வெள்ளி, 15 மே, 2009

இஸ்லாம் - அல்லா

இஸ்லாமியர்கள் கூறுவது போல: அல்லாவும் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள கடவுளும் ஒன்று+ஆ?

ஏன் இஸ்ரவேலர்களும், கிறிஸ்தவர்களும் முகமது நபியையும், குர்-ஆனையும் தள்ளி வைத்தனர். என்ன காரணத்தினால் அவர்கள் தள்ளி வைத்தனர்? சிறிது ஆராய்வோம்.

யெகோவா தேவனிடம் இல்லாத அல்லாவின் சில தன்மைகள்:

அல்லா மிகப்பெரிய சதிகாரன்

ஸீரா 3: 54 (குர்- ஆன்)

ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத் திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் (செல்லப்பெயர்: Bhagdad Bob) அவர் தன்னுடைய பேச்சிலே குறிப்பிட்டிருந்தார், அல்லா எல்லாரை விடவும் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் என்று. இதனுடைய அர்த்தம் என்ன ?

ஸீரா 3: 54 சொல்கிறது அல்லா சூழ்ச்சிக்காரன் என்று. அரபிய மொழியில் Makara என்று எழுதப்பட்டிருக்கின்றது. Makara எனும் அரபிய வார்த்தைக்கு சூழ்ச்சி, தந்திரம் அல்லது சதி என்று பொருள்படும்.

இதே Makara எனும் அராபிய வசனம் பரிசுத்த வேதகமத்தில் சாத்தானுக்கு பாவிக்கப்படுகின்றது (ஆதியாகமம் 3:1)

காலிப் அபு பக்ர் ஒரு தடவை சொன்னார், அல்லாவினுடைய சூழ்ச்சியின் சக்திக்கு தான் அஞ்சுவதாக.

ஸீரா 8: 30 (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக.

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

ஸீரா 10: 21 மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது

'திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும் நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சதி, சூழ்ச்சி, தந்திரம் இப்படிப்பட்ட தன்மைகளை உடையவர் இல்லை எங்கள் யெகோவா தேவன்.

சத்தியம் செய்தல்

யெகோவா தேவனுக்கும், அல்லாவிற்கும் இடையிலுள்ள இன்னுமொரு பெரிய வித்தியாசம் என்னவென்றால்: யெகோவா தேவன் தம்மேல் (அவர் மேல்) மட்டும் தான் சத்தியம் செய்வார்.

அவர் தம்மேல் மாத்திரம் சத்தியம் செய்வதற்கான காரணம்: சத்தியம் செய்வதற்கு அவரைவிட பெரியவர் யாருமில்லை என்பதனால்.

எபிரேயர் 6:13 ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:

ஏசாயா 45:23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன், இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது, இது மாறுவது இல்லையென்கிறார்.

எரேமியா 22:5 நீங்கள் இந்த ர்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறாh

ஆனால் குர்-ஆன் கூறும் அல்லா தன்னைவிட சிறிய எல்லாவற்றின் மீதும் சத்தியம் பண்ணுகிறார்.

வானத்தின் பேரில் சத்தியம் குர்-ஆன் 86: 1 வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக 74:32 (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.

74:33 இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

74:34 விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,

53:1 விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

எழுதும் எழுதுகோலின்மீது சத்தியம்
68:1 நூன்- எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!


நகரத்தின் மீது சத்தியம்
90:1 இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.


படைப்புக்களின் மீது சத்தியம்
92:1 (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

92:2 பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

92:3 ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-


அல்லா எல்லாவற்றின் மேலும் சத்தியம் பண்ணுகின்றார், ஆனால் யெகோவா தேவன் தம்மீது மாத்திரம் சத்தியம் செய்கின்றார்.

இப்படியிருக்கையில் இருவரும் ஒன்று என்று சொல்வது "பொருந்தவில்லை".

தவறான கனவை காட்டும் அல்லா

குர்-ஆன் 8:43 (நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக!

எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான் நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.

8:44 நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான் இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் -

இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.

முகமது நபியினுடைய கனவில் அல்லா பொய்யான காட்சியை காண்பிக்கின்றார். ஏனென்றால் போரில் எதிரிகள் அதிகமாக இருக்கின்றபடியால், எதிரிகளுக்கு முஸ்லிம்கள் பயந்து போரை நிறுத்திவிடுவார்கள் என்பதனால்.

வசதியானவர்களுக்கு மட்டும் அல்லாவின் கண்களில் தயவு

17:16 நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம். ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள்.

அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.

வசதியில்லாதவர்கள் ? ஏழைகள் ? அவர்களுக்கு நேர்வழியை பின்பற்ற வேண்டுமென்று அல்லா சொல்ல மாட்டாரோ ?

கடவுளுடைய பெயர்கள்

வேதாகமத்தில் - எபிரேய மொழியில்

எலோகிம் (கர்த்தர்) 2550 அல்லா(கடவுள்)
அடோனாய்(தேவன்) 340 ராப்(தேவன்)
யெகோவா(இருக்கின்றவராக இருக்கிறேன்) 6823 எதுவுமில்லை

பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளுடைய எந்தப்பெயரும் ஏன் குர்-ஆனில் குறிப்பிடப்படவில்லை. ஏன்? குர்-ஆன் சொல்கின்றது மோசேக்கு தேவன் வேதத்தை அருளினார் என்று,

அப்படியானால் குறைந்தபட்சம் யெகோவா (இருக்கிறவராக இருக்கின்றேன்) என்கின்ற பெயராவது குர்-ஆன் இல் குறிப்பிடப்பட்டிருக்கலாமே? ஏன் குறிப்பிடப்படவில்லை?

அல்லா என்றால் அரபு மொழியில் கடவுள் என்று அர்த்தம். எந்தக்கடவுளைப்பற்றி முகமது குர்-ஆனில் குறிப்பிட்டிருக்கின்றார்?

நிச்சயமாகத்தெரியும் வேதாகமத்தில் அல்லாத ஒரு கடவுளை என்று. காரணம் வேதாகமத்தில் உள்ள கடவுளுடைய எந்தப்பெயரும் குர்-ஆனில் குறிப்பிடப்படவில்லை என்பது தான்.

குர்-ஆனை மட்டும் முகமது நபி உருவாக்கவில்லை, ஒரு புதிய கடவுளையும் குர்-ஆனோடு அறிமுகப்படுத்தியிருக்கின்றான்.

நான் நினைக்கின்றேன் இப்படிப்பட்ட குணாதிசயங்களை உடைய அல்லாவிற்கும், யூதர்களும், கிறிஸ்தவர்களும் வணங்கும் யெகோவா தேவனிற்கும் அநேக வேற்றுமை இருப்பதால்- அன்றும், இன்றும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் முகமதுவையும், அல்லாவையும், குர்-ஆனையும் தள்ளிவைத்தனர் என்று.

கருத்துகள் இல்லை: