், அவ்வளவு பெரிய விளைவை அது உண்டாக்கியது எனபதிலிருந்து, பாவம் என்பது வெறும் சிறிய பிழை அல்ல என்பதை நாம் விளங்கலாம்.

பைபிளின் படி, பாவம் என்பது நம்மை படைத்த இறைவனுக்கு எதிராக நாம் கலகஞ் செய்வதாகும் மற்றும் நம்முடைய தகாத ஆசைகளினாலும், சிந்தனையினாலும் மற்றும் செயல்களாகும் இறைவனை துக்கப்படுத்துவதாகும்.

பாவம் மிகவும் கொடுமையானது என்பதை, இஸ்லாமிய போதனையிலிருந்தும் கூட நாம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.

அதாவது, அல்லாவிற்கு இணைவைத்து வணங்கும் பாவமாகிய "ஷிர்க் " என்ற பாவம் "நியாயத்தீர்ப்பு நாளில்" கூட மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் போதிக்கிறது.

இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, "பெரிய பாவங்கள்" என்று க‌ருதுப‌வ‌ற்றில் ஒரு சில‌ இவ்வித‌மாக‌ உள்ள‌து,

அதாவது, 1)அல்லாவின் கட்டளைக்கு எதிராக வேறு ஒரு அதிகாரத்திற்கு கீழ் படிந்து இருப்பது, மற்றும் 2) அல்லாவிற்கு காட்ட‌வேண்டிய‌ அன்பை ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் காட்டுவ‌து ஆகும்.

இதே போல, "சிறிய‌ பாவ‌ங்க‌ள்" கூட‌ ப‌ல‌ வ‌கையாக‌ உள்ள‌ன‌. அதாவ‌து, ச‌குண‌ம் பார்ப்ப‌து, குறிசொல்ப‌வ‌ரிட‌ம் சென்று குறி பார்ப்ப‌து, இன்னுமுள்ள‌ மூட‌ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை பின்ப‌ற்றுவ‌து,

ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளின் க‌ல்ல‌ரைக‌ளில் சென்று அவ‌ர்க‌ளிட‌ம் ஜெபிப்பது(துவா கேட்ப‌து), ஜோசிய‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளையும், எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்வு பற்றிய கனவுகளுக்கு பொருள் கூறுப‌வ‌ர்க‌ளை புக‌ழுவ‌து,

ந‌ம்மிட‌ம் உள்ள‌வைக‌ள் ப‌ற்றி பெருமையாக‌ வெளியே மற்ற‌வ‌ர்க‌ளுக்கு காட்டுவ‌து, அல்லாவின் க‌ட்ட‌ளையின் ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்கும் ஒருவ‌ரின் அவ‌ல‌ நிலையைக் க‌ண்டு ம‌ன‌த‌ள‌வில் திருப்தியில்லாம‌ல் இருப்ப‌து போன்ற‌வைக‌ள் சிறிய‌ ஷிர்க்குள் ஆகும்.

இந்த பெரிய மற்றும் சிறிய ஷிர்க்குகள் மிகவும் கடுமையானவைகள், மற்றும் இவைகளை ஒருவர் சுலபமாக செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. இவைகளை நாம் சுலபமாக கண்டுபிடித்தும் விடலாம்.

இறைவனின் பார்வையில் பாவம் என்பது எவ்வளவு வருந்தப்படத் தக்கது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் விவரிப்போம்.

இந்த விளக்கத்தை நாம் பைபிள் மற்றும் குர்‍ஆனின் அடிப்படையிலேயே பார்க்கப்போகிறோம்.

குர்‍ஆன் அடிப்படையில் பொதுவாக நாம் "இறைவனைப் பற்றி" விவரிக்கும் போது, "அவர் பார்க்கிறார், அறிகிறார்" என்றுச் சொல்கிறோம். அவர் பார்க்கிறார் மற்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக அறிந்தும் இருக்கிறார்,

ஆனால், நம்மை அன்போடு பார்க்கிறாரா என்பது தான் கேள்வி. இறைவனின் குணநலன்களைப் பற்றி விவரிப்பது வீணாகுமா? ஆகாது, இப்போது "பாவத்தை" பற்றிய ஒரு எடுத்துகாட்டை நாம் காண்போம்.

நீங்கள் அதிகமாக விரும்பி வாங்கிய ஒரு விலை உயர்ந்த மோட்டார் கார் (Car) உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள் காலை உங்கள் காரின் முன்பாகத்தில் ஒரு பகுதி கீறலால் பாதிக்கப்பட்டு அவலட்சனமாக இருப்பதை காண்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் விசாரித்து கேட்டதில், அதைச் செய்தவர், இரண்டு வயதுடைய உங்கள் மகன் "அமீர்" என்று தெரியவருகிறது.

இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மறுபடியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா?

அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை.

எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை.

இதனால், உங்கள் மகனோடு "தந்தை மகன்" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா? அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா? இல்லை, இப்படி செய்யமாட்டீர்கள்.

இந்த நேரத்தில் அவனிடம், இனி இப்படி செய்யவேண்டாம் என்றுச் சொல்வீர்கள் மற்றும் அவனது வயதிற்கு ஏற்றாற் போல கடிந்துக்கொள்வீர்கள்/அதட்டுவீர்கள், அவ்வளவு தான்.

இப்படி நீங்கள் செய்தாலும், இதற்கு முன்பு அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்களோ அதே போல அன்பு கூறுவீர்கள்.

அவன் செய்த சேதத்திற்கு நியாயமான தண்டனையை அவனுக்கு இடாமல், அவன் மீது இரக்கத்தோடும், அன்போடும் நடந்துக்கொள்வீர்கள்,

ஏனென்றால், அந்த சேதத்திற்கான தண்டனையை(பணம் மற்றும் நேரம் செலவை) நீங்களே ஏற்றுக்கொண்டபடியால், அவன் மீது மறுபடியும் இரக்கம் பாராட்டுவீர்கள்.

கிறிஸ்து ஜெயந்திக்கான இரண்டாம் காரணம்: நம்மீது பொழிந்த‌ இறைவனின் உயர்ந்த‌ அன்பு
இப்போது மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில் சொல்லப்பட்டது போல, இறைவன் மிகவும் பரிசுத்தமானவர் மற்றும் பிழையில்லாதவர்.

நம்முடைய பாவங்கள் எவ்வளவு பயங்கரமானது/கொடுமையானது என்பதை அறிந்துள்ளார், அதே நேரத்தில் அதன் பயனாக வரும் தண்டனையை நம்மால் சுமக்க முடியாது என்றும் அவர் அறிந்துள்ளார்.

அவருடைய கண்ணோட்டத்தின் படி நாம் என்ன செய்தோம்? அதன் விளைவு என்ன? என்பதை நாம் சரியாக அறியாத காரணத்தினால், நம்மிடம் அவர் "ஏன் செய்தாய்?" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அதனால் பயன் இல்லை.

இறைவனுக்கு முன்பாக நல்லவர்கள் போல வாழ்ந்தால் போதும் என்று சிலர் எண்ணுகின்றார்கள்.

இப்படி எண்ணுவது எப்படி இருக்குமென்றால், அமீருக்கு அந்த காரை பழுதுபார்க்க எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்த பிறகு, அமீர் அமைதியாக ஒரு நாற்காலியில் இரண்டு நிமிடம் மௌனமாக உட்கார்ந்து இருப்பதற்கு சமமாகும்.

இப்படி அமீரின் தந்தை அமீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்த காரை பழுதுபார்க்கும் செலவு தானாகவே சந்திக்கப்படுமா?

தேவன் நம்மை நேசிக்கிறார், அதனால், நம் பாவங்களை மன்னிக்க விரும்புகிறார். இருந்தாலும், அவரது நீதியான நியாயத்தீர்ப்பு நமக்கு தண்டனையாக நம்மை அவரோடு வாழ இடம்கொடாமல் நிரந்தரமாக‌ பிரித்துவிடும்.

சிலுவை என்ற இடத்தில் தான் தேவன் தன் இரண்டு குணநலன்களையும் நிறைவேற்றிய இடமாகும் நம்மீது வைத்தை அன்பினால் அவர் மனிதனாக இயேசுவாக வந்தார், நமக்காக நம் தண்டனையை தன் மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார்.

இந்த தண்டனையை நாம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால், நம்மால் அது முடியாது. நாம் தேவனுக்கு எதிராக செய்த மாறுபாட்டினால் வந்த அவமானத்தை இயேசு தன் இரத்தம் சிந்தி எடுத்துப்போட்டார்.

பைபிளிலும் மற்றும் குர்‍ஆனிலும் தேவனின் மேன்மை மற்றும் புகழ் இயேசுவின் பலியினால் மறுபடியும் நிலைநிறுத்தப்பட்டது (ஒப்பிட்டுப் பார்க்கவும் எண்ணாகமம் 19:1 - 10 மற்றும் குர்‍ஆன் 2:67 – 74).

தேவன் தானே நீதியை நிலைநிறுத்த வேண்டுமென்று விரும்பினார்! எந்த மனிதன் தன் மனதை புதிதாக மாற்றிக்கொண்டு இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பானோ அவனுக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டு.

இயேசுவின் மூலமாகத் தான் தேவன் நம்மை மன்னிதார் மற்றும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதற்கு காரணரும் இவர் தான்.

இயேசு செய்த இவ்விதமான நன்மைக்கு நன்றிக் கடனாக மற்றும் அவர் கொடுத்த மனவலிமையினாலே கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும், தங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து தங்களால் இயன்ற நன்மைகளை, செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இயேசுவை பின்பற்றுகிறவர்களின் இந்த மாற்றம் மற்றவர்களை தேவனின் பக்கம் இழுக்கிறது, தேவன் காட்டிய வழி மூலமாக நீதி செய்யும் படி உற்சாகப்படுத்துகிறது.

எவன் ஒருவன் வன்முறையின் மூலமாகவோ அல்லது கட்டாயத்தின் மூலமாகவோ தன் சொந்த நீதியை பின்பற்ற விரும்புவானோ அவன் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படுவான்.

தேவனின் விருப்பத்தை ஏற்று, அவரை பின்பற்ற யார் யார் விரும்புவார்களோ, அவர்களுக்கு சமாதானம் நிம்மதி ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது.

அந்த நாள் இரவிலே தேவ தூதர்கள் "உலகத்தின் இரட்சகர்" பிறந்தார் என்று மேய்ப்பர்களுக்குச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும்,மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக …

அன்பு என்ற வார்த்தையின் பொருள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை என்ற வார்த்தைகளோடு தொடர்புடையது. தேவனின் விலைமதிப்பில்லா இந்த பரிசை நாம் ஏற்கலாம் அல்லது மறுத்துவிடலாம்.

இது எப்படி நடக்கும் என்றும், எனக்கு புரியவில்லை என்றும் நாம் சொல்வதால், நாம் இதனை மறுக்கக்கூடாது. இப்படிப்பட்ட மறுப்பானது "பொதுவாக இறைவன்" பற்றிய போதனைக்கு எதிரானதாகும்.

உதாரணத்திற்கு யாத்திராகமம் 3:2 லிருந்து 4 வசனங்களையும், குர்‍ஆன் சூரா 20:11 லிருந்து 13 வரையிலும் உள்ள வசனங்களை படிக்கவும்.

இந்த வசனங்களில், எரியும் நெருப்பிலிருந்து தேவன்/இறைவன் மோசேயுடன் பேசினார் என்று நாம் படிக்கிறோம்.

இறைவன் எரியும் நெருப்பில் தன் குரலை/சத்தத்தை பொதித்து மோசேயுடன் கடந்த காலத்தில் பேச அவரால் முடியுமென்றால், நிச்சயமாக தன்னை ஒரு உடலில் பொதித்துக்கொண்டு நம்மை மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது என்பது அவருக்கு சுலபமானது தான்!

என் அருமை இஸ்லாமிய நண்பரே, உங்கள் இருதயத்தின் கண்களை தேவன் திறப்பாராக, நீங்கள் உண்மையான கிறிஸ்து ஜெயந்தியின் உண்மை மகிழ்ச்சியை அடைந்து ஆனந்தம் அடைவீராக.

எப்படி சந்திப்பது?

பழைய வருடத்தை முடித்து, புதிய வருடத்தில் வந்தாச்சி, நான் யாரோடு வந்திருக்கிறேன் என்பது அல்ல. யாரை நம்பி இந்த புதிய வருடத்தில் பிரவேசித்தேன் என்பதுதான் இந்த ஆண்டில் எனக்கு வெற்றியையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவரப்போகிறது.

நீங்களும் ஒருவேளை கர்த்தரை மாத்திரம் தான் நம்பி இந்த வருடத்தில் வந்திருப்பீர் களானால், உங்களுக்குதான் இந்த பதிவு உள்ளே வாருங்கள்.

நாம் நம்முடைய பழைய வாழ்க்கையை, பழைய வருடத்தை முடிக்கும்போது தேவன் நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்?

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து, விடுவிக்கப்பட்டு தேவன் தங்களுக்கு சுதந்தரமாக கொடுத்த கானான் தேசத்தை சுதந்தரிக்கும்பொழுது, தேவன் தன்னுடைய மக்களிடம் எதிர்ப்பார்த்தது ஒன்றே ஒன்று.

அவர்க‌ள் பிழைக்க, த‌ங்களுடைய‌ வாழ்க்கையில் ஆசீர்வாதமாக இருக்க, அவர்களுடைய செல்வங்கள் பெருக, தேவன் அவர்களுக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதமான வாழ்க்கையில் பிரவேசிக்க தேவன் அவர்களிடம் எதிர்ப்பார்த்தது

அவர் கொடுத்த அவருடைய "கற்பனைகளை/ கட்டளைகளை/ பிரமாணங்களை / வார்த்தையை" கடைப்பிடிக்க அவர்கள் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் என்பதே.

நீங்களும் புதிய ஆண்டில் புதிய காரியங்களை செய்ய விரும்புகிறீர்களா? தேவனின் விருப்பப்படி அவருடைய வார்த்தைக்கு (கற்பனைகளுக்கு) பயந்து, அவரின் கட்டளைகளைக் கீழ்ப்படிந்து அதை கைக்கொள்ளுவோம்.

கடந்த ஆண்டில் தேவன் நம்மை நடத்திய விதத்தை, நம்மை சிறுமைப்படுத்தின நாட்களையும். நாம் அவருடைய கட்டளைகளுக்கு, வார்த்தைக்கு கீழ்ப்படிகிறோமா?

அவருடைய வார்த்தையை கைக்கொள்ளுகிறோமா? என்று நம்மை சோதித்த விதத்தை, நம்முடைய ஆபத்தில், பிரச்சனையில், போராட்டத்தில், நம்முடைய பெலவீனங்களில் தேவன் நம்மை எப்படி நடத்தினார்.

தேவைகளில் இருக்கும்போது, பசியாய் இருக்கும்போதும், ஒரு தகப்பனைப்போல் தன் பிள்ளையின் தேவைகளை சந்தித்து, அன்புக்காட்டி, அரவணைத்து, சிட்சித்து நடத்திய விதத்தை நாம் திரும்பிப்பார்ப்போம்.

தேவன் நமக்கு செய்த எல்லா காரியங்களை நினைவுக்கூர்ந்து, நம‌க்கு கொடுத்த நல்ல வாழ்க்கைக்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.

கடந்த ஆண்டில் என் சாமர்த்தியம் தான், என் கைப்பெலன் தான் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நம்முடைய இருதயத்தில் பெருமைக்கொள்ளாமல் எச்சரிக்கையாயிருந்து, கர்த்தர் தான் இதை எனக்கு செய்தார்.

சம்பாதிக்கும் பெலத்தையும், சாமர்த்தியத்தையும் தந்தார் என்று நினைவுக்கூறுவோம். அவரையே நினைப்போமாக. ஏனெனில் அவரே நம்மை நினைத்திருக்கிறார் அதனால் ஆசீர்வதித்தார்.

அப்பொழுது தம்முடைய வார்த்தையை நம்மிடம் உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் நம‌க்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை நமக்கு கொடுப்பார்.

தேவன் தந்த சொல்லி முடியாத ஈவுகளுக்காக அவருக்கு நன்றி செலுத்துகிற பிள்ளைகளாக இருப்போம்.

தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் நன்றி செலுத்தி, அவர் செய்த எல்லா நன்மைகளுக்காக‌ அவருக்கு நன்றி செலுத்தி, அவரால் தான் இந்த பழைய ஆண்டை என்னால் கடக்க முடிந்தது என்ற நன்றி உணர்வோடு நாம் இந்த புதிய ஆண்டில் பிரவேசிப்போம். தேவனும் இதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்.

ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வருடத்தை நாம் எப்படி சந்திப்பது? புதிய வருடத்தில் எப்படி பிரவேசிப்பது?

நாம் பயம் நிறைந்த காலத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் வெவ்வேறான சீர‌ழிவுகள், புது புது நோய்கள். ஒரு பிரச்சனை முடியும்போதே இன்னோரு பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.

உலகத்திலே எப்போது? என்ன நடக்குமோ? என்ற பயத்தோடு உலகமே கலங்கி கொண்டிருப்பதை நாம் அறிவோம். இந்த சூழ்நிலையில் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்குமோ? என்ற பயமும், கேள்வியும் எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கிறது.

தேவன் மனிதனை உண்டாக்கி, அவனை ஆசீர்வாதமான இடத்தில் வைத்து, த‌ம்முடைய வார்த்தையின் ப‌டியான‌ வாழ்க்கையை மனிதன் வாழ விரும்பினார்.

ஆனால். மனிதனோ தன்னுடைய கீழ்ப்படியாமையினாலே தேவன் எதிர்ப்பார்த்த வாழ்க்கையை வாழ தவறியதால் அவனுடைய வாழ்க்கையில் பயம் வந்தது.

நம்பிக்கையே இல்லாத இந்த காலக்கட்டத்தில், இந்த புதிய வருடத்தில் வந்திருக்கிறோம். அநேகருடைய இருதயத்திலே பயம் சூழ்ந்துள்ளதை நாம் பார்ப்போம்.

எதிர்க்காலம் எப்படி இருக்குமோ என்று தெரியவில்லை?. நாளைக்கு என் வாழ்க்கை என்ன ஆகும்? நான் உயிரோடு இருப்பேனா? எனக்கு என்ன நடக்கும்,?

என்னுடைய பொருளாதார வாழ்க்கை இப்படி முடங்கி கிடக்கிறதே என்னுடைய பொருளாதார வாழ்வு சீர்ப்படுமா? நான் வேலைக்கு சென்றால் வேலை இருக்குமோ இல்லையோ?

இந்த ஆண்டு போன ஆண்டைவிட இன்னும் கொடுமையாக இருக்குமோ? நான் என்ன செய்யப்போகிறேன்? என் வாழ்க்கை எப்படி நடக்கும்? என் பிள்ளையை என்னால் படிக்கவைக்க முடியுமா?

என் குடும்பத்திலே, வியாதிகள், கஷ்டங்கள், சோர்வுகள். இப்படிப்பட்டதான இக்கட்டின் வாழ்க்கையை நாம் நினைக்கும் போது, நிச்சயமாக பயம் நம்மை ஆட்கொள்ளும்.

எத்தனையோ சூழ்நிலையின் மத்தியிலும், நாம் இந்த புதிய வருடத்திற்கு வந்துவிட்டோம்.

இந்தப் புதிய ஆண்டிலாவது பயம் இல்லாத வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தோமே.? ஆனால் இப்படி நடக்கவில்லையே, நாம் என்ன செய்ய என்ற அநேக கேள்விகள் நம்மில் எழும்பிக்கொண்டிருக்கிறதை நாம் அறிவோம்.

"இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்."ஏசாயா 43:1.


ஒரு மனிதன் இன்னொருவனை தேற்றும்போது அம்மா/அப்பா/அக்கா/தங்கச்சி/தம்பி/ சிஸ்டர்/பிரதர், பயப்படாதீங்க நாங்க உங்கக்கூட இருக்கிறோம் என்று அவர்களை ஆறுதல்படுத்துவதுண்டு.

ஆனால் அதின் பின் விளைவுகளை நாம் சில நாட்களிலேயே பார்க்க முடியும். ஆனால் தேவனும் நம்மை ஆறுதல் படுத்த கூறுகிறாரா? நிச்சயமாக இல்லை.

"பயப்படாதே" என்று தேவன் சொல்லும் போது அதற்கு ஒரு நோக்கம் அல்லது காரணம் உண்டு. தேவன் உண்மையாகவே சொல்லுகிறார். அவர் செய்ய விரும்புகிறதை/ நினைக்கிறதை சொல்லுகிறார்.

மனிதன் உண்டாக்கப்பட்டப்போது; முதன் முதலில் மனிதனுக்கு ஏற்ப்பட்ட உணர்வு பயம் என்பதை நாம் வேதத்தில் காண்கிறோம்.

பயத்தினாலே மனிதனுக்கும், மிருகங்களுக்கும் வேறுப்பாடு உண்டானது என்றும் கூறலாம். பாவம் செய்ததினாலே, பயம் மனிதனை ஆட்கொண்டது எனவும் கூறலாம். (ஏசாயா 11: 6,7,8).

இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையின் இரட்சகராக, தெய்வமாக, ஆண்டவராக மாறும்போது நம்மைவிட்டு பயம் நீங்குகிறது.

அதாவது, இயேசு கிறிஸ்து எங்கேயெல்லாம் உயர்த்தப்படுகிறாரோ, அங்கு பயம் இருக்காது. பயமும், நம்பிக்கையும் எப்போதும் கூடி வாழ முடியாது. பயத்துக்கு எதிரித்தான் நம்பிக்கை.

இயேசு கிறிஸ்து சீஷர்களை நோக்கி நாம் அக்கரைக்கு போவோம் வாருங்கள் என்று கூறினார். அவர் தான், அவர்களை வாங்கப்பா நாம் அந்தப்பக்கம் போகலாம் என்றுஅழைத்தார்.

நாம் இந்த புதிய வருடத்தை காண, தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நம்மை எதற்காக அழைத்தாரோ, அந்த அழைப்பில் அவர் உறுதியாக இருக்கிறார்.

பிதாவினிடத்தில் நம்மை சேர்க்கிறவரை நம்மை காப்பார், நம்மை தன்னுடைய பரிசுத்த ஆவியானவராலே பலப்படுத்துவார் என்று நமக்கு வாக்களித்திருக்கிறா.

அந்த பக்கம் நிச்சயமாக நம்மை கொண்டுப்போவார். ஆனால் நம்முடைய விருப்பப்படி அல்ல, அவருடைய சித்தத்தின்படி.

ப‌லத்த காற்றும், புயலும் வீசியப்போது அவர்கள் பயந்தார்கள். இயேசு அந்த சூழ்நிலையிலும், அலைகள் கப்பலில் மீது வீசியப்போதும் அவர்களோடுதான் இருந்தார்.

இன்றைக்கு, இந்த புதிய வருடத்தில் நம் வாழ்க்கையில் பலத்த காற்றோ, புயலோ, அலைகளோ, நாம் கடக்க வேண்டிய தண்ணீர்களோ, நாம் போக வேண்டிய அக்கினியின் பரீட்சையோ, வாழ்க்கையில் துன்பமோ, பிரச்சனையோ, பாடோ, கவலையோ கொந்தளிக்கலாம்! பயப்படாதே, இயேசு கிறிஸ்து உன்னோடு இருக்கிறார்.

அதற்காக பிரச்சனை, போராட்டம் தான் வாழ்க்கையா? என்று அஞ்ச தோன்றுகிறதா!. இல்லை இல்லை. இயேசு இருக்கிற இடத்தில் சந்தோஷம், சமாதானம், நிம்மதி, ஆறுதல் உண்டு.

ஏனெனில் எந்த சூழ்நிலையின் மத்தியிலும் நம்மை விடுவிக்கிறவராக, நம்மை தப்புவிக்கிறவராக அவர் இருக்கிறார்.

ஏனெனில் நாம் அவரால் உருவாக்கப்பட்டு, அவரால் மீட்கப்பட்ட அவருடைய சொத்து. நாம் அவருக்கு சொந்தம். நம் தகப்பனும், தாயும் நம்மை பெற்று இருக்கலாம்.

ஆனால் நம்மை மீட்டுக்கொண்டு, நம்மை விடுதலையாகிய கர்த்தர் நம்முடைய உரிமையாளராய் இருக்கிறார். நம்மை அவரிடம் இருந்து யாராலும் பரித்துக்கொள்ளவோ, பிடுங்க முடியாது.

நீ இயேசு கிறிஸ்துவின் கையினாலும், பிதாவில் கையினாலும் வைக்கப்பட்டிருக்கிற அவருடைய விலையேறப்பெற்ற சொத்து, நீ அவரின் உரிமை. நீ அவருக்கு சொந்தமானவன்/சொந்தமானவள்.

நான் உலகத்தில் எவருக்கும் சொந்தமல்ல, நான் வெறுக்கப்பட்டவன்/ள் என்று என்னத் தோன்றுகிறதா? உன்னை விடுதலையாக்கி, ம‌றுபடியுமாய் தன்னுடைய இரத்தத்தையே உனக்காக சிந்தி உன்னை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

அதனால் உன்னை குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டாம். அதே சமயத்தில் தேவன் உனக்காக வைத்திருக்கும் வாழ்விலிருந்தும் நீ உன்னை மிஞ்சி எண்ணவேண்டாம்.

நாம் தெளிந்த எண்ணம் உடையவர்களாக இருக்க தேவன் விரும்புகிறார். நித்தியம் வரைக்கும் நம்மை காக்க அவர் வல்லவர்.

வாழ்க்கையின் பிரச்சனை நம்மை வாழ்க்கையின் விழிம்புக்கு கொண்டு செல்லாது. நாம் பிரச்சனையை எப்படி எடுத்துக்கொள்ளுகிறோமோ அது தான் விளைவுகளை உண்டாக்கும்.

சாத்தானோடு வெளிச்சத்திலே வாழ்வதைப்பார்க்கிலும், தேவனோடு இருட்டில் வாழ்வது நலமானது, ஏனெனில் அவர் நமக்கு வெளிச்சமாய் இருக்கிறார்.

தேவன் உண்டாக்கிய விதமாக உன் வாழ்க்கையை பார்க்க பழ‌கு. பிரச்சனைகளின் ஊடாய் நீ நடக்கும்போது, நான் வானத்தில் இருப்பேன் என்று தேவன் கூறவில்லை.

நான் உன்னோடு இருக்கிறேன் என்று கூறுகிறார். தேவனே நம்முடைய பாதுக்காப்பாக இருக்கும்போது நாம் எதற்கும் அச்சவேண்டிய அவசியம் இல்லை. மட்டுமல்ல நாம் தேவனுக்கு அருமையானவர்கள் என்று வேதம் கூறுகிறது.

அதனால் அவரே நமக்கு பெலன் தந்து, நம்மை கனப்படுத்துகிறார். உறவுகளில், நம்முடைய உலக வாழ்க்கையில், ஆவிக்குறிய வாழ்க்கையில் பிளவுகள், பிரிவினைகள் இருக்கலாம்.

ஆனால் தேவன் நம்மை மன்னித்து, நாம் முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாக இருக்க விரும்புகிறார். அவருடைய பிரசன்னம் நம்மோடு கூட இருக்கும்.

நாம் இழ‌ந்துப்போன ஆசீர்வாதங்களை, சிதறிப்போன நம்முடைய‌ வாழ்க்கையை அவர் திரும்ப எடுத்து கட்டி, ஒருங்கிணைத்து நம்மிடம் கொடுக்க விரும்புகிறார்.

அவருடைய நோக்கத்தை உன்னிடம் நிறைவேற்ற விரும்புகிறார். அவருடைய மகிமை விளங்கும்படி உன்னை மறுபடியுமாய் எடுத்து பயன்படுத்த விரும்புகிறார்.

இதற்கு நாம்/நான் செய்யவேண்டிய காரியம். அவருடைய கட்டளைகளுக்கு, கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளவேண்டும்.

நாம் அவருடைய கற்பனைகளை(வார்த்தைகளை) கைக்கொள்ளுவது நம்முடைய தீமைக்காக அல்ல. நமக்கு நன்மை உண்டாக்கும்படி, நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்படி.

ந‌ம்முடைய வாழ்க்கையைக்குறித்து தேவனுக்கு ஒரு மேலான நோக்கம் உண்டு. உலக வாழ்க்கை, உலகத்தின் காரியங்கள் நம்மை அசைக்காதப்படி நான் நம்மைக்காத்துக் கொள்ளுவோம்.

வாழ்க்கையின் அனைத்து கேள்விகளுக்கும்/பிரச்சனைகளுக்கும் பதிலே தெரியவில்லையா?

இதோ, தேவனின் கேள்வி, உங்களை நோக்கி உங்களின் பதிலாய் வருகிறது.


1. தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

யாரும் இல்லை. யார் நமக்கு விரோதமாய் இருக்கமுடியும். தேவன் நம்மோடு இருக்கும்மட்டும். நாம் கவலைப்படவேண்டியதில்லையே.

2. த‌ம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

உலக வாழ்க்கை அதிக பாரமாக இருக்கா? சுமக்க முடியலையா? பொருளாதார பிரச்சனையா? தம்முடைய சொந்த குமாரனான இயேசு கிறிஸ்துவையே கொடுத்த அவருக்கு உன்னுடைய தேவைகளை சந்திக்க கஷ்டம் கிடையாது.

3. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை
நீதிமான்களாக்குகிறவர்.

உன்னைக்குறித்து குற்ற உணர்வு இருக்கிறதா? உன் மேல், சாத்தான் குற்றம்சாட்டுகிறானா? மனிதன் குற்றம் சாட்டுகிறானா? உன்னை யாரும் நேசிக்கவில்லையா, நான் ஒரு பாவி என்று சொல்லுகிறாயா?

தேவன் உன்னை நீதிமானாக்க வல்லவர். நீ இன்னும் குற்றமனப்பான்மையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

4. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?

கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வ‌லதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.

வாழ்க்கையின் கவலையை விடு. தேவனை தேடு. உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை எதுவும் எந்த வருடத்திலும், எந்த சூழ்நிலையிலும் பிரிக்காதப்படி நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்.

உபத்திரவமா? அவர் நம்மோடு இருக்கிறார். வியாகுலமோ, துன்பமோ? அவர் நம்மை அறிந்தும், புரிந்துக்கொண்டும் இருக்கிறார். பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

எதுவும் கிறிஸ்துவை நம்மிடம் விட்டு பிரித்துக்கொள்ளாதப்படி, அவருடைய அன்பைவிட்டு பிரிக்ககூடாதப்படி நாம் காத்துக்கொள்ள பிரயாசப்படுவோம்.

ஏனெனில் இயேசுவாகிய தேவன், நம்மோடு இருப்பாரானால், இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவர அவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்.

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறோமே!.

நம்முடைய திறமை, பட்டம், பதவி, அழகு, பணம், ஐசுவரியம் சார்ந்து வாழ்க்கை அல்ல. ஆண்டவரே, உம்முடைய ஜீவனுள்ளு வார்த்தையை சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை வாழ எங்களுக்கு கிருபை தாரும் என்று நாம் அவ‌ரிட‌ம் கேட்போம். க‌ர்த்த‌ர் ந‌ம்மை ஆசீர்வ‌திப்பாராக‌.

தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்பும் போது நம்முடைய பலவீனமோ, நம்முடைய இயலாமைகளோ அவருக்கு தடையில்லை.

அதனால், அவருடைய சித்தம் உன் வாழ்க்கையில் நிறைவேற உன்னை அவருக்கு விட்டுக்கொடு.

இம்மட்டும் எபிநேசராய் நம்முடைய தேவைகளை சந்தித்த தேவன். இம்மானுவேலாய் நம்மோடு இன்றைக்கும், இந்த வருடத்திலும், சதாகால‌மும் ந‌ம்மோடும், ந‌ம்முடைய‌ குடும்ப‌த்தோடும் இருப்பாராக‌.

பிதாவையும், சத்தியமாகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் நிரப்பப்படவும், பரிசுத்த ஆவியின் ஒத்தாசையை, பெலனை பெற்றுக்கொள்ளுவதில் உறுதியாக இருக்கவும், உங்களின் இந்த புதிய வருடத்தை தொடங்கவும்

என்னுடைய‌ இனிய‌ புத்தாண்டு ந‌ல் வாழ்த்துக்க‌ள்!!

காஸா: நீதியில்லை, அமைதியில்லை!

ஊடகத் துறைகளாகிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்றவைகளின் வருகை மற்றும் முன்னேற்றத்தினால், உலகில் ஒரு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதைப் பற்றிய செய்திகள், உடனே மனிதனின் காதுகளுக்கு எட்டிவிடுகின்றன.

அநீதியும் அதனால் விளையும் பயங்கரமான காயங்களும் நம்முடைய நீதியான சிந்தனைகளை எரித்துவிடுகின்றன.

தனிமனிதனோ, குழுக்களோ, அரசாங்கங்களோ அல்லது நாடுகளோ "தவறு" என்று தெரிந்தும் தவறுகள் செய்யும் போது அனேகர் அதிகமாக துக்கப்படுகிறார்கள்.

ம‌னித‌ர்க‌ள் மாத்திர‌ம் அல்ல‌, உல‌கில் இருக்கும் எல்லா பெரிய ம‌த‌ங்க‌ளும் "அநீதி நடக்கும் போது அத‌ற்கு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டவேண்டும்" என்ப‌தை ஏற்றுக்கொள்கின்ற‌ன‌.

இருந்தபோதிலும், மனிதர்கள் அமைதியை நிலை நாட்ட‌ இப்படிப்பட்ட "அநீதி செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்த பின்னரும்" அமைதி தொடர்ந்து நிலைத்திருந்ததா என்று கேட்டால், "இல்லை" என்று சரித்திரம் நமக்கு பதில் சொல்கிறது.

இந்த கட்டுரையில், இறைவன் இப்படிப்பட்ட அநீதி நடந்தபோது "எப்படி அதை சமாளித்தார்?" மற்றும் "எந்த விதமான அமைதியை அவர் கொடுத்தார்?" என்பதை பைபிளின் அடிப்படையில் காணப்போகிறோம்.

நீதி மற்றும் அமைதியின் இறைவன்

சமாதானத்தின் தேவன் நீதியுள்ளவர்(பிலிப்பியர் 4:9; உபாகமம் 32:4). உண்மையில் அவரை அறிந்தவர்களின் வாழ்க்கை நன்மையான காரியங்களாலும், சமாதான காரியங்களாலும் அடையாளமிடப்பட்டு இருக்கும்.

ஆதாமும் ஏவாளும் தங்களை உருவாக்கிய தேவனுக்கு கீழ்படியாமல் போன அந்த காலத்திலிருந்து இந்த இணைபிரியாத "நீதியும் சமாதானமும்" உலகத்தில் அதிகமாக மறைந்துக் கொண்டே வருகிறது.

எப்படி ஒரு பனிப்பந்து மலை உச்சியிலிருந்து உருண்டு கீழே வர வர பெரியதாக மாறிவிடுகிறதோ அது போல, அநீதியானது தாங்கமுடியாத அளவிற்கு பெருகிவிட்டது.

இந்த அநீதியை தடுத்து நிறுத்துவதற்கும் அல்லது அதிக தீங்கு இன்னும் நடைபெறாமல் அநீதிக்கு தடை விதிப்பதற்கும், அதே போல நீதியை நிலை நாட்டுவதற்கும் யாரால் முடியும்? போர் அதிக சூடாக நடந்துக்கொண்டு இருக்கும் போது, யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்று பிரித்துக்காட்ட யாரால் முடியும்?

ஒருவர் பக்கம் சாய்ந்து அவர் சொல்லும் விவரங்களை நாம் கேட்போமானால், எதிராளியின் பார்வையில் இது அநியாயம் என்று அவருக்கு படுவதை நாம் காண தவறிவிடுவோம்.

தற்போது காஸாவில் நிலவும் சூழ்நிலையை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம்.

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலினால் பாதிக்கப்படும் சின்னங்சிறு குழந்தைகள் அனுபவிக்கும் வேதனையை ஊடகங்கள் விவரிக்கின்றன, மற்றும் பாலஸ்தீனா மீது இரக்கம் கொள்ளும் மக்கள் இந்த செய்திகளைக் கண்டு, கோபங்கொள்கின்றனர்.

அதேநேர‌த்தில், யூத‌ நாட்டின் ப‌க்க‌ம் உள்ள‌ ம‌க்க‌ள், இர‌த்த‌ம் சொட்டும் எரிந்த‌ முக‌ங்க‌ளோடு காண‌ப்ப‌டும் குழ‌ந்தைக‌ளைக் க‌ண்டு ம‌ன‌ம் வ‌ருந்தினாலும், த‌ங்க‌ள் மீது தாக்குத‌ல்ந‌ட‌த்துப‌வர்க‌ளை எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும்? என்று கேட்டு, இஸ்ரேலின் செயலை நியாயப்படுத்துகிறார்கள்.

இஸ்ரேல் என்ற நாட்டை அழிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஹமாஸ் என்ற இயக்கம் தொடர்ந்து ஏவுகனைகளோடு தாக்கும் போது, அதனிடமிருந்து தப்பிப்பதற்காக நடத்தப்படும் "ஒரு தற்காப்பு போர் இல்லையா இது?".

அதேநேர‌த்தில் த‌ங்க‌ள் நாட்டிலேயே த‌ங்க‌ளை சிறைக் கைதிகளாக‌ வைத்திருக்கும் நாட்டிற்கு எதிராக‌ போர் புரியும் "சுத‌ந்திர‌ போர் வீர‌ர்க‌ள்" என ஹமாஸ் இயக்கத்தார்கள் கருதுகிறார்கள்.

சரி, உண்மையில் அந்த இடம் யாருடையது? குர்‍ஆனும் பைபிளும் அந்த இடத்தை யூதர்களுக்கு இறைவன் தான் கொடுத்தார் என்றுச் சொல்லவில்லையா(குர்‍ஆன் சூரா அல்-அரப் 7:133-138, யோசுவா 1:1-5)?

இந்த சிக்கலான சூழ்நிலையில் இன்னொரு முக்கிய‌மான‌ விவ‌ர‌த்தைச் சொல்கிறேன், ஹ‌மாஸ் இய‌க்க‌த்தை ஸ்தாபித்த‌ ஷேக் ஹ‌சேன் யூசுப் என்ப‌வ‌ரின் ம‌க‌னான‌ முச‌ப் ஹ‌சேன்என்ப‌வ‌ர் ச‌மீப‌ கால‌த்தில் பைபிளின் இயேசுக் கிறிஸ்துவை பின்பற்றப் போவதாக தன் முடிவை தெரிவித்துள்ளார்.

ஹ‌மாஸ் இய‌க்க‌ம் ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் போது, ஹ‌மாஸ் த‌ன் சொந்த‌ ம‌க்க‌ளை கொடுமைப்ப‌டுத்துவ‌தையும், கொல்வ‌தையும் க‌ண்டு முச‌ப் அதிகமாக ப‌ய‌ந்துள்ளார்.

இவர்கள் எப்படிப்பட்ட சுதந்திரத்தை பிரகடனப்படுத்துகிறார்கள்? தன்னை பின்பற்றுகிறவர்களிடம் "உன் சத்துருக்களை நேசியுங்கள்" என்றுச் சொன்ன இயேசுவின் வார்த்தைகள், காஸாவில் இளைஞர் இயக்கத்திற்கு தலைவராக இருந்த முசப்பை, இந்த வித்தியாசமான மற்றும் வினோதமான போதனையை செய்த இயேசுவைப் பற்றி இன்னும் அதிகம் அறிய கட்டாயப்படுத்தியது

உன் எதிரியை நேசி! இதில் நீதி எங்கேயுள்ளது?

நமக்கு எதிராக தீமை செய்பவர்களை மன்னித்து, அவர்கள் மீது அன்பு கூறுங்கள் என்று இயேசு எப்படி தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு கட்டளை கொடுக்கமுடிந்தது?

இப்படி நமக்கு தீமை புரிந்தவர்களை மன்னித்தால், இது முழுவதும் அநீதி இல்லையா? ஆனால், உண்மையில் தௌராத்தில் தேவன் சொல்கிறார்:

பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும் (உபாகமம் 32:35).

நீதியை செய்வதற்காக தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இதை தேவன் தாமே தன் வழியிலே இந்த தண்டனையை நிறைவேற்றுவார்.

உண்மையில் சொல்லவேண்டுமானால், தேவன் ஏற்கனவே, அதிகமாகவே தண்டனை அளித்துவிட்டார், எனவே நாம் இப்போது நம் எதிரிகளை நேசிக்கவேண்டும்,

இனியும் நேசிக்கவேண்டும், தீமை புரிந்தவர்களுக்கு தண்டனை தருவது மஸீஹாவாகிய இயேசு பார்த்துக் கொள்வார்.

மஸீஹா(மேசியா) என்பதின் அர்த்தம்

குர்‍ஆன் கூட இயேசுவை "அல்-மஸீஹா"(சூரா அல்-இம்ரான் 3:45) என்று அழைக்கிறது. ஆனால், குர்‍ஆன் இந்த வார்த்தையின் பொருள் என்ன என்று விளக்குவதில்லை.

இது மட்டுமல்ல, இந்த குறிப்பிட்ட பட்டம்/பெயர் ஏன் இயேசுவிற்கு மட்டும் தனிப்பட்ட விதத்தில் கொடுக்கப்பட்டது என்று கூட குர்‍ஆன் விவரிப்பதில்லை.

குர்‍ஆனின் இந்த தெளிவற்ற விவரத்தின் மத்தியில், "மஸீஹா" என்னும் இயேசுக் கிறிஸ்து பைபிள் வெளிப்பாட்டின் முழுமுதல் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

மேசியா/மஸீஹா என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம், "அபிஷேகம் செய்யப்பட்டவர்", இதனை ஆங்கிலத்தில் "கிறிஸ்து" என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.

இந்த வார்த்தை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டது, கடைசியாக வருகிறவரான மேசியாவின் செயல்களை குறிப்பிட இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

அவர் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர், அவர் தன் மக்களை இரட்சிப்பார், அவர் தேவனின் எதிரிகளை நியாயந்தீர்த்து தண்டிப்பார் மற்றும் அவர் இந்த முழு உலகத்தின் எல்லா நாடுகளையும் நீதியோடும் நியாயத்தோடும் நித்திய நித்தியமாக ஆட்சி புரிவார்.

அவர் தேவனாக‌ உள்ளவர், அவர் பரலோகத்தில் இருக்கிறார், மனிதனாக வந்து நாம் பெறவேண்டிய தண்டனையை அவர் தன் மேல் ஏற்றுக்கொண்டார் என்று பைபிளில் விவரிக்கப்படுகிறார்(ஏசாயா 9:6-7, 53:1-12, தானியேல் 7:13-14).

நடைமுறைப் படுத்துதல்

ஒரு நல்ல செய்தி என்னவென்றால், "சமாதானம்-" என்பது காஸாவிலும் இன்னும் சண்டை கள் சச்சரவுகள் உள்ள இடங்களிலும் சாத்தியம் தான்,

ஏனென்றால், நீதியை தேவனே நிலை நாட்டியிருக்கிறார். ஆனால், தேவனின் "சமாதான திட்டத்தை" நிராகரித்தால் என்ன நடக்கும்? இஞ்ஜில் என்றுச் சொல்லும் நற்செய்தி சொல்கிறது:

"கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" (ரோமர் 12:18)

தேவனுடைய இந்த விலை மதிக்க முடியாத பரிசை எல்லாருக்கும் தருகிறார். ஆனால், இந்த பரிசை யார் யாரெல்லாம் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே இப்பரிசு மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

தேவனுடைய உதவியுடன் மன்னிப்பையும் அன்பையும் பெற்று யார் யாரெல்லாம் அவைகளை அனுபவிக்கிறார்களோ, அவர்களால் மட்டுமே மன்னிப்பையும் அன்பையும் மற்றவர்களுக்கு தரமுடியும்.

இப்படிப்பட்டவன் தன் நாட்டின் அரசாங்க சட்டங்களை மக்கள் பின் பற்றும்படி செய்கிறான், சில நேரங்களில் கட்டாயப்படுத்தியாவது செய்யச் செய்கிறான்(ரோமர் 13:1-8).

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பதிலாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். ஒரு வேளை அரசாங்க அதிகாரிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடவில்லையானால், சட்டத்தை நிலை நிறுத்தவில்லையானால், நியாயந்தீர்ப்பு நாளிலே தேவன் அவர்களை நித்திய நரகத்திலே தள்ளி தண்டிப்பார்.

இதே த‌ண்ட‌னை தேவனது நீதியான‌ வ‌ழியை ம‌றுக்கும் ஒவ்வொருவ‌ருக்கும் கிடைக்கும்.

தேவனுடைய நீதியையும் அவரது சமாதானத்தையும் ஏற்றுக்கொண்டு, அதை சந்தோஷமாக அனுபவிக்கும் மக்கள், இந்த கடினமான காலங்களில் என்ன செய்யவேண்டும்?

நாம் முழுமையான மனநிறைவோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை,

அதற்கு பதிலாக நம்முடைய இரட்சகரோடு நாம் கொண்டுள்ள நல்லுறவின் மீது ஆதாரப்பட்டு இருக்கிறது. தனி மனிதனோ, குழுக்களோ அல்லது நாடுகளோ தங்கள் சுயநல வெறுப்பிலிருந்து விடுதலை அடைய விருப்பமில்லாமல் மறுப்பவர்களிடம் நாம் நல்ல சமாதான மற்றும் வெறுப்பில்லா வழிமுறைகளை பயன்படுத்தி சந்திக்கவேண்டும்

(உதாரணம்: மார்டின் லூத்தர் கிங்). இது மிகவும் வலியுண்டாக்கும் நீண்ட வழிமுறையாக இருந்தாலும், இதற்கு அதிக காலமானாலும் இயேசுக் கிறிஸ்து அவர்களுக்காக உண்டாக்கியுள்ள பரலோகத்தில் அவர்களை கொண்டுச் செல்லும் வழி இதுவே.

இயேசு அவர்களுக்காக உண்டாக்கிய இடம் தான், அவர்களின் நித்திய தாய் நாடு ஆகும். தேவனின் நீதியை அறியும் உங்கள் மீது தேவனின் சாந்தி உண்டாகட்டும்.

புதன், 28 ஜனவரி, 2009

மதமாற்றம்

இது தாங்க ஆசைகாட்டி மாதமாற்றம் செய்வது.. பதிவின் தொடர்ச்சி. இது ஜூ.வி.யிலும் ஒரு வலை பதிவிலும் வந்ததை இங்கு தந்து இருக்கிறேன். பாருங்க மதமாற்றம் எப்படி நடக்குதுன்னு

இதையும் படிங்க ஜூ.வி.யில் வந்தது:-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த குளோரி சந்திரா. தனி தொகுதியான இங்கு இவர், தலித் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அப்போதே இவரது வெற்றியை எதிர்த்து பலதரப்பிலும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் இவரிடம் தேர்தலில் தோற்றுப் போன எதிர்தரப்பினர்,

"கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பினரான குளோரி சந்திரா, பொய்யான தகவல்களைக் கொடுத்து தேர்தல் கமிஷனையே ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்" என்று குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார்கள்.

எதிர் தரப்பினர் எடுத்து வைத்த ஆதாரங்களை மறுக்க முடியாத சந்திரா, ‘அடிப்படையில் கிறிஸ்டியனான நான், 1994 வது வருடமே மதுரையிலிருக்கும் ஆரிய சமாஜம் என்ற அமைப்பின் மூலமாக இந்துவாக மாறிவிட்டேன்’ என்று கோர்ட்டில் சொல்லி அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்திருக்கிறார்.

சந்திராவின் இந்த வாக்குமூலம்தான் ஆர்ய சமாஜின் உண்மையான 'திருப்பணிகளை' வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சொல்கிறார், "பிப்ரவரி முதல் வாரத்துல சந்திரா குறிப்பிட்டுள்ள மதுரை ஆரிய சமாஜத்துக்குப் போனேன். அங்க ராஜேந்திரன்னு ஒருத்தர் இருந்தார்.

‘சொந்தக்காரர் ஒருத்தர் இந்து மதத்துக்கு மாறுனது மாதிரி சான்றிதழ் வேணும்’னு கேட்டேன். உடனே, எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க சம்மதிச்சார்.

நான், ‘ஜெயபால் டேவிட்’ங்கிற பேரை ‘செல்லையா’ன்னு மாத்தணும்னு எழுதிக்கொடுத்தேன்.

ஜெயபால் டேவிட் நெல்லை பேராயர்னு கூட தெரியாம ஐயாயிரம் ரூபாய வாங்கிக்கிட்டு அஞ்சு நிமிஷத்துல அவர செல்லையாவாக்கிட்டாங்க. இவ்வளவுக்கும் பேராயரோட அட்ரஸைத்தான் கொடுத்தேன்.

அன்னிக்கு சாயந்தரமே காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் பேரை ‘பெருமாள்சாமி’ன்னு மாத்தணும்னு எழுதிக் கொடுத்தேன்.

5.2.2007-ம் தேதியில இருந்து பீட்டர் அல்போன்ஸும், பெருமாள்சாமியாயிட்டார்!

சான்றிதழ்ல சட்டமன்ற உறுப்பினர்ங்கிறதை சுருக்கி, ‘ச.ம.உ.’ ன்னு எதுவும் புரியாமலே எழுதிக்கொடுத்துட்டாங்க. இதுக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. பணத்தைக் குடுத்து மதத்தை மாத்துற இந்த ரூட்டுலதான் சந்திராவும் போயிருக்கிறார்’’ என்றார் சண்முகம்.

இந்த விவகாரம் தொடர்பாக இப்போது ஆரிய சமாஜ நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப் போட்டிருக்கிறது போலீஸ். விளக்கமறிவதற்காக ஜூனியர் விகடன் நிருபர்கள் அங்கே சென்றபோது பதில் சொல்ல ஆள் இல்லாமல் பூட்டிக் கிடந்தது அந்த அலுவலகம்.

பீட்டர் அல்போன்ஸை அவருக்குத் தெரியாமலே இந்து மதத்துக்கு மாற்றியிருப்பது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டார்கள்.

"இதுபற்றி நானும் கேள்விப்பட்டேன். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. மதத்தை வைத்து இந்த சமூகத்தில் எத்தகைய பித்தலாட்டங்கள் நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

பெருமாள்சாமியாக இருப்பதில் இந்த பீட்டர் அல்போன்ஸுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் பணி செய்வதற்கு மதம் எனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

ஆனால், மதத்தை வைத்து இப்படி மக்களை ஏமாற்றும் நபர்கள் அபாயமானவர்கள். இப்படியெல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு மதத்தை மாற்றிச் சான்றிதழ் கொடுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் இதுபற்றி புகார் செய்யவிருக்கிறேன்..’’ என்று படபடத்தார். - நன்றி: ஜூனியர் விகடன்

மேலும் இது குறித்து ஒரு வலை பதிவில் ஒரு நண்பர் கீழ் கண்டவாறு கூறியுள்ளார்:-

ஆரிய சமாஜம் இதை உலகமெங்கும் செய்து வருவதாகவும், பஞ்சாபில் சுதந்திரத்துக்கு முன்பு பெருமளவில் முஸ்லிம்களை இந்துக்களாக ஆக்கியதாகவும் நேசக்குமார் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார்.

இவர்கள் இண்டர்நேஷனல் லெவலில் மதமாற்றம் என்ற பெயரில் காசு பார்க்கும் ஒரு கும்பல் என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

'அங்கே 8000 பேர் மதம் மாறுனாங்க, இங்கே 10,000 பேர் மதம் மாறுனாங்க என்று நண்பர் எழில் அடிக்கடி தன் வலைப்பதிவில் எழுதுவார். 'இது'தான் அந்த மதமாற்றமா? உலகளாவிய அளவில் நல்லா கல்லா கட்டியிருப்பாங்க போலிருக்கே!

இந்த ஆரியசமாஜம் ஒரு சமூக சேவை இயக்கம் என்பது போலவும் இங்கு சிலர் நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இது அந்தக்காலத்திய இந்து மதவெறி அமைப்புகளுள் ஒன்றுதான்.

"ஆரிய சமாஜிகள் ஒன்று மற்ற மதத்தினருடன் சண்டை போடுவார்கள். இல்லாவிட்டால் தங்களுக்குள்ளாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்" என்று 1924-லேயே காந்திஜி சொன்னார்.

இதைத் தொடர்ந்து சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

'இந்து மதத்தை இழிவு படுத்தி இஸ்லாம் பக்கம் சாய்ந்து விட்டார் காந்திஜி' என்று சமாஜிகள் நாடெங்கும் பிரச்சாரம் செய்தார்கள். இதுபோன்ற பிரச்சாரங்களின் விளைவாகவே இறுதியில் காந்திஜி தனது உயிரையே இழக்க நேரிட்டது என்பது வரலாறு.

இயேசு ஒருவரால் தான் மீட்பா?

சிலநாள்களுக்கு முன்பு அதாவது கிறிஸ்துமஸ்க்கு முன்பு எனக்கு ஒரு மின்-அஞ்சல் வந்தது. விடுமுறை காலம் என்பதால், அதற்கு உடனடியாக பதில் தர முடியவில்லை.

மேலும் இந்த மின்-அஞ்சல் முகவரிக்கு பதில் அனுப்பினால் முகவரி தவறு என்று திருப்பி வந்துவிட்டது. எனவே அதை இங்கு தருகிறேன்.

Sender's Name: danieleaswar
Sender's Email: man.ofrock.hotmail.com

Message:நீங்கள் எந்த கிருஸ்தவ மதப்பிரிவு என்று எனக்குத் தொரியாது ஆனாலும் என் சில கேள்விகளுக்கு பதில் தருவீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும்.

கேள்வி 1. இயேசு ஒருவராலே மீட்டு என்றால் மற்றதெய்வங்கள் அவர்களின் மதக்கெள்கைகள் எல்லாம் என்னபாடு? இது உங்கள் தாய்மட்டும் தாய் என்பது போலவும் மாற்றன்தாயை மிகவும் ஏலனமாய் எண்ணுவதாயும் தோன்றும் அல்லவா? உங்கள் பதிலை எந்த வேதவசனப்பிரயேகமும் இன்றி தெளிவாக வெளிப்படையாக எதிர்பார்க்கின்றேன்
நன்றிகள்

இதற்கு நம் பதில்...

கேள்வி:-நீங்கள் எந்த கிருஸ்தவ மதப்பிரிவு என்று எனக்குத் தொரியாது

பதில்:- மன்னிக்கவும். நான் ஒரு இந்து, என் சான்றிதல்களில் அவ்வாறு தான் உள்ளது, ஆனால் நான் கிறிஸ்துவ நம்பிக்கை உள்ளவன்,அதாவது மறுபிறப்பின் அனுபவம் கொண்டவன், அதை நம்புவன்.

மேலும் நான் ஞானஸ்தானம் எடுத்து உள்ளேன். என் பெயரை மாற்றி கொள்ள விருப்பமில்லை. நான் மதம் மாறவில்லை, மனம் மாறிஉள்ளேன் அவ்வளது தான்.

என் மனைவின் சான்றிதல்களில் மதம், ஜாதி எதுவும் கூறிப்பிடவில்லை. மேலும் சமீபத்தில் எங்ளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கும் நாங்கள் மதம், ஜாதி எதுவும் கொடுக்கவில்லை.

ஆனால் நாங்கள் ஒரு சபையில் உறுப்பினராக உள்ளோம். கிறிஸ்துவம் ஒரு மதமல்ல ஒரு மார்க்கம், மேலும் எங்கள் தளத்தில் வேதகம தெடுதல் பகுதி உள்ளது அதில் "மதம்" என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது என்பதை நீங்கள் தேடி பார்க்கலாம். விடை கண்டிப்பாக "0" தான்.

கேள்வி:- இயேசு ஒருவராலே மீட்டு என்றால் மற்றதெய்வங்கள் அவர்களின் மதக்கெள்கைகள் எல்லாம் என்னபாடு?

பதில்:- கண்டிப்பாக இயேசு ஒருவரால்தான் மீட்பு, இது வேதாகமம் எங்கும் நிறைந்து இருக்கும் உண்மை.

//உங்கள் பதிலை எந்த வேதவசனப்பிரயேகமும் இன்றி//

நான் எந்த வேதவசனமின்றி இந்து வேதத்தில் இருந்தும் குர்ஆனிலிருந்தும் பதில் தர முற்பட்டு இருக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமின்றி, கிறிஸ்தவரல்லாதோர் புனித நூலாக கொண்டுருக்கும் மற்ற வேதங்களிலும்கூட சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால் அதன் அர்த்தங்களை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாமல இருப்பதினால், அறியாமலேயே அவற்றை கூறி வருகின்றனர்.

குறிப்பாக நமது இந்திய வேதங்களில் கூறப்படும் பிரஜாபதி புருஷாவாகிய மெய்தெய்வம் யார் என்பதை அறிந்துகொள்வற்கு உதவியாக கிழே கொடுக்கப்பட்டுருக்கிறவைகளை நிதானமாய் படியுங்கள்.

சாம வேதத்திலுள்ள தாண்டிய மகாபிரமாணத்தில், "பிரஜாபதி தேவப்பியம் ஆத்மனம் யக்னம் க்ருத்வ ப்ராயசித்த" என்பதின் விளக்கம் என்னவென்றால், கடவுள் தம்மையே பலியாக் கொடுத்து பாவத்தினின்றூ மீட்பை சம்பாதிப்பார் என்றும், சத்பதா பிரமாணத்தில் "பிரஜாபதி யக்னயக" அதாவது, தேவனே பிலயாக வேண்டும் என்றும், சாம வேதம் உத்ராட்சிக காண்டத்தின் 69-ம் அதிகாரம் 7-வது வாக்கியத்தில் , " உலகத்தை இரட்சிக்க தேவன் தந்தையாகவும், மகனாகவும், சக்தியாகவும் வெளிப்பட்டு வானத்திற்கும் பூமிக்கும் நடுவே உபத்திரவப்பட்டு சபையை மீட்பார்" என்றும் கூறப்பட்டு இருக்கின்றது.

இந்த உண்மையை, ஆயிரம் பெயர்களால் பிரஜாபதியைத் துதிக்கும் சகஸ்ரநாமவளி திட்டமும் தெளிவாக விளக்குகின்றது.

"ஒம் ஸிரி பிரம்ம புத்ராய நமக"
தேவக் குமாரனே வாழ்க

"ஒம் ஸிரி உமாத்யாய நமக"
பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே வாழ்க

"ஒம் ஸிரி கன்னி சுத்தாயாய நமக"
கன்னியின் மகனாகப் பிறந்தவரே வாழ்க

"ஒம் ஸிரி தரித்திர நாராயணாய நமக"
ஏழைக் கோலத்தில் வந்தவரே வாழ்க

"ஒம் ஸிரி விதிர்ஷ்டாய நமக"
விருத்தசேதனம் செய்து கொண்டவரே வாழ்க !

"ஒம் ஸிரி பஞ்சகாயாய நமக"
ஜந்து காயங்களை எற்றவரே வாழ்க !

"ஒம் ஸிரி விருட்ஷ சூல அருதாய நமக"
சூலம் போன்ற மரத்தில் பலியானவரே வாழ்க !

"ஒம் ஸிரி மிருத்யஞ் ஜெய நமக"
மரணத்தை ஜெயித்தவரே வாழ்க

"ஒம் ஸிரி ஷிபிலிஷ்டாய நமக"
தம்முடைய மாம்சத்தை புசிக்கக் கொடுத்தவரே வாழ்க !

"ஒம் ஸிரி தஷிணா மூர்த்தியாய நமக"
பிதாவின் அண்டையில் அமர்ந்திருப்பவரே வாழ்க !

இதேப்போன்று முஸ்ஸிம் மக்கள் புனித நூலாகிய குர்ஆனில் கூட இயேசுவைப் பற்றி பல இடங்களில் கூறப்பட்டு உள்ளதை இங்கு காணலாம்.

"அதற்கவர் பரிசுத்தமான் ஒரு மகன் உமக்களிக்கப்படும் என்பதை உம்க்கு அறிவிப்பதற்காக நான் உம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதன் தான்" ஜிப்ராயில்(காபிரியேல்)- (மர்யம் சுரா 19:19)

இம்ரானுடைய மகள் மர்யம், அவர் தன்னுடைய கர்ப்பை காத்துக்கொண்டார். ஆகவே மர்யமாகிய அவருடைய கர்ப்பத்தில் நம்முடைய ஆவிகளிலிருந்து ஓர் ஆவியை ஊதினோம்.

அவர் தான் தன் இறைவனுடைய வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்துதுடன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டவர்களில் உள்ளவராகவும் இருந்தார்" (தஹ்ரீம் சுரா 66:12)

"இயேசு கன்னிமரியாளின் வயிற்றில் அற்புதமாக பிறந்தார்" (சுரா 19"16-33; 45-47; 3:42; 3:42; 21:91; 23:50)

அல்லாஹ் ஈஸாவை நோக்கி, பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும், என் உதவியினால் நீர் சொஸ்தப்படுத்தியதையும் நீர் என் அனுக்கிரகத்தைக் கொண்டு மரித்தோரை கல்லறையிலிருந்து உயிர் பெற்று புறப்பட செய்ததையும் நினனத்து பாரும்" (அலமாயிதா 5:110 அல் இம்ரான் 3:49)

உம்மை மரிக்க வைத்து, என்னளவில் உயர்த்திக் கொள்வேன்(3:55) என்று அல்லாஹ் இயேசுவை நோக்கி சொல்கிறார்.

குலாமன் ஸக்கியான்(சுரா 19:19)


மேலும் முஸ்லீம் மக்கள் எல்லோரும் ஈஸாமஸீக்(இயேசு கிறிஸ்து) மரிக்கவில்லை, அல்லாஹ் அவரை எடுத்துக்கொண்டார், மீண்டும் ஒரு நாள் வருவார் என்று நம்புகிறார்கள்.

மேலும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிய இங்கு தட்டவும்.

ஏதோ எனக்கு தெரிந்த படித்த விசயங்களை இங்கு தந்து இருக்கிறேன். இது போக இந்து வேதங்களில் அனேக இடங்களில் கடவுள் வந்து தம்மையே பலியாக கொடுத்து இந்த உலகத்தை காப்பார் இன்று உள்ளதாக படித்து இருக்கிறேன்.

அவை எங்கு என்பது சரியாக தெரியாது. முடிந்தால் விரைவில் அவற்றை இங்கு தருகிறேன். எனக்கு தெரிந்து இயேசுவை தவிர வேறு எந்த தெயவமே அல்லது தெய்வ பலம் உள்ளவை என்று சொல்லப்படுகிறவர்கள், இந்த உலகமக்களுக்காக பலியானதாக சரித்தரிம் இல்லை.

கேள்வி :- இது உங்கள் தாய்மட்டும் தாய் என்பது போலவும் மாற்றன்தாயை மிகவும் ஏலனமாய் எண்ணுவதாயும் தோன்றும் அல்லவா?

பதில்:- இங்கு நீங்கள் தாய் என்பது கடவுளை குறிப்பிடுவதாக கருதுகிறேன். எங்கள் அம்மா எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் எங்களை வளர்த்தார் என்பதை நாங்கள் அறிவோம்.

அவர் தம்மை வாழ்கையையே எங்களுக்காக கொடுத்தார், அப்படி இருக்கும் போது நாங்கள் கண்டிப்பாக எங்கள் தாயை மற்றவர்களை(கவனிக்கவும் மற்ற தாய்களைவிட அல்ல)விட சற்று உயர்வாக தான் நினைப்போம்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் பெற்றோர்கள் மேன்மையானர்களே, இதில் வேறுபாடு எதுவும் இருக்காது. உங்கள் தாய் உங்களுக்காக என்ன செய்தார் என்பதை வைத்துதான் உங்கள் தாயின் மேல் உங்களுக்கு பாசம் வரும் என்பது என் கருத்து.

அதேபோல் தான் எம் தேவன் எமக்காக தம்மையே பலியாக கொடுத்தார், தன் பிள்ளைகள் தேவ இராட்சியத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.

அந்த அன்பு, அவர் எமக்காக கல்வாரி சிலுவையில் செய்த அந்த காரியம்,,, அதை நினைத்தால்,,, நண்பரே.. கண்டிப்பாக எம் தேவன் எமக்கு மேன்மைதான்.

எங்கள் தளத்தில் ஒரு கட்டுரை ஏற்றும் போது அது மற்றவர்களின் மனங்களை புண்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

எனக்கு தெரிந்த வரை மற்ற மதங்களையோ அல்லது மார்கங்களையோ தாக்கி நாங்கள் எழுதியதாக ஞாபக்ம இல்லை. அப்படி எதுவும் இருந்தால் கூறவும்.

கண்டிப்பாக நான் மாற்றானதாயை ஏலனமாய் எண்ணுவது கிடையாது. மற்றவர்கள் நம்பிக்கையை நான் கண்டிப்பாக மதிப்பேன், ஆனால் கண்டிப்பாக முடநம்பிகைகளை மதிப்பதில்லை. ( நல்லநேரம், ஜாதகம், பிற..)

படித்த நண்பர்களே உங்கள் கருத்தையும் முடிந்தால் இங்கு கூறுங்கள. இது சம்மந்தமாக உங்களுக்கு தெரிந்த விசயங்களை மற்றவர்களும் அறிந்து கொள்ள பகிரந்து கொள்ளுங்களேன்.

தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள்

'ராணி' பத்திரிகை ஆசிரியர் அ.மா.சாமி வித்தியாசமானவர். தான் 'ஆமா சாமி' என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறவர் அவர் (ஆதித்தனார் மாணவர் சாமி).

'குரும்பூர் குப்புசாமி'யாகத் தொடர்கதை எழுதினாலும், நுணுக்கமான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினாலும், 'எல்லோருக்கும் எளிதில் புரியும்படியாக, சுவையாக எழுத வேண்டும்' என்று ஆதித்தனார் பள்ளியில் பாடம் படித்த சாமி, படித்த பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பதைத் 'தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள்' புத்தகம் புலப்படுத்துகிறது.

ஒன்றல்ல, நூறல்ல .. ஆயிரத்து அறுநூறு கிறிஸ்தவ இதழ்கள் பற்றிய விவரங்களைத் தேடிப் பிடித்துத் தொகுத்திருக்கும் சாமி ஒரு கிறிஸ்தவர் இல்லை என்பதில் யாராவது சின்னதாக ஆச்சரியப்பட்டால், இஸ்லாமியராக இல்லாத இவர், இதற்கு முன் இஸ்லாமிய இதழ்கள் பற்றியும் இன்னொரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என்பதற்கும் சேர்த்து ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம்.

எது கிறிஸ்தவ இதழ் என்பதற்குக் 'கிறிஸ்தவத்தைப் பற்றிய இதழாக இருக்க வேண்டும். அல்லது கிறிஸ்தவர் மட்டுமே படிக்கத் தகுந்த இதழாக இருக்க வேண்டும்' என்று விளக்கம் சொன்னாலும், அதை நெகிழ்த்தி, கிறிஸ்தவர்கள் நடத்திய வேறு இதழ்கள் பற்றியும் சொல்லிப் போகிறார் சாமி.

அதோடு நிறுத்தாமல், தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தின் வரலாற்றையும் விரிவாகத் தருவது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

தெரிந்த செய்தியில் கூடத் தெரியாத அம்சம் எதையாவது சேர்த்துத் தருகிறார் சாமி. கூடன்பர்க் 1455-ல் வெளியிட்ட பைபிள்தான் உலகில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகம் என்பது எல்லோருக்கும் தெரியும். அது காகிதத்தில் அச்சாகவில்லை. தோலில் அச்சடிக்கப்பட்டது.

புத்தகத்தில் கண்ட இன்னும் சில 'முதல்'கள் :

கடல் கடந்து கிறிஸ்தவம் பரவிய முதல் நாடு தமிழ்நாடு. இலத்தீன் மொழிக்கு அப்புறம் அச்சேறிய முதல் மொழி தமிழ்.

1554-ல் போர்ச்சுக்கல்லில் 'கார்த்தீலியா' என்ற பெயரில் தமிழ் - போர்ச்சுகீஸ் மொழிகளில் வெளியான இந்த நூலின் தமிழ்ப் பகுதியை எழுதித்தர தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று மீனவத் தமிழர்கள் போர்ச்சுக்கல் போய் வந்தார்களாம்!

முதல் தமிழ்ப் பத்திரிகை 1812-ல் வெளியான 'மாசத் தினச் சரிதை'.

தமிழ் அல்லாத முதல் கிறிஸ்தவ இதழும் (ஆர்மீனிய மொழி) சென்னையிலிருந்துதான் வெளியானது. 1794-ல். அதற்கு முன் ஆர்மீனிய நாட்டிலேயே பத்திரிகை கிடையாதாம்!

இன்னும், இந்தியாவில் முதலில் வெளிவந்த குழந்தைகள் இதழ் 'பாலதீபிகை' (1840) தமிழ்தான். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தில் தடைசெய்யப்பட முதல் பத்திரிகையும் கிறிஸ்தவத் தமிழ்ப் பத்திரிகையான 'சபதம்'.

அ.மா.சாமி அடுக்கும் ஆயிரத்து அறுநூறு பத்திரிகைகளில், ஒரே ஒரு இதழ் மட்டும் வெளியாகிக் காணாமல் போனவையும் உண்டு. 1841-ல் தொடங்கி டபிள் சென்சுரியை நோக்கி நடை போடும் 'உதய தாரகை'யும் உண்டு. தொண்ணூறு வயசான 'சர்வ வியாபி'யும் கூட உண்டு.

இதழ்களின் பெயர்களில் தான் எத்தனை வகை! 'இலவசம்' என்ற பெயரில் சும்மாவே வினியோகிப்பட்டு அப்புறம் கொம்பு முளைத்த 'இரட்சண்யக் கொம்பு'.

பல பத்திரிகைகளின் பெயர்களில் 'இயேசு அழைக்கிறார்' .. இயேசு - ஆசீர்வதிக்கிறார், இருக்கிறார், நேசிக்கிறார், வருகிறார்,சந்திக்கிறார், தருகிறார், தொடுகிறார், விசாரிக்கிறார், சுகமளிக்கிறார், மன்னிக்கிறார்.

இதழ் ஆசிரியர்களும் சுவாரசியமானவர்களே.

"இலவசமாகக் கொடுத்தாலும் படிக்காமல் போடுகிறீர்களே" என்று அங்கலாய்ப்பவர்கள், 'காசு கொடுத்தால்தான் புத்தகம்' என்று கண்டீஷனாகச் சொல்கிறவர்கள்,

'நான் சொந்த வீடு கட்டிக் கொண்டு உங்களுக்குத் தொடர்ந்து ஊழியம் செய்ய நிதி அனுப்புங்கள்' என்று கோரிக்கை விடுப்பவர்கள்,

'இந்தப் பத்திரிகையை முஸ்லீம்களுக்குக் கொடுக்க வேண்டாம்' என்று கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கும் 'கல்வாரியின் அழைப்பு' பத்திரிகை ஆசிரியர் மைதீன்..

மரணப் படுக்கையில் இருந்தபோதும் கூட ·ப்ரூப் பார்த்து, அச்சடிக்கக் கையெழுத்துப் போட்ட பேலீசு அடிகளார் (1870-லேயே bombshell என்பதற்குத் 'தீக்குடுக்கை' என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியவர் இவர்!) .

பெரும்பான்மையான இதழ்கள் கிறிஸ்தவச் செய்திகளை மட்டுமே தாங்கி ந்தாலும், 'சர்வவியாபி' இதழில் வடுவூர் துரைசாமி அய்யங்கார் 'மரகதம் அல்லது கருங்குன்றத்துக் கொலை' துப்பறியும் தொடர்கதை எழுதியிருக்கிறார்!

காண்டேகர் நாவல் மொழிபெயர்த்து வெளியிட்ட 'நல்ல ஆயன்' பத்திரிகை 'பொழுது போக்கு இதழாக மாறியதால்' நிறுத்தப்பட்டது!

'இந்தப் பத்திரிகை ராணி சைஸ்' .. 'இது தினத்தந்தியை இரண்டாக மடித்த அளவில் வெளிவந்தது' என்பது போல் அங்கங்கே தட்டுப்படும் வரிகளில், தாம் பணிபுரியும் பத்திரிகைக் குடும்பத்தோடு இரண்டறக் கலந்த சாமி தென்படுகிறார்.

தமிழ் நூல்களைப் பதிப்பிக்கச் சுவடி தேடி அலைந்த 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா போல் இந்த அரிய நூலைப் பதிப்பிக்க 1000-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளின் பிரதிகளைத் தேடித் தமிழகம் எங்கும் அலைந்த அ.மா.சாமியை 'கிறிஸ்தவத் தாத்தா' என்று அழைத்தால், 'கிறிஸ்துமஸ் தாத்தா' சாண்டாகிளாஸ் ஆட்சேபிக்க மாட்டார்!

என்ன நடக்கிறது வட இந்தியாவில்?

தற்போது செய்திதாள்களில் 'வட இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனெரிகள் மற்றவர்களை கட்டாய மதம் மாற்றம் செய்கின்றனர்' என்ற செய்தியை அடிக்கடி வெளியிடுகின்றனர்.

நான் வேதாகம மொழி பெயர்ப்பு மென்பொருள் ஊழியத்தில் இருப்பதால் வட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு ஊழியங்களை பற்றிய ஒரு விரிவான கட்டுரை எழுத முற்பட்டு இருக்கிறேன்.

இது வட இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உங்களுக்கு கூறும்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஐரோப்பிய கிறிஸ்துவம் மிஷனெரிகளின் வருகை காரணமாக பாரதத்தின் தென் பகுதியில் ஆரம்பித்தது.

அவர்களின் அயராத பணியால் தென்பகுதியின் கடலோர பகுதிகளில் ஒரளவு மக்கள் தங்கள் பாவ வழிகளை விட்டு மனம் திரும்பி இயேசுவை ஏற்றக் கொண்டனர் சிலர்.

இவ்வாறு சிறிது சிறிதாக கிறிஸ்துவம் பாரதத்தில் பரவத் தொடங்கியது. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை.( எல்லா ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவர்கள் இல்லை)

அவர்களின் ஆட்சி அதிகாரத்தை கிறிஸ்துவம் பாதிக்காதவரை அதை அனுமதித்தனர். இருந்தாலும் ஒரு சில இடங்களில் கிறிஸ்துவத்தை அவர்கள் தடை செய்தனர்.


தங்கள் சமுதாய பணிகளான- மருத்துவம், கல்வி, இலக்கியசேவை என பல வழிகளில் எல்லா மக்கள் மத்தியிலும் கிறிஸ்துவத்தை பற்றிய ஒரு நல்ல எண்ணத்தை உண்டு பண்ணியிருந்தனர்.

கத்தோலிக்கர்கள் மற்றும் புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள் நிறுவிய கல்வி கூடங்கள், மருத்துவமனைகள் மூலமாக அனைவரும் பயன் அடைந்துவந்தனர்.

உயர்ஜாதி மக்களுக்கு மட்டும் கல்வி என்று இருந்த நிலை மாறி, சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் கல்வி கிடைக்கும் படி செய்தனர். இதற்காக அவர்கள் செய்து வந்த வேதாகம மொழிபெயர்ப்பு பணி மிகவும் உதவியது.

(இந்தியாவில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகம்.)

ஆங்கிலேய அரசாங்க பணிகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டதால் அவர்களும் இதை தடை செய்ய விரும்பவில்லை.

ஒரு சில பகுதிகளில் மக்கள் ஒடுக்கப்பட்டபோது கிறிஸ்துவ மிஷனெரிகள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர் அதற்காக அவர்கள் சிறை தண்டனையும் பெற்றனர்.

திராவிட பகுதிகளில் உள்ள மக்கள் எப்போதும் ஒரு திறந்த மனப்பான்மை உடையவர்களாய் இருந்தபடியால் பொதுவாக அவர்கள் கிறிஸ்துவத்தை எதிர்த்ததில்லை. இவ்வாறு பாரதத்தின் ஒரு பகுதியில் மட்டும் அதிவேகமாக நற்செய்தி பரவ தொடங்கியது.


வடக்கு தேய்ந்தது தெற்கு வாழ்ந்தது.

தற்போது உள்ள பெருளாதார சுழ்நிலையில் வட மாநிலங்களைவிட தென் மாநிலங்கள் நல்ல நிலையில் உள்ளன(ஒரு வேளை கணினி சார்ந்த துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம்). அதேபோல்தான் கிறிஸ்தவமும்.

தென்பகுதியில் நற்செய்தி பரவத்தொடங்கிய அதேசமயத்தில் வடபகுதியின் சில பகுதிகளில் , குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும் ஒரளவு மக்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டனர்.

இருந்தாலும் அனேக பகுதிகளில் மிஷனெரிகள் எதிர்ப்பைச் சந்தித்தனர்.

வடபகுதியில் தென்பகுதியை விட அதிகமான ஜாதி அடுக்குகள் இருந்தன, தாழ்த்தப்பட்ட மக்கள் விலங்குகளை விட மிகக்கேவலமான முறையில் நடத்தப்பட்டனர்.

இதனால் அவர்கள் மெதுவாக கிறிஸ்துவத்தை நாடி வரத்தெடங்கினர். அவ்வாறு வருபவர் களில் ஒரு சில பேர் இரட்சிக்கப்பட்டு இயேசுவை பின்பற்றத் தொடங்கினர்.

இதன் காரணமாக வட இந்தியாவில் கிறிஸ்தவம் எனப்படுவது தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாக கருதப்பட்டது. மேலும் ஆங்கிலேயர்கள் மாட்டுக்கறி உண்பதால் அவர்களும் அவர்கள் மதமும் தாழ்த்தபட்டவர்களுடையதாக கருதப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களை பறைங்கியர் என்றும் கூறுவதன் காரணமும்கூட இதுதான்.

இதுதவிர அனேக காரணங்களை வட இந்தியாவில் நற்செய்தி பரவத்தடையாக இருந்ததாக கூற முடியும். ஆனால் அவ்வாறு கூறுவதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் என்னிடம் இல்லை.

சுதேசி மிஷனெரி இயக்கங்கள்

ஐரோப்பிய மிஷன்களின் ஊழியத்தால் தென் தமிழகம் மற்றும் கேரளாவிலும் ஒரு எழுப்புதல் 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் உருவானது.

இதன் விளைவாக அனேக சுதேசி மிஷன் இயக்கங்கள் மலர்ந்தது.( மேலும் தகவலுக்கு திருநெல்வேலிக்கு கிறிஸ்துவம் வந்தது- என்ற நூலை படிக்கவும்).

குறிப்பாக IMS இந்தியாவில் முதல் சுதேசி மிஷனெரி இயக்கங்கள் உருவானது.

அந்த இயக்கங்கள் தமது ஊழியஙக்காரர்களை மாநிலத்தின் பல பகுதிக்கும் நற்செய்தியைச் சொல்ல அனுப்பி வைத்தது. இவ்வாறு நம் இந்திய சகோதரர்களுக்கு நற்செய்தி சொல்ல நாமே புறப்பட்டோம்.

சுதந்திரத்திற்கு பிறகு

நம் பாரத தேசத்தின் சுதந்திரத்திற்கு பிறகும் அனேக ஜரோப்பிய மிஷனெரிகள் இங்கு இருந்தாலும், இந்திய அரசங்கத்தின் கட்டளைக்கு இணங்க மெதுவாக அவர்கள் தங்கள் நாடுகளுக்கு செல்லத் தொடங்கினார்கள்.

சுதேசி மிஷனெரி இயக்கங்களின் வளர்ச்சியாலும், ஜெபிக்கும் சபைகளாலும், மக்களாலும் நற்செய்தி எந்த வித இடர்பாடுகளும் இன்றி செல்லத் தொடங்கியது.

இதேசமயத்தில் வடஇந்தியாவின் பல பகுதிகள் இருண்ட நிலையில், சந்திக்கப்படாத மக்கள் அதிகம் இருக்கும் பகுதியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் சில அலுவலர்கள் மற்றும் பிற அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் இணைந்து சென்னை கடற்கரையில் சந்திக்கப்படாத மக்களுக்கு என ஜெபிக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு அவர்கள் ஜெபிக்கும்போது வட இந்திய பகுதிகளை குறித்த தேவனின் திட்டத்தை புரிந்துகொண்டனர், இதன் விளைவாக FMPB (நண்பர் சுவிஷேச ஜெபக் குழு) என்ற சுவிஷேச இயக்கத்தை தங்கள் சொந்த பணத்தின் முலம் ஆரம்பித்தனர்.

தத்தமது வேலை இராஜினாமா செய்து அதன்முலம் வரும் பணத்தைக் கூட இயக்கத்தின் வளர்ச்சிக்கென்று கொடுத்தனர்.

இந்த சமயத்தில் CSI-யில்( தென் இந்திய திருச்சபையில் ஏற்பட்ட எழுப்புதலின் காரணமாக அனேக கிறிஸ்தவர்கள் இந்த இயக்கத்தில் சேரத் தெடங்கினர்.

1977-ஆண்டுவாக்கில் FMPB -தமது சுமார் நாற்பது ஆயிரம் செலவில் முதல் ஒலித் தகட்டை வெளியிட்டது. காலத்தால் அழியாத சிறந்த பாடல்களை சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் தந்தார்கள். இதில் வரும் பாடல் வரிகளான

"கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ய மேன்மைக்காய் கஷ்டப்பட்டவர்கள் நஷ்டப் பட்டதில்லை"

மற்றும்

"மந்தையில் சேரா ஆடுகளே எங்கிலும் கோடி உண்டே
சிந்தையில் ஆத்தும பாரம் கொண்டு சேருவோம் வரீர் திருசபையே"

இந்த பாடல்கள் இன்றும் கூட நம் சிந்தனையை தூண்டும் பாடலாக உள்ளது.

இந்த பாடல்கள் 70-80 களில் தமிழகத்தில் சபைகளில் எழுப்புதல்களை கொண்டு வந்தன. அந்த பாடல்கள் காலம் பல கடந்து இன்றும் சபைகளில் விரும்பி பாட படுகின்றன.

மிஷனெரிகளுக்காக எவ்வாறு ஜெபிக்கலாம்?

பொதுவாக போர்முனையில் முதல் வரிசையில் நிற்கும் வீரர்கள் மற்ற வீரர்களை விட அதிக கனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும.

பின்னால் நிற்க்கும் வீரர்கள் அவர்களை உற்ச்சாக படுத்தும் விதத்தில் செயல்பட்டால் தான் வெற்றி பெறமுடியும் .

எனவேதான் நமது இந்திய இராணுவம் கூட எல்லை பாதுகாப்பு படைக்கு அதிக முக்கியதும் கொடுத்து வருகிறது.

நமது தேவனின் பணியில் ஈடுபட்டுள்ள மிஷனெரிகளும் தினமும் பலதரப்பட்ட கனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

அவர்களுக்கு நம்முடைய ஜெபம்தான் ஒரு ஊக்கமான மருந்தாக அமையும். நம்மில் அனெகர் மிஷனெரி பணி குறித்து ஜெபிக்கும் போது குறிப்பாக ஜெபிப்பதில்லை.

பணிதளத்தில் அவர்கள் எவ்வாறு உள்ளனர்?, அவர்கள் இருக்கும் சுழ்நிலை எப்படிபட்டது?, என்று நாம் அறிந்து ஜெபிக்கு வேண்டும.

இந்த கட்டுரையில் களத்தில் முதல் வீரராக நிற்க்கும் நமது மிஷனெரிகளின் பலதரபட்ட ஜெபத் தேவைகளை கொடுத்துள்ளோம்.

1.கிறிஸ்துவைப் பற்றிய உண்மையைப் பேசுவதற்கு வேண்டிய தைரியத்துக்காகவும் ஞானத்துக்காகவும் ஜெபியுங்கள்.

சிலவேளைகளில், தங்களைச் சந்திப்பவர்களிடம் அவர்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசமுடியாதபடி (நாமெல்லாருக்கும் நிகழ்வதுபோல) மிஷனெரிகளை பயம் ஆட்கொண்டு தடுத்துவிடக்கூடும்.

ஜெபிக்கவும்:

வீரத்தனம் மற்றும் தைரியம்: தங்களைச் சற்றியுள்ளவர்களிடம் தங்கள் நம்பிக்கையைப்பற்றிப் பேச மிஷனெரிகள் பயப்படாமிலிருக்க ஜெபியுங்கள்
ஞானம்:

தேவன் ஆயத்தப்டுத்தியிருக்கும் மக்களை மிஷனெரிகள் அணுகவும், தங்கள் பேச்சில் கவனமாயிருக்கவும் ஞானம் கிடைக்க ஜெபியுங்கள்

கனிகள்: நற்செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்ளவும், மிஷனெரிகள் தங்கள் அயலகத்தார், நண்பர்கள் முதலியோருடைய வாழ்வில் தேவன் கிரியை செய்வதைப் பார்க்கும்படியாகவும் ஜெபியுங்கள்

2.ஆவியில் பலப்பட ஜெபியுங்கள்

சபை நிறுவப்படாத அநேக இடங்களில் மிஷனெரிகள் பணிபுரிகின்றனர். தங்கள் மதத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தாலும் மூடநம்பிக்கையிலும் நூதன கருத்திலும் மூழ்கிகிடக்கும் மக்களிடையே அவர்கள் ஊழியம் செய்கின்றனர்.

நற்செய்தியறிவிக்கும் வாய்ப்புகளைத் தேடும் பொழுது அவர்கள் ஆவிக்குரிய போராட்டத்தில் சிக்குகிறார்கள்.

ஜெபியுங்கள்

புத்துணர்ச்சி: வேதவசனங்கள் மூலம் தேவன் பேசி, தினமும் தன்னைப்பற்றியப் புதிய கருத்தைக் கற்றுக்கொடுக்கவும், அவர்களைத் தம் ஆவியினால் புதுப்பிக்கவும் ஜெபியுங்கள்.

சகிப்பும் மனபலமும்: சோதனைகளைச் சகிக்கவும் பிசாசின் தாக்குதலுக்கு எதிர்த்துநிற்கவும் தேவபலம் கிடைக்க ஜெபியுங்கள்

எதிர்ப்பு பெருகிவருவதைக் கண்டாலும் அவர்கள் நிலைத்துநின்று தங்கள் பணியில் தொடருவதற்கு வேண்டிய மனவுறுதிக்காக ஜெபியுங்கள் மகிழ்ச்சி:

சிருஷ்டிப்பிலும் தங்கள் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளிலும் தேவகிரியைக் கண்டு ஆவியானவர் அருளும் மகிழச்சியினால் அவர்கள் நிரப்பப்பட ஜெபியுங்கள்.

3.சக ஊழியர்களோடு கொணடுள்ள உறவுக்காக ஜெபியுங்கள்

ஊழியத்தில் குழுக்களே மையமாகும். கிறிஸ்துவுக்காக தங்கள் பகுதிகளில் ஒருங்கிணைந்து தாக்கத்தை ஏற்படுத்தும்படி, குழுக்களில் பணிபுரிய ஊழியர்களை அனுப்புவது அருட்பணித்தலைவர்களின் பொறுப்பாகும்.

தீர்மானங்கள் எடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் குழுத்தலைவர்களுக்கு ஞானம் தேவை.

ஜெபியுங்கள்

அருட்பணித்தலைவர்களுக்காக: குழுக்களுக்காக:

ஒருவருக்கொருவர் ஊழியம் செய்துகொண்டு ஒருமைப்பாட்டுடனும் அன்புடனும் இருக்க ஜெபியுங்கள்.

குழுத்தலைவர்களுக்காக: சீரியமுறையில் குழுஉறுப்பினர்களுடன் தகவல்தொடர்பு வைத்துக்கொள்ளவும், தீர்மானங்களை எடுப்பதிலும் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் தேவஞானம் கிடைக்கவும் ஜெபியுங்கள்

அலுவலகங்கள் இங்குள்ள குழுக்கள் கர்த்தரில் பலப்படுத்தப்படவும், ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தவும் ஜெபியுங்கள்.

4.மனதிலும் உடலிலும் பலப்பட ஜெபியுங்கள்:

தனிமையும், மாறுபட்ட கலாச்சாரமும் மனவெழுச்சி அழுத்தத்தை உண்டாக்குகின்றன.

மதம், கலாச்சாரம், சமூகம் மற்றும் அரசியல் வாழ்வை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் போது,சமூக அழுத்தம் அதிகமதிகமாகத் தோன்றலாம். உடல் நலத்துக்காகவும் உடல்பாதுகாப்புக்காகவும் ஜெபிக்க வேணடும்

ஜெபியுங்கள்

உடல்நலமும், பாதுகாப்பும்: தனிமையான சூழ்நிலையிலுள்ள மிஷனெரிகள் உடல்பலத்துடனும், நலத்துடனும், பாதுகாப்புடனும் இருக்கும்படியும், உபத்திரவம் வரும்போது அவர்களுக்குத தேவையான உதவி கிடைக்கும்படியும் ஜெபியுங்கள்

சமுதாய தேவைகள்: சமுதாய நிகழ்ச்சிகளில் தகுந்த ஞானத்தோடு அழைப்பை ஏற்று பங்கு கொள்ளவும், தக்க வேளையில் சரியான நிலை எடுக்கவும் ஜெபியுங்கள்

பிள்ளைகள்: மிஷனெரிகளின் பிள்ளைகள் உடல், மனவெழுச்சி மற்றும் ஆவிக்குரியரீதியில் பாதுகாக்கப்பட ஜெபியுங்கள்

ஆபத்துகள்: ஆபத்து நிறைந்த சூழ்நிலைகளில் மிஷனெரிகள் தேவசமாதானத்தையும், வல்லமையையும் ஞானத்தையும் பெற்றுக் கொள்ள ஜெபியுங்கள்

5. குடும்ப உறவுகளுக்காக ஜெபியுங்கள்

மிஷனெரிகள் தங்கள் குடும்பங்களுக்குள் நல்ல உறவைக் கட்டிக்காக்க வேண்டுவது அவர்கள் சாட்சி பகர்வதற்கு முக்கியமாகும்.

தனிமையோடு போராடும் தனி மிஷனெரிகளுக்காகவும்,தங்கள் குடுப்பங்களைப் பற்றிய நினைவுகளால் துன்புறுபவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.

தனிநபராக இருப்பதை அடிக்கடி சந்தேகிக்கும் ஒரு கலாச்சாரத்தில் இவர்களுடைய முன்மாதிரியும் வாழ்க்கைமுறையும் ஒரு தீவரசாட்சியாக விளங்க ஜெபியுங்கள்

ஜெபியுங்கள்

தகவல் தொடர்பு: மிஷனிரிகளின் குடும்ப உறவுகளுக்காக - அதில் அழுத்தங்கள் இருந்தாலும் ஒருவரையொருவர் பரிந்து கொண்டு ஒருவரோடொருவர் சீரான முறையில் தொடர்பு வைத்துக் கொள்ள - ஜெபியுங்கள்

தனிமிஷனெரிகளின் கவலைகள்: தனிமிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள் குடும்பத்தைப்பற்றிக் கவலைப்டுவர்களுக்காக, குடும்ப உறவினர்களின் நினைவால் வாடுபவர்களுக்காக, தனிமையுணர்வோடு போராடும் தனிமிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள்

நெருக்கிய உறவினர்கள்: நற்செய்திப்பணிக்காகப் பிரிந்து வந்துவிட்ட மிஷனெரிகளின் குடும்பங்களுக்காக ஜெபியுங்கள்.

குறிப்பாக, கிறிஸ்தவரல்லாத உறவினர்களையும், மிஷனெரிப் பணியைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் கவலைப்படும் குடும்பங்களையும் ஜெபித்தில் நினைவுகூருங்கள்.

6.மொழியைக் கற்றுக்கொண்டிருப்பவர்களுக்காக ஜெபியுங்கள்

நற்செய்தியை மக்களுக்குத் தெளிவாகச் சொல்வதற்காக, மிஷனெரிகள் அவர்கள் மொழியை நன்கு கற்கவேண்டியுள்ளது. மாநிலமொழியையும் அந்தந்தப் பகுதி வரிவடிவமில்லாத மொழியையும் கற்பது வாழ்நாள் முழுவதும் நடைபெற வேண்டிய ஒன்று.

ஜெபியுங்கள்

தொடர்புகள்: தங்கள் நண்பர்களுடன் நற்செய்தியைத் தெளிவாகப் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றபடி மிஷனெரிகள் அவர்கள் மொழியைக் கற்றுக் கொள்வதில் ஆர்வங்கொள்ளும்படி ஜெபியுங்கள்

நேரத்தை ஆதாயப்டுத்துதல்: மிஷனெரிகள் தங்கள் மொழித் திறமையை வளர்த்துக்கொள்ளத் தக்கமுறையில் அந்தந்தநாள் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்பட ஜெபியுங்கள்

குடும்ப வாழவு: குடும்பப் பொறுப்புகளுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ள மிஷனெரித் தம்பதியர்களுக்காக ஜெபியுங்கள்.

நண்பர்களுடன் தொடர்புவைத்துக் கொள்ளவும், மொழியைக் கற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு நேரம் கிடைக்க ஜெபியுங்கள்

மனவுறுதி: மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கும் மிஷனெரிகள் கடைசிவரை மனவுறுதியோடிருக்க ஜெபியுங்கள்

7. மக்களுக்காகவும் அவர்களுடைய மாநிலங்களுக்காவும் ஜெபியுங்கள்

புதுவிசுவாசிகள் தங்கள் குடும்பங்களிலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றனர்.

அவர்கள் உறுதியாய் நிலைத்திருக்க, சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவைப் பின்பற்றி தங்கள் விசுவாசத்தில் முதிர்ச்சி பெற்றவர்களாயிருக்க அவர்களுக்குத் தைரியம் இருக்க வேண்டும். அதிகாரத்திலுள்ளோர், நற்செய்தி இலகுவாகப் பரவுவதைத் தடைசெய்கிறார்கள்.

செய்தித்தாள்கள், பத்திரிக்கை கட்டுரைகள் மற்றும் தெலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்காவும் அவற்றின் தலைவர்களுக்காகவும் எவ்வாறு குறிப்பாக ஜெபிப்பது என்பதுபற்றிய கருத்துக்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜெபியுங்கள்

திறந்தமனங்கள்: கிறிஸ்துவைப்பற்றி அறியாதவர்கள் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் போதும், செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிகழச்சிகளைக் கானும்போதும், இணைதளத்தின் மூலம் தொடர்புகொள்ளும் போதும் அல்லது கிறிஸ்தவர்களைப்பற்றி அறியவரும் போதும் திறந்தமனதுடன் இருக்க ஜெபியுங்கள்

விசுவாசமும் தைரியமும்: நற்செய்தியைக் கேட்டவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விசுவாசமும் தைரியமும் கொள்ள ஜெபியுங்கள்

உள்ளூர் கிறிஸ்தவர்கள் தீவிர சீடர்களாக மாற உதவுபவர்களுக்கு ஞானம் கிடைக்க ஜெபியுங்கள்

வாய்ப்புகள் மாநிலங்களில் புதிய "வாசல்கள்" திறிக்கப்படவும அடைபட்டதுபோல் தோன்றும் இடங்களில் புது சுதந்திரத்திற்காகவும் ஜெபியுங்கள்

அதிகாரிகள் அதிகார்த்திலுள்ளோர் கிற்ஸ்துவ அருட்பணிகளைத் தடைசெய்யும் அரசுக்கொள்கைகளை உருவாக்காதபடி ஜெபியுங்கள்.

அதிகாரிகள் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய உண்மைகளுக்கத் திறந்தமனதுடன் இருக்கவும், மிஷனெரிகளுக்கு குடியிருப்பு அனுமதி முதலிவற்றை தடங்கலின்றி வழங்கவும் ஜெபியுங்கள். தேவையான இடங்களில் கர்த்தர் இடைபடவும் ஜெபியுங்கள்

இளம் இணைய-உலாவர் திட்டம்.

இன்று அனேக வியாபார ஊழியக்காரர்கள் பெருகிவிட்டார்கள். ஒவ்வொரு ஊழிக்காரர்களும் விதவிதமான் முறையில் வசூல்வேட்டை நடத்துகின்றனர்.

அதில் மிகவும் திறமை பெற்றவர்கள் யார் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. மத்திய தர குடும்பங்களில் தொலைக்காட்சி வந்தபின் இவர்களின் வளர்ச்சி இந்தியாவில் மிகஅதிகமாகி உள்ளது.

இப்போது இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது. இணையத்தை வைத்து வசூல் வேட்டை நடத்த நம்மவர்கள் தயாராகி வருகின்றனர். இது உங்களுக்கும் தெரிந்து இருக்கும்.

நாம் விரும்பியே விரும்பாமலோ அனேக மின்-அஞ்சல்கள் நம் அஞ்சல் பெட்டியில் வந்து குவிகின்றன.

இங்கு வருங்காலத்தில் இணையத்தை வைத்து Daily Sun மற்றும் Milk Daily Sun அவர்கள் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்த போகிறார்கள் என்பதை பற்றிய கற்பனை கட்டுரை.


இளம் இணைய-உலாவர் திட்டம்.

இந்த திட்டம் உங்கள் செல்ல குழந்தைகள் இணையத்தில் உலவரும் போது, அவர்கள் எந்த விதமான தேவையில்லாத தளத்தை பார்வையிடாமல் தடுக்க எங்கள் ஜெப வீரர்கள் "அருள்நாதரை" நோக்கி ஜெபித்து கொண்டே இருப்பார்கள்,

அந்த ஜெபவீரர்களின் ஜெபம் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு வேலிபோல் அரணாக காத்து கொள்ளும்.

மேலும் உங்கள் கணனியில் எந்த விதமான வைரஸ்களும் வராமல் தடுக்க எங்கள் ஜெப வீரகள் உங்களுக்காக 24 மணிநேரமும் ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள்.

மேலும் உங்கள் குழந்தைகள் Google மற்றும் Yahoo தேடு இயந்திரத்தை பயன்படுத்தி தேடும் போது தேடியவை சீக்கிரமாக கிடைக்க Daily Sun , Milk Daily Sun மற்றும் எங்கள் ஜெப வீரகள் ஜெபித்து கொண்டே இருப்பார்கள்.

(அடுத்த வரிகளை Milk Daily Sun பாணியில் வாசிக்கவும் )

ஆம், என் அன்பு சகோதர/சகோதிரிகளே இன்று தேவன் இதோ இந்த இணையத்தின் மூலம், இளம் இணைய-உலாவர் திட்டத்தில் இணைய சேர உங்களிடம் கேட்கிறார்.

இன்றும் அனேகர் இந்த திட்டதின் மூலம் தேவ ஆசீர்வாதங்களை பெற்று வருகின்றனர். உங்களுக்கு என்று தேவன் வைத்து இருக்கும் ஆசீர்வதாங்களை நீங்கள் இந்த இணைய திட்டதில் சேருவதனால் (மட்டும்) பெற்றக் கொள்ள முடியும்.

எனவே இணைவீர் இன்றே - இளம் இணைய-உலாவர் திட்டத்தில்,

சில சாட்சிகள்:-

அன்புள்ள Daily Sun மற்றும் Milk Daily Sun

நான் என் குழந்தைகள் இருவரையும் இளம் இணைய-உலாவர் திட்டத்தில் சேர்த்துள்ளேன். உங்கள் இருவரின் ஜெபம் மற்றும் ஜெபவீரர்களின் ஜெபத்தால என் குழந்தைகள் இணையத்தை சரியான முறையில் பயன் படுத்தி வருகின்றனர். உங்களின் ஜெபவிரர்கள் ஜெபத்திற்கு நன்றி.

அகஸ்டின், சென்னை


அன்புள்ள Daily Sun மற்றும் Milk Daily Sun


கடந்த மாதம் என் கணனியில் தீவிரமான வைரஸ் தாக்குதல் இருந்தது, அப்போது அதை Format-செய்ய நினைத்தேன், அப்படி Format செய்து வைரஸ் எல்லாம சென்றுவிட்டால் இளம் இணைய-உலாவர் திட்டத்தில் சேருவதாக பொருத்தனை செய்து கொண்டேன்.

அதன் பின் Format செய்தவுடன் வைரஸ் எல்லாம் போகிவிட்டது. இப்போது முன்புபோல் என்னால் இணையத்தில் உலவ முடிகிறது. நான் பொருத்தனை செய்து கொண்டபடி இளம் இணைய-உலாவர் திட்டத்திற்காக 10000 அனுப்பி உள்ளேன். நன்றி.

சாந்தி, திருச்சி


அன்புள்ள Daily Sun மற்றும் Milk Daily Sun

நான் கடந்த மாதம் என் அலுவலகத்தில் வேலை பார்துக்கொண்டு இருந்த போது Milk Daily Sun அவர்கள் எனக்கு பெயர் செல்லி அழைத்த மின்-அஞ்சல் அனுப்பி இருந்தார். இது என்னை மிகவும் பரவசத்தில் ஆழ்த்தியது.

இது கனவா அல்லது நினைவா என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். பின்னர் என் Project Leader வந்து என்னை திட்டிய பின்புதான் எனக்கு சுயநினைவு வந்தது.

எனவே எனக்கு பெயர் செல்லி அழைத்த மின்-அஞ்சல் அனுப்பி வைத்ததால் இளம் இணைய-உலாவர் திட்டத்தில் சேர்நது இன்னும் இது போல் பல மின்-அஞ்சலை பெற விரும்புகிறேன்.

அசோக்,- பெங்களூர்.

அன்புள்ள Daily Sun மற்றும் Milk Daily Sun

நான் கடந்த மாதம் என்னுடைய அலுவலக Project க்காக Googleலில் Code தேடிக்கொண்டு இருந்தேன், நிறைய நேரம் செலவிட்டும் Code கிடைக்கவில்லை,

பின்னர் நான் Code- கிடைத்தால் இளம் இணைய-உலாவர் திட்டத்தில் சேருவதாக பொருத்தனை செய்து கொண்டேன். சில மணி துளிகளுக்குள் நான் தேடிய அந்த 3 Line code(!!!!!!) கிடைத்தது. எனவே நான் இளம் இணைய-உலாவர் திட்டத்தில் சேர விரும்பி 5000 அனுப்பி உள்ளேன்.


சாம் , சென்னை.

ஆம், என் அன்பு நெஞ்சங்களே இதுபோல் பல சாட்சிகள் இளம் இணைய-உலாவர் திட்டத்தை குறித்து உள்ளன. அதை எல்லாம் எழுதினால் சுமார் 5 MB Size உள்ள File-லாக வரும். எனவே இணைவீர் இன்றே - இளம் இணைய-உலாவர் திட்டத்தில்.

- யாரு கண்டது விரைவில் இது போல் ஒரு திட்டம் வந்தாலும் வரலாம். படித்து விட்டு கிழே உங்கள் கருத்தை முடிந்தால கூறுங்கள்.

தமிழின் முதல் அச்சு புத்தகம்

ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே.

சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து...

என்ன, படித்துவிட்டீர்களா? தமிழின் முதல் புத்தகத்தின் சில வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் நீங்கள். தமிழின் முதல் அச்சு நூலுக்கு 450 வயது ஆகிவிட்டது.

எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் எழுதி வந்த காலகட்டத்தில், இந்திய மொழிகளியே தமிழில்தான் முதல் அச்சு நூல் வெளியானது. அதன் பெயர் கார்டிலா! இது உண்மையிலேயே தமிழுக்கும் தமிழர்களும் பெருமை தருகிற விஷயமாகும்.

இந்தியாவில், கோவாவில் 1556-ல் முதல் அச்சகம் ஏற்படுத்தப்பட்ட போதிலும்கூட, அங்கு லத்தீன் மொழியிலும் போர்த்துக்கீசிய மொழியிலும் மட்டுமே முதலில் வெளியீடுகள் வரத் தொடங்கின.

கொல்லத்தில் தமிழ் அச்சு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு, 1578-ல் வெளியான தம்பிரான் வணக்கம் என்ற நூலே தமிழ் அச்சு எழுத்துக்களுடன் உருவான முதல் நூலாகக் கருதப்படுகிறது.

ஆனால், இந்தியாவுக்கு அச்சு இயந்திரம் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 1554-ல் லிஸ்பன் நகரில் கார்டிலா என்ற ஒரு தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட் டுள்ளது என்ற செய்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும்.

‘‘தமிழ் அச்சு எழுத்துக்கள் உருவாக்கப்படாத அந்தக் காலத்திலேயே அந்தப் புத்தகம் தமிழ் ஒலியுடன் வாசிப்பதற்கு ஏற்ப ரோமன் எழுத்து வரி வடிவில் வெளியாகியுள்ளது.

கார்டிலா என்கிற லூசோ சமய வினா விடை என்ற இந்த நூல் 38 பக்கங்கள் கொண்டது.

தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத, ஆனால் போர்ச்சுகீசிய மொழி தெரிந்த கிறிஸ்துவப் பாதிரி யார்களுக்கு உதவும் வகையில் தமிழ் உச்சரிப்பில் வேத வாசகங்களைக் கூறுவதற்காக உருவாக்கப்பட்ட நூல் இது.

போர்ச்சுகீசிய அரசர் மூன்றாவது ஜான் உத்தரவின்பேரில் அச்சிடப்பட்ட இந்த நூலை உருவாக்குவதற்கு முத்துக்குளித்துறை என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியிலிருந்து வின்சென்ட் நாசரேத், ஜோஜ் காவல்கோ, தாமஸ் குரூஸ் ஆகிய மூன்று பேர் லிஸ்பன் நகருக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் முயற்சியில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அன்றைய இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நன்கு சுற்றிப் பார்த்து அறிந்திருந்த பாதிரியார் ஜோன்வில்லா கோண்டி என்பவரின் மேற்பார்வையில் இந்நூல் தயாராகியுள்ளது’’ என்கிறார்கள் இந்த முதல் அச்சு நூல் பற்றித் தகவல் தெரிந்த சிலர்.

அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட அந்தத் தொடக்க கால கட்டத்திலேயே இந்த நூல் இரு வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

கறுப்பு வண்ணத்தில் சற்றுப் பெரிய வடிவில் ரோமன் எழுத்துக்களில் தமிழ் வாசகங்கள் உள்ளன.

அதன்மேல் பகுதியில் சிவப்பு வண்ணத்தில், ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் சரியான போர்ச்சுகீசிய சொல் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஒலி வடிவில் உள்ள ரோமன் எழுத்துக்களின் கீழே கறுப்பு வண்ணத்தில் போர்ச்சுகீசிய மொழியில் தமிழ் வாசகங்களின் உச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘‘இவ்வாறு கற்பிக்கும் புது முறைகளையும், இரு நிறங்களையும் திறமையான எழுத்துக்களையும் கொண்ட நூலை ஐரோப்பிய அச்சக வரலாற்றிலேயே காண்பது அரிது’’ என்கிறார் தனிநாயகம் அடிகள்

(உலகத் தமிழ் மாநாடுகள் நடப்ப தற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் இவர்).

தமிழின் முதல் அச்சு நூலையும் அதன் முக்கியத்துவத்தையும் கண்டறிந்த பெருமை இவருக்கு உண்டு.

தற்போது இந்த நூலின் ஒரே ஒரு மூலப் பிரதிதான் உள்ளது. அது, லிஸ்பனை அடுத்து உள்ள பெலெம் நகரில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளது.

ஆய்வுப் பணிகளுக்காக 1954&-ல் இந்த அருங்காட்சியகத்துக்குச் சென்ற தனிநாயகம் அடிகள் இந்த நூலைக் கண்டறிந்து, அதன் இரு பக்கங்களின் புகைப்படப் பிரதியைக் கொண்டு வந்தார்.

தமிழின் முதல் அச்சு நூல்கள் பற்றிய விரிவான கட்டுரையை தமிழ் கல்ச்சர் என்ற ஆங்கில இதழில் எழுதினார்.

தமிழில் வெளியான முதல் அச்சு நூல்களை ஆய்வுரையுடன் மறு பிரசுரம் செய்ததில் மறைந்த ஏசு சபை பாதிரியார் ச. ராஜ மாணிக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

லிஸ்பனில் வெளியிடப்பட்ட கார்டிலா மறுபிரசுர பிரதிகளை தமிழகத்துக்குக் கொண்டு வந்தவரும் அவரே.

‘‘தமிழின் அச்சு நூல் வரலாறு கார்டிலாவிலிருந்து தொடங்குகிறது. அந்த அரிய வரலாற்றை காலக் கறையான்கள் அரிக்கும்படி விட்டுவிடக் கூடாது’’ என்கிறார்கள் தமிழறிஞர்கள் ஆதங்கத்தோடு.

நியாயம்தான்! தமிழை செம்மொழியாக அறிவித்து, தமிழ்ப் பெருமை பேசும் இந்தக் கால கட்டத்தில் தமிழுக்குச் செய்ய வேண்டிய முக்கியப் பணி, கார்டிலா போன்ற தொடக்ககால தமிழ் அச்சு நூல்களை -உடனடியாகச் சேகரித்து, ஆய்வுரையுடன் மீண்டும் மறுபதிப்பு செய்வதுதான்!

தம்பிரான் வணக்கம்!

தமிழ் அச்சு எழுத்துக்களுடன் முதன்முதலில் வெளியிடப்பட்ட ‘தம்பிரான் வணக்கம்’ 1578-ல் கொல் லத்தில் வெளியானது.

இதை தமிழில் மொழிபெயர்த்தவர் தமிழ் அச்சு நூலின் தந்தை எனப் போற்றப்படும் ஹென்றிக்ஸ் பாதிரியார்.

தூத்துக்குடி பகுதியில் உள்ள மீனவர்கள் அளித்த நன்கொடையினாலேயே முதல் தமிழ் அச்சு நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை அவரே நன்றியுடன் கூறியுள்ளார்!